முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவின்மலரின் பிழைப்பு வாதம்...!



கத்துக்குட்டி கவின்மலரின் பிழைப்பு வாதம்...!



கத்துக்குட்டியின் புகைப்படம்

ம் அலுவலகத்திற்கு திடீரென்று வருகை தந்த கழுகார், ஒரு செய்தி சொல்கிறேன்,செய்தி பழையது என்று நினைக்காதீரும்.ஆனா இப்ப வரைக்கும் அப்டேட் இருக்கு என்றார்.

சொல்லும் என்றோம்.

"ஆனால் ஒரு நிபந்தனை.கடைசி வரைக்கும் குறுக்கே பேசக் கூடாது.யார் என்று பெயரையும் கேட்கக் கூடாது" என்றார்.

சரி என்று ஒப்புக் கொண்டு காதைக் கொடுத்தோம்.

இனி கழுகார் வார்த்தைகளில்...

'நாட்டில் நிறைய பேர் ஸ்டாலின்,மார்க்ஸ்,பிரபாகரன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.நாம் இப்பொழுது பேசுவ‌து புரட்சியாளர் பெயரை வைத்துள்ள‌ ஒரு பத்திரிகையாளர் பற்றி.

இதில் சம்பந்தப் பட்ட பத்திரிகையாளர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.இவருக்கு இவரது தந்தையார் ரஷ்யப் புரட்சியாளர் பெயரைப் பெருமையுடன் சூட்டினார்.(ஆனால் யார் நினைவாய்ப் பெயர் சூட்டப் பட்டதோ,அவர் புரட்சியாளர் கிடையாது,தீவிரவாதி என்று பத்திரிகையாளர் இப்பொழுது உளற ஆரம்பித்துள்ள‌து தனி செய்தி)

அவர் அண்ணா சாலை 'மலர்' நாளிதழிலும் அதன் பின் அம்பத்தூரில் இருந்து வெளிவரும் தினமும் ஒலிக்கும் 'மணி'யான நாளிதழிலும் வேலை பார்த்தார்.
அதற்குப் பின் அண்ணா சாலையில் இருந்து வார இதழ்,வாரமிருமுறை இதழ்,மாதமிருமுறை என பல இதழ்களை வெளியிட்டு வரும் பாரம்பரியமிக்க குழுமம் என்று சொல்லிக் கொள்ளும் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மகிழ்ச்சி கோமாளி வார இதழில் மூத்த நிருபராய் வேலைக்குச் சேர்ந்தார்.அவரை விருப்பப் பட்டு வேலைக்குச் சேர்த்தது அதன் ஆசிரியர் தான்.அப்பொழுது ஆசிரியராய் இருந்தவர் தான் இப்பொழுது அந்தப் பத்திரிகையின் வெளியீட்டாளரும் கூட.

இனி விஷயத்தைக் கேளும்.

இவர் அங்கு வேலையில் சேர்க்கப்பட்ட‌ பொழுது அந்த‌ இதழில் பணியாற்றிய மற்ற‌வர்களை ஒப்பிடும் பொழுது இவருக்கு ஓரளவுக்கு நல்ல சம்பளம் தான் கொடுக்கப்பட்டது.

அதைப் போல ஆசிரியரும் இவருக்கு அதிக முக்கியத்துவ‌ம் அளித்து வந்தார்.இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் பேட்டியை இவர் நேரே சென்று எடுத்தது போல பில்ட் அப் கொடுத்த‌ பொழுதும் கண்டு கொள்ள‌வில்லை.

இந்த நிலையில்,கல்வி வியாபாரி,புதிய தலைமுறை தொலைக்காட்சியை அடுத்து இரண்டாவ‌தாக ஆரம்பித்த சேனலில் வேலைக்குச் சேர்ந்த அனைவருக்கும் நல்ல சம்பளம் கிடைக்கவே இவருக்கும் ஆசை துளிர் விட்டது.தானும் வேலைக்குச் சேர்ந்தால் என்னவென்று !

ஆகவே இவரும் வேலைக்கு விண்ணப்பம் அனுப்பினார்.

விஜய் டிவியின் நீயா நானா? நிகழ்ச்சியைப் போல ஒரு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராய் பணியாற்ற அவர்களுக்கும் ஆள் தேவைப்பட்டது.

அதற்காய் கணிசமான‌ சம்பளத்தைக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டனர்.அது இவருக்குக் குறைவாகப் பட்டது.நாம் எவ்வளவு திறமைசாலி? நமக்கு இவ்வளவு சம்பளம் தானா ?என்று யோசித்தவர் அங்கு பேரம் பேசிக் கொண்டிருந்தார்.ஆனால் அவர்களோ இதுக்கு மேல சரி வராது என்று நினைத்து பதில் எதுவும் சொல்லவில்லை.

இப்படி வைத்துக் கொள்வோமே.//

கல்வி வியாபாரியின் நிர்வாகம் கொடுக்க ஒப்புக் கொண்ட சம்பளம் தோராயமாய் 60000 என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் இவர் இன்னும் கூடுதலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.ஆனால் கிடைக்கும் வாய்ப்பு குறைவாய் இருந்தது.

இந்த நிலையில் இவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த இதழ் ஆசிரியருக்கு இவர் வேறு நிறுவனத்திற்கு வேலைக்குச் சேர முயற்சித்தது தெரிய வந்தது.அவர் பத்திரிகையாளரை அழைத்துப் பேசினார்.சம்பளம் உயர்த்தித் தருவதாக சொன்னார்.பத்திரிகையாளர் யோசித்தார்.

ஆசிரியர் உடனே அடுத்த ஒரு உத்தரவாதம் அளித்தார்.குழுமத்தில் இருந்து வெளிவரும் மருத்துவ வி..ன் இதழுக்கு பொறுப்பாசிரியர் பதவி மற்றும் சம்பள உயர்வு என்று இரண்டு உறுதிமொழிகள் அளித்தார்.
இது பத்திரிகையாள‌ருக்கு பிடித்திருந்தது,அல்லது பிடித்த மாதிரி நடித்தார்.

"சார் இப்ப சொல்வீங்க,அப்புறம் மேனேஜ்மெண்ட்ல லேட் பண்றாங்க அப்படின்னு என்னை காக்க வச்சுடுவீங்க சார்" என்று அடுத்த முள்ளை வீசினார்.

ஆசிரியர்,"நீங்க சரின்னு சொல்லுங்க,மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்,அதுக்குப் பிறகு நீங்க டெஸிஷன் எடுங்க" என்று சொன்னார்.

சமஸ்தானத்தின் பெயரில் பாதியைக் கொண்ட பத்திரிகையாளரும் சரி என்று சம்மதித்தார்.

ஆசிரியரும் சொன்னபடி ரெண்டு நாளில் மருத்துவ வி..ன் பொறுப்பாசிரியர் நியமன உத்தரவையும்,அதனுடன் கூடுதல் சம்பளத்தையும் நிர்ணயித்து முதலாளியின் ஒப்புதலுடன்  உத்தரவை வாங்கிக் கொடுத்தார்.

"அதுக்குப் பொறுப்பாசிரியர் ஆகிட்டாலும் இதுலயும் முன்பு போல எழுதிக்கிட்டேயிருங்க" என்றார்.

சரி என்று தலையாட்டினார்.



இனி தான் அரசியல் ஆரம்பம்.....

கடிதத்தை வாங்கிய கையோடு ஏற்கனவே கல்வி வியாபாரியின் 'புது யுகம்' சேனலுடன் சம்பளம் பேசிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்,அங்கு சென்றார்,அவர்களிடம் விட்ட இடத்தில் இருந்து சம்பளத்தைப் பேரம் பேசத் தொடங்கினார். தான் ம.விகடன் பொறுப்பாசிரியராய் நியமிக்கப் பட்டிருப்பதாகவும்,சம்பளமும் முன்பை விட அதிகம் என்றும்,ஆகவே தான் கோரிய படி அதிக சம்பளம் கொடுத்தால் தான் தன்னால் வர முடியும் என்றும் பேரத்தை மீண்டும் ஆரம்பித்தார்.

கல்வி வியாபாரி அலுவலகத்தில் இருந்தவர்களும்,இவர் முன்பைப் போல தலைமை நிருபர் கிடையாது,ஒரு பத்திரிகையின் பொறுப்பாசிரியர்.பொறுப்பாசிரியரையே வேலைக்கு எடுக்கப் போகிறோம்.அதனால் இவருக்கு முன்பு அளித்த சம்பளத்தை விட அதிகச் சம்பளத்தைக் கொடுக்க நிர்வாகத்துடன் பேசிய பின் (ரூ.75000 என்று வைத்துக் கொள்வோம்) ஒப்புக் கொண்டது.

உடனே அவர்கள் கொடுத்த வேலை நியமன உத்தரவை வாங்கிக் கொண்டு அண்ணாசாலை கோமாளி அலுவலகத்திற்கு வந்தார்.தனது ராஜினாமா கடிதத்தை தாமதமின்றி சமர்ப்பித்தார்.

ஆசிரியருக்கு மிகுந்த அவமானமாகப் போய் விட்டது.

இவரைப் பணியில் தக்க வைக்க,ஒரே நாளில் புதிய பணி மற்றும் உயர்வு,சம்பள உயர்வை வாங்கித் தந்த ஆசிரியர் கடுப்பானார்.ஒரு நாளிதழில் பணியாற்றியவரை இங்கு அழைத்து வந்து அதன் பின் அவர் வெளியேற நினைக்கிறார் என்ற‌வுடன் தனது சக பத்திரிகையில் பொறுப்பாசிரியர் பதவியையும் ஒரே நாளில் வாங்கிக் கொடுத்த தனக்கு துரோகம் இழைத்து விட்டதாய் உணர்ந்தார். புதிய நிறுவனத்தில் தான் வேலைக்குச் சேரப்போகிறேன் என்று முடிவு செய்து விட்டால் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம்,ஆனால் தன்னைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி அவர் விரும்பிய சம்பளத்தை வாங்க உபயோகப் படுத்தியதாய் நினைத்தார்.

ஆசிரியர் விரும்பிய படி பொறுப்பாசிரியராய் நியமித்த நிர்வாகமும் ஆசிரியர் மீது வருத்தம் கொண்டது.தவறான நபருக்கு பரிந்துரை செய்து விட்டதாய் எண்ணியது.பத்திரிகையாளர் தனக்கு நல்ல பாடம் கற்பித்து விட்டதாய் ஆசிரியர் புலம்பினார்.

 ஆனால் நம்ம பத்திரிகையாளரோ எது குறித்தும் கவலைப் படவில்லை.வேலையை விட்டு விலகும் பொழுது தனது பிளாக்கில்  ஒரு பதிவு எழுதி அதில் ஆசிரியருக்கு சிறப்பாய் 'நன்றியும்' தெரிவித்திருந்தார்.ஆசிரியரை உபயோகப்படுத்திக் கொண்டு வேலையை விட்டு விலகினாலும்,அவ்வளவு பெரிய 'பரந்த'மனதின் ஒரு ஓரத்தில் தான் செய்தது தவறு என்று சின்னதாய்த் தோன்றியது.அதனால் ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்க முயற்சித்தார்.

இதில் இன்னொரு காரணமும் இருக்கிறது. ஊடகத்தில் இருப்பவர்களைப் பகைக்க கூடாது என்பதும் ஒரு பாலிசி.இன்றில்லா விட்டாலும் நாளை ஆசிரியர் இன்னொருமுறை தனக்கு உதவுவார்(!) என்ற ஒரு பிசினஸ் கணக்குத் தான்.

ஆசிரியருக்குத் தொடர்ச்சியாய் குறுஞ்செய்தி அனுப்பினார்.பதில் இல்லை.போனில் அழைத்தார் அதற்கும் பதில் இல்லை.மின்னஞ்சல் அனுப்பினார்,பதில் இல்லைஆசிரியர் இவரை மன்னிக்கவும் மறக்கவும் தயார் இல்லை.
இவரது நம்பரை தொலைபேசியில் பார்த்தாலே கடுப்பானார்.

அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்

கல்வி வியாபாரியின் சேனலில் கொஞ்ச நாள் வேலை பார்த்த பத்திரிகையாளரை அடுத்து ஒரு நிர்வாகம் அழைத்தது.

மவுண்ட் ரோடு ஆங்கில பத்திரிகை நிர்வாகம்,புதியதாய் தொடங்கிய தமிழ் பத்திரிகைக்கு ஆள் எடுத்தது.அங்கிருந்து பத்திரிகையாளருக்கு அழைப்பு வந்தது.

பழைய இடத்தை விட சம்பளம் மிக உயர்வு என்று சொல்லப்பட்டது.

உடனே யோசிக்காமல்,நம்ம பத்திரிகையாளர் அங்கு வேலைக்குச் சேர்ந்தார்.

இந்த நேரத்தில் அவருக்குத் தனது பழைய அண்ணா சாலை பத்திரிகை ஆசிரியரை காயப்படுத்தியது நினைவுக்கு வந்தது.அவரைச் சமாதானப் படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்ததாய் நினைத்து ஒரு செய்தியை அனுப்பினார்.

"சார்,உங்களின் ஆசிர்வாதத்தால் நான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்.நான் சமீபத்தில் காமதேனு நாளிதழில் வேலைக்குச் சேர்ந்து விட்டேன்.

இன்னொரு மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால்,இந்த பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பு ஏற்கத் தகுதியான 3 பெயர்களை என்னுடைய கருத்தாக‌ நிர்வாகத்தில் கேட்டார்கள்.நான் சொன்ன ஒரே பெயர் உங்களின் பெயர் தான்.உங்களைத் தவிர தலைமை தாங்கும் தகுதி யாருக்கும் இல்லை என்று சொன்னேன்"என்ற ரீதியில் ஒரு செய்தியை அனுப்பி விட்டார்.

பத்திரிகையாளர் என்ன நினைத்தார் என்றால்,இதைப் பார்த்தவுடன் நம் பழைய ஆசிரியர் கூல் ஆகி விடுவார்,நாம் செய்தவற்றை மறந்து விடுவார்,நம்முடன் உறவைப் புதுப்பிப்பார் என்று நினைத்துச் செய்தார்.

ஆனால் இதைப் பார்த்த ஆசிரியர் முன்பை விட இன்னும் அதிகக் கடுப்பாகி விட்டார்.சுள்ளான்,'நான் இவனை வேலைக்குச் சேர்த்தேன்.ஆனா என்னை, இவன் எடிட்டருக்கு ரெகமண்ட் பண்றானா"? என்று உச்சபட்ச எரிச்சலில்,இனி எனக்கு எந்தச் செய்தியும் அனுப்பாதே என்று செய்தி அனுப்பித் துண்டித்து விட்டார் ஒரேயடியாக.

என்னடா இவ்வளவு நாள் பதில் எதுவும் போடாமல் இருந்தவரை இப்படி இன்னும் கடுப்பேத்தி விட்டோமே என்று நினைத்த பத்திரிகையாளர் அடுத்த சந்தர்ப்பத்திற்காய் காத்துக் கிடக்கிறார்.

இனி ஆண்டி கிளைமாக்ஸ்...

காமதேனுவின் தமிழ் நாளிதழுக்கு பழைய ஆசிரியரை நியமிப்பது தான் சரி என்று குறுஞ்செய்தியில் சொன்னாரல்லவா..//

பத்திரிகையாளரின் கெட்ட நேரம் மவுண்ட் ரோடு புதிய தமிழ் பத்திரிகையின் ஆசிரியர் பதவிக்கு அவர் முன்பு வேலை பார்த்த வேலை பார்த்த வாராந்திர பத்திரிகையின் பதிப்பாளரும்,அதன் பழைய ஆசிரியரைப் பிடிக்காதவருமான கலிங்க மன்னரின் பெயர் கொண்டவர் வந்து விட்டார்.

இவ்வளவு நேரம் கழுகார் சொன்ன செய்தியை எதுவுமே சொல்லாமல் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்த நாம் அதிர்ச்சி ஆகி விட்டோம்.

அய்யய்யோ,அப்புறம் என்னாச்சு,நம்ம கில்லாடி ரிப்போர்ட்டருக்கு வேலை போயிடுச்சா ? என்று அதிர்ச்சியில் கேட்டோம்.

கழுகார் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.போய்யா உன்னை மாதிரி பிழைக்கத் தெரியாத ஆளா அவரு ?ஜெகஜ்ஜாலக் கில்லாடிய்யா...சொந்த ஊரு  மன்னார்குடி வேற ! சொல்லியா கொடுக்கணும்...

அப்படியா எப்படித் தப்பிச்சார்..?

புதியதாய் வந்த மன்னர் பெயர் கொண்டவரிடம்,"சார் நீங்க தான் இந்தப் பத்திரிகைக்குத் தலைமை ஏற்கத் தகுதியான ஆளுன்னு எல்லோர் கிட்டயும் சொல்லிக் கிட்டிருந்தேன்.நான் சொன்ன மாதிரியே நீங்களும் வந்துட்டீங்க சார்,உங்களுக்கு உதவியா நான் எப்பவும் இருப்பேன் சார்" என்று பிளேட்டைத் திருப்பிப் போட்டு வாழ்த்துச் சொல்லித் தன் இடத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.அது மட்டுமல்லாது இன்று அங்கு வேலையில் சேர்பவர்கள் அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்.

நாம் ஆச்சரியத்தில் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தோம்.

முதலாளிகளை விட 'ராஜதந்திரம்' மிக்கவர்கள் எல்லாம் இத்துறையில் இருப்பதையும் அவர்கள் நன்கு பிழைப்பதையும் நினைத்துக் கொண்டோம்.

இதைச் சொல்லிக் கிளம்பத் தயாரான கழுகாரை,நிறுத்தினோம்.

இந்தச் செய்தி சுவராசியமாய் இருக்கு.ஆனால் பதிவோட‌ தலைப்புக்குத் தோதா மேட்டர் இல்லையே   ! என்று இடை மறித்தோம்.

கத்துக்குட்டி மேட்டர் சொல்ற அளவுக்கு நம்ம லெவல் குறைந்து போகலை.வேணுமின்னா ஆபிஸ் பையனைக் கூப்பிட்டுக் கேளு.அவன் தான் இதைச் சொல்லத் தகுதியான ஆளு என்று சொல்லிக் கிளம்பினார்.

நாம் ஆபிஸ் பையனைப் பார்த்தோம்.இனி ஆபிஸ் பையன் எழுத்தில் இந்தப் பதிவின் இரண்டாம் பகுதி.
* * *

ழுகார் மேலே சொன்ன செய்தியானது, பத்திரிகை அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை.ஒரு கில்லாடி பத்திரிகையாளர் நடந்து கொண்ட விதம் குறித்த தகவல்.இது செய்தியை வழங்குவதில் ஒரு வடிவம்.

சுருக்கமாகச் சொன்னால் அந்தச் செய்தியானது ஊடக அலுவலகத்தில் நடந்த ஒருinternal politics.

மேலும் இந்த செய்தி வடிவமும் ஒன்றும் புதிதல்ல.அனைத்துப் பத்திரிகைகளும் இது போன்ற செய்திகளை இப்பொழுது வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குமுதம் ரிப்போர்ட்டரில் வம்பானந்தா ,நக்கீரனில் சங்கர்லால் ,தமிழக அரசியலில் அலெக்ஸ் பாண்டியன் ,ஜூனியர் விகடனில் கழுகார்,இந்தியா டுடேஇதழில் பூதக்கண்ணாடி,தினமலரில் டீக்கடை பெஞ்சு,தினமணியில் மெய்யாலுமா,தினகரனில் பீட்டர் மாமா,தின இதழில் சூப்பர் மேன் என்ற பெயரிலும் எழுதித் தள்ளி வருகிறார்கள்.
அதில் பாதிக்கும் மேல் அரசியல் உள்ளரங்கச் செய்திகள் தான்.அந்த மந்திரிக்கு பதவி போகப் போகுது,இவரைப் பார்த்து தலைவர் திட்டினாராம்,இவர் இந்த தொகுதி கேட்கிறார்,அவரை இவர் போட்டுக் கொடுத்துட்டார்,இந்த அலுவலகத்தில் இவருக்கும் அவருக்கும் சண்டை என்பன போன்றவை தான்.(இதில் குறிப்பிடத்தக்க அளவில் பொய்ச் செய்திகளும்,ஊகங்களின் அடிப்படையில் எழுதப்படுபவை தான். சமூகத்தைப் பாதிக்கும் ஊழல் போன்ற செய்திகளை மட்டுமே எழுதுவதில்லை.

இது உண்மையான ஊடகவியலாளர்களுக்குத் தெரியும்.ஆகவே உண்மையான‌ மாற்று ஊடகங்கள் ஊடகங்களில் நடக்கும் உள்ளரசியலை எழுதும் பொழுது அவர்களும் தவறாக நினைப்பதில்லை.செய்தி சரியா தவறா என்று தான் பார்ப்பார்கள்.

எழுதுவதற்கு மாற்று ஊடகங்களுக்கு உரிமை இருப்பது போல விமர்சனம் செய்வதற்கும் உரிமை இருக்கிறது.ஆனால் எதற்கு எழுத வேண்டும் என்று யாரும் கேட்க மாட்டார்கள்.?

என்னை எழுத நீ யார்..? அலுவலகத்தில் நடக்கும் உள்ளரசியலை எதற்கு எழுதுகின்றீர்கள் என்று 'வானாளவிய அதிகார'த்துடன் யாரும் வெளிப்படையாய் சலம்புவதில்லை.

ஆனால் ஐடி நிறுவனத்தில் தகுதிக்குறைவு என்ற‌ காரணத்தால் வெளியேற்றப்பட்டதால் வேறு வழியில்லாமல் பத்திரிகைத்துறைக்கு வந்தவர்களும்,இத்துறை குறித்து அடிப்படை கூடத் தெரியாதவர்களும், தான் இப்படி எழுதலாமா,அப்படி எழுதலாமா என்று சலம்புகிறார்கள்.

சமீபத்தில் அப்படி நடந்திருக்கிறது.

பத்திரிகை அலுவலகத்தில் நடக்கும் உள்ளரசியலை எப்படி எழுதலாம் என்றுகவின்மலர் என்பவர் முகநூலில் எழுதியிருப்பதாக நண்பர் ஒருவர் செய்தி அனுப்பியுள்ளார்.





ஊடகத்தில் நடக்கும் அரசியலை எழுத நீ யார்..? என்று கேட்கும் இவருக்கு நாம் மேலே சொன்ன பதிலே பொருந்தும். ஆனால் கத்துக்குட்டிகளுக்கு எப்படிச் சொன்னாலும் புரியாது என்பதால் புரிய வைக்க முயற்சிக்கிறோம்.அதே நேரம் எப்பொழுதும் கிசுகிசு எழுதுவதையே மாற்று ஊடகம் என்று நாம் ஒப்புக் கொள்ளவில்லை.

மேலும் அவரது கத்துக்குட்டித் தனமான கேள்விக்கு அவரே பதிலும் எழுதியிருக்கிறார்.

இதில் யாருக்கு ஆர்வம் ஊடகத்தில் பணியாற்றுபவர்களைத் தவிர யாருக்கு ஆர்வம்? //

என்றும் எழுதியிருக்கிறார்.(கடைசிக்கு முந்தைய வரி)

ஊடகத்தில் பணியாற்றுபவர்களின் ஆர்வம் இந்த லட்சணத்தில் இருக்க இவர் எதற்கு நிரம்பவும் கவலைப் படுகிறார்?

அவரது பதிவு கத்துக்குட்டித்தனமானது என்பது எளிதில் புரியும்.

தைத் தாண்டி இதில் இன்னொரு கோணமும் உள்ளது.கவின்மலர் என்பவர் இந்தியா டுடே தமிழ் இதழில் எழுதும் ஹோல்சேல் 'முற்போக்கு' பத்திரிகையாளர் என்று மட்டும் கருதக்கூடாது.

கவின்மலர் என்பவர் இந்தியா டுடேவில் அசோசியேட் காப்பி எடிட்டர் வேலை பார்க்கிறார்.-(இவர் இதற்குத் தகுதியானவரா என்பது வேறு விஷயம்.) காப்பி எடிட்டர் என்னும் வேலையின் தன்மை (இணைப்பு )என்னவென்றால் நிருபர்களின் பிரதிகளைச் செழுமைப்படுத்துவது.

இந்தியா டுடே தமிழ் வார இதழில் வெளிவருபனவற்றில் பெரும்பாலானவை அதன் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்ப‌டும்.அவை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி மாற்ற‌ம் செய்யப்படும்.அவ்வாறு மொழி மாற்றம் செய்த படைப்புகளைச் செழுமைப்படுத்துவது,மற்றும் தமிழில் எழுதும் நிருபர்களின் பதிவுகள் ஆகியவற்றை அதன் உள்ளடக்கம் மாறாமல் செழுமைப்படுத்துவது ஆகியவை தான் இதில் அடக்கம்.இது தான் இந்தியா டுடேயில் இவரது பணியின் தன்மை.அதற்குத்தான் மாதம் 40000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்.




நிருபர் பணிக்கும் அசோசியேட் காப்பி எடிட்டர் பணிக்கும் என்ன வித்தியாசம் என்னவென்றால்,நிருபர்,தலைமை நிருபர்,சிறப்பு நிருபர்,மூத்த நிருபர் போன்றவர்கள் அவர்கள் எழுதும் பதிவுகளுக்குத் தான் பொறுப்பாவார்கள்.அதைத் தாண்டி இத‌ழின் உள்ளடக்கத்திற்கு அவர்கள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார்கள்.ஏனென்றால் பிற படைப்புகளை அவர்கள் முடிவு செய்வதில்லை.அதில் அவர்களின் பங்கும் எந்த அளவிலும் இல்லை.அதற்கு வாய்ப்பும் இல்லை.ஆகவே அவர்களைக் குற்றம் சுமத்த முடியாது.ஆசிரியர் இலாகா தான் அதனை முடிவு செய்யும்.

ஆனால் அசோசியே காப்பி எடிட்டர் பணி அப்படி இல்லை.
வினவு (இணைப்பு) தளத்தில் கவின்மலரைச் சரியாக விமர்சித்தபொழுதும் அதைத் திசைமாற்றி,நிருபரை எப்படி உள்ளடக்கத்திற்குப் பொறுப்பாகலாம் என்று ஒரு பதிலைக் கவின்மலர் சொல்லியிருந்தார் என்பதை நினைவு படுத்தலாம்.

ஆனால் 'அசோசியேட் காப்பி எடிட்டர்' பணியில் இருப்பவர் என்பவர் அதன் உள்ள‌டக்கத்தை முடிவு செய்யும் இடத்தில் இருப்பவர்.அவ்வாறு வெளியிடப்படும் பதிவுகள் அனைத்தையும் செழுமைப்படுத்தும் பணியில் இருப்பவர்.

வின்மலர் 'இந்தியாடுடே'வில் பார்க்கும் வேலையின் தன்மையைப் பார்த்த நாம்,அவர் முகநூலில் எழுதும் எழுத்துக்கு நேர்மையாய் உண்மையாய் இருக்கிறாரா என்று பார்ப்போம்.

எந்த அலுவலகத்தில் தான் பாலிடிக்ஸ் இல்லை.அதை ஏன் எழுத வேண்டும்../இவ்வாறு எழுதுவது மாற்று ஊடகம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு நேரும் அவமானம்.//

 மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்தியா டுடே இதழ் ஆபாச,வக்கிரமான சர்வேக்கள் வெளியிடுவது வழக்கம்.தனிநபர் பாலியல் சார்ந்த தேர்வுகள்,விருப்பங்கள்,எதிர்பார்ப்புகள் என்று பரந்து விரியும் இந்த சர்வேயில் அனைத்தும் இட்டுக்கட்டப் பட்டவை என்பதைத் தாண்டி தனிநபர் அந்தரங்கத்தை அத்துமீறி நுழைந்து பார்த்து விற்பனைப் பொருளாக்கும் தரங்கெட்ட வணிக நோக்கம் என்பதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை.

அதுவும் ஆபாச சர்வேக்கள் போன்ற விற்பனையை அதிகரிக்கும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த பக்கங்களைத் திருத்தும் மிகப்பெரிய பொறுப்பு கவின்மலர் போன்ற‌ அசோசியேட் காப்பி எடிட்டர்களிடம் தான் வழங்கப்படும்.

ஒவ்வொருவரின் படுக்கை அறைக்குள் நடக்கும் தனி நபர் சார்ந்த விஷயங்களை இப்படி இட்டுக்கட்டி எழுதுவதில்,அதனைத் திருத்துவதில் செழுமைப்படுத்துவதில் என்ன 'தொழில்'நேர்மை கவின்மலர்../இது சரியா கவின்மலர்..?

நீங்கள் வேலைக்குச் சேர்ந்த பின்பு இது போன்ற மூன்று வக்கிர சர்வேக்கள் இந்தியா டுடேயில் வெளிவந்திருக்கின்றன. 'அசோசியேட் காப்பி எடிட்டர்' என்ற முறையில்,அதனைச் செழுமைப்படுத்தியதில்,வாசகனை ஈர்க்கும் படி (!)எழுதியதில் உங்கள் பங்கும் கணிசமான அளவில் இருக்கிறது கவின்மலர்.





'இந்திய சிறு நகரங்களின் செக்ஸ் ரகசியங்கள்','ஸ்தன புராணம்' என்று ஒவ்வொருவரின் படுக்கை அறைக்குள் நுழைந்து துப்பறிந்தது போல இட்டுக் கட்டி வெளியிடப்படும் ஆபாச,அருவருக்கத்தக்க‌ கட்டுரைகளை அலுவலகத்தில் செழுமைப்படுத்தும்,வார்த்தைகளால் அழகுபடுத்தும் 'முற்போக்காள‌ர்' கவின்மலர்  கவின்மலர்,வெளியில் வந்து 'ஊடக உள்ளரசியலை' எப்படி எழுதலாம் என நீட்டி முழக்குகிறார்.

இந்த ஆபாச,அருவருக்கத்தக்க‌ சர்வேக்கள் குறித்து உங்கள் கருத்து என்ன../உங்களுக்கு உடன்பாடு உண்டா../உடன்பாடு இல்லை என்றால் உங்கள் எதிர்ப்பை அலுவலகத்தில் பதிவு செய்தீர்களா../அல்லது உங்களின் பிரியத்துக்குரிய போராளி உ.வாசுகியின் ஜனநாயக மாதர் சங்கத்தை வரவழைத்து அலுவலக வாசலில் அடையாள ஆர்ப்பாட்டம் செய்தீர்களா..?அல்லது இதுவரை நான் அந்த மாதிரி திருத்தியதோ,செழுமைப்படுத்தியதோ இல்லை என்று உங்களால் பகிரங்கமாய் அறிவிக்க முடியுமா..?அதுவும் வேண்டாம்.நான் பேசுகிற முற்போக்கை என் பணி இடத்தில் எதிர்பார்க்கத் தேவை இல்லை என்றாவது ஒரு நிலைச் செய்தி போட முடியுமா..?

அவ்வளவு ஏன்..?குறைந்தபட்சம் வேறு வழியில்லாமல் நிர்வாகத்துக்கு உங்களின் எதிர்ப்பை மறைமுகமாய்த் தெரிவிக்கும் பொருட்டு முகநூலில் சோகப்பாடல்களையாவது மொக்கையாகப் பகிர்ந்து கோண்டீர்களா..?

இது குறித்து நீங்கள் நேர்மை இருப்பின் பதில் சொல்ல வேண்டும்.ஏற்கன‌வே நாங்கள் உங்களை விமர்சித்த பொழுது ஓடி ஒளிந்து விட்டீர்களே அதைப்போல இப்பொழுதும் செய்யக் கூடாது.

சொல்லுங்கள் கவின்மலர்  .?.

கவின்மலர் தான் எழுதிய எழுத்துக்கு நேர்மையாய் இருந்தால் இப்படிப்பட்ட சர்வேக்களை 'இந்தியா டுடே' வெளியிடுவதைக் கண்டித்து அவர் இருக்கும் இடத்தில் இருந்தே பணியைத் தொடங்க வேண்டும்.அதை விடுத்து அலுவலகத்தில் பெட்டிப் பாம்பாய் அடங்கி விட்டு கொடுத்த வேலையைச் 'சிற‌ப்பாகச்' செய்து விட்டு அதற்கு நேர்மாறாய் இங்கு 'புரட்சி' பேசக் கூடாது.

அலுவலகத்தில் இட்டுக் கட்டப்பட்ட தனி நபர் அந்தரங்கம் தொடர்புடைய ஆபாச சர்வேக்களைத் திருத்துவது, முகநூலில் வந்து முற்போக்கு வியாபாரத்தை நிலை நிறுத்தும் வண்ணம்,ஊடக உள்ள‌ரசியலை எப்படி எழுதலாம்..?அது தவறல்லவா என்று வானத்துக்கும் பூமிக்கும் கொதிப்பது.

இது தான் நேர்மையா..?

அரிதாரம் எவ்வளவு தான் கலைந்து போனாலும் வலிய வலிய முற்போக்கு வண்ண‌த்தைப் பூசிக் கொண்டு உலாவரும் கவின்மலரே பதில் சொல்லுங்கள்.

நீங்கள் பதில் சொல்ல மாட்டீர்கள் என்பதும் கள்ள மவுன‌த்துடன் துடைத்துக் கொண்டு கடந்து செல்வீர்கள் என்பதும் இன்னும் ஒரு சில நாளில் வேறு ஒரு முகாந்திரமற்ற குற்ற‌ச்சாட்டை முற்போக்கு என்று நினைத்துக் கொண்டு போகிற போக்கில் எழுப்புவீர்கள் என்பதும் அதற்கு முகநூலில் 40 லைக்குகள் விழும் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

ஏனென்றால் பத்திரிகைத்துறையில் கத்துக்குட்டியாக இருந்தாலும்,முற்போக்கு மார்க்கெட்டை நிலைநிறுத்துவதிலும் போராளி வேஷம் கட்டுவதிலும் நீங்கள் ஜெகஜ்ஜாலக் கில்லாடி என்பதும் ஊருக்குத் தெரியும்.


இனி கவின்மலர் கலகக்குரல் தளம் குறித்துக் கூறிய குற்றச் சாட்டுகள் குறித்துப் பார்ப்போம்.

நேர்மையின்மை,ஊருக்கு உபதேசம்,தகுதியின்மை,திறமையின்மை,லாபி,குறுக்கு வழி



விகடனை எழுதுகிறாயே குமுதத்தை ஏன் எழுதுவதில்லை என்பது அவரது கேள்வி.

இப்படி ஒரு கேள்வியை பொதுவெளியில் முற்போக்கு முலாம் பூசி கொண்ட கத்துக்குட்டியைத் தாண்டி வேறு ஒருவரால் கூட கேட்க முடியாது.

அதற்கும் பதில் அளிக்கிறோம்.

குமுதம் வார இதழ் 'தரம்' குறித்து ஊருக்கே தெரியும்.ஊர் உலகத்திற்கே தெரிந்த ஒரு விஷயத்தை எழுதுவதில்,விமர்சிப்பதில் என்ன பிரயோஜனம்..?அதில் மாற்று ஊடகங்களுக்கு என்ன வேலை..?

ஆனால் ஆனந்த விகடன் அப்படி அல்ல.அது தன்னை ஒரு முற்போக்கு பத்திரிகையாக ஒரு முகமூடியைக் கட்டமைத்துக் கொண்டுள்ளது.ஒவ்வொரு வாரமும் அப்படியான செய்திகளைத் தேடித் தேடி வெளியிடுகிறது.

அதனால் தான் தர்மபுரி இளவரசன்-திவ்யா காதல் பிரச்னை நடைபெற்ற காலத்தில் பெண்ணைப் போகப்பொருளாய் பார்ப்பது குறித்து உங்களைக் கொண்டு ஆறு பக்கத்துக்கு அனைவருக்கும் அறிவுரை சொல்லியது.

ஆனால் அறிவுரை சொல்லிய அடுத்த பக்கம் நயன்தாரா யாருக்கு ? என்று நடிகர்ஆர்யாவையும் அவரது தம்பியையும் பொது வெளியில் ஏலம் போட வைத்தது.

அறிவுரை சொல்லிய இன்னொரு புறம் டைம்பாஸில் வக்கிரத்தை கடை விரித்தது.அதைத் தான் நாங்கள் கேள்வி கேட்டோம்.

இது போன்று முற்போக்கை கடைச் சரக்காக்கி விலைக்கு விற்கும் பத்திரிகையிடம் தான் நாங்கள் கேள்வி கேட்க முடியும்.குமுதம் போன்ற எந்த முகமூடியும் இன்றி ஆபாசத்தைக் கடை விரிக்கும் இதழ்களிடம் நாங்கள் கேள்வி கேட்க முடியாது.இதுவும் தவிர குமுதம் நிர்வாகத்தை எதிர்த்து இதுவரை எத்தனையோ பதிவுகளை எழுதியிருக்கிறோம்.

விகடன் நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்கும் கவின்மலரின் பதிவைப் படிப்பவர்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றும்.

பத்திரிகையாளர் ஒவ்வொருவரும் வேலை செய்யும் நிறுவனத்தை ஏதாவதொரு காரணத்துக்காய் விமர்சிக்கையில்,கவின்மலர், விகடன் வேலையை விட்டு ஒரு வருடம் ஆகப் போகிறது.ஆனால்,எதற்கு இன்னும் விகடன் மீது ரொம்பப்ப்ப்ப்ப் பாசமாய் இருக்கிறார் என்று../அந்தப் பின்னணியைச் சொல்கிறோம்.அந்தப் பாசத்தில் கத்துக்குட்டி கவின்மலரின் பிழைப்புவாதம் அடங்கியிருக்கிறது.

பத்திரிகைத்துறையில் குறைந்த அனுபவம் உள்ள‌வர்கள்,அல்லது துறைக்குப் புதியவர்கள்,விகடன் நிறுவனத்தின் தலைமை நிருபர் பதவியை அடைய வேண்டும் என்றால் கீழ்க்கண்ட‌ படிநிலைகளைக் கடந்து தான் வர‌ வேண்டும்.

வேலைக்கான நியமன உத்தரவு கிடைத்தவுடன் முதலில் தற்காலிக நிருபராக-6 மாதம் பணியாற்ற‌ வேண்டும்(இதழில் பெயர்(இன் பிரிண்ட்) வராது.

இந்தக் கால கட்டத்திற்குப் பின் நிர்வாகம் தற்காலிக நிருபரின் பணியில் திருப்தி அடைந்தால் அவருக்கு நிருபர் பதவியை அளிக்கலாம்.திருப்தி அடைய வில்லை என்றால் அவரை இன்னும் சில காலம் தற்காலிக நிருபராக நீட்டிக்கவும் செய்யலாம்.அல்லது தற்காலிக நிருபர் பதவியை விட்டும் நீக்கலாம்.அல்லது திறமை இல்லா விட்டாலும் நிர்வாகம் விருப்பப் பட்டால் நிருபர் பதவியை  தரலாம்.

தற்காலிக நிருபர் பணி,நிருபர் எனப் படிநிலை உயர்த்தப்பட்டால் அதன்பின்  (இதழில் நிருபர் என்று பெயர் வரும்.(இன் பிரிண்ட்)

நிருபராக 4 வருடமோ அல்லது 3 வருடமோ பணியாற்றிய பின் நிர்வாகம் அவரது திறமையை,இதழில் அவரது பங்களிப்பைப் பரிசீலித்து,திற‌மை இருப்பின் அவருக்குத் 'தலைமை நிருபர்' பதவி தரலாம்.அல்லது திறமை இல்லா விட்டாலும் நிர்வாகம் விருப்பப் பட்டால் தலைமை நிருபர் பதவியைத் தரலாம்.

நமக்குத் தெரிந்து உண்மையில் திற‌மையுள்ள சிலர் தற்காலிக நிருபரில் இருந்து தலைமை நிருபர் என படிநிலையை அடைய இந்தப் படிநிலையை அடைய 6 முதல் 7 வருடங்கள் ஆகியிருக்கிற‌து..

மன்னாதி மன்னர்கள் யார் என்றாலும் இது தான் நிலை.

அசோகன்,(விகடன் குழும 8 இதழ்களின் முன்னாள் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் )ரா,கண்ணன்,விகடன் மற்றும் விகடன் குழும 6 இதழ்களின்தற்பொழுதைய ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் ,ரீ.சிவக்குமார்.(சுகுணா திவாகர்-டைம்பாஸ் பதிப்பாளர் மற்றும் ஆசிரியர்) என இன்றைய,முன்னாள் ஆசிரியர்கள் அனைவரும் இந்தப் படிநிலையைக் கடந்து வந்தவர்கள் தான்.இவர்கள் இத்துறையில் திறமையானவர்களும் கூட.

ஆனால் பத்திரிகைத் துறைக்குப் புதியவரான கவின்மலர் என்பவர் ஆனந்த விகடனில் தற்காலிக நிருபராய் வேலைக்குச் சேர்ந்த 5 மாதத்திலேயே தலைமை நிருபராக நேரடியாக நியமிக்கப் பட்டார்.

நிர்வாகத்தின் அனுசரனை இல்லாமல் இது எப்படி சாத்தியம்..?

தற்காலிக நிருபராய் பணியாற்றிய காலத்தில் குறிப்பிடத்தக்க,அனைவரும் வியக்கும் எந்த ஒரு பங்களிப்பையும் கவின்மலர் செய்ததில்லை.அனைவரும் செய்யும் நேர்காணலையும்,சினிமாக் காரர்கள் குறித்த பதிவையும் தனக்குத் தெரிந்த சிபிஎம் தோழர்களின் பங்களிப்பையுமே வாங்கி வெளியிட்டார்.குறித்துச் சொல்வது என்றால், அவர் எழுதியது அனைத்தும் எந்த ஒரு சாதாரண நிருபரும் செய்வது தான்.

இது தான் கவின்மலரின் திறமை.ஆனால் தற்காலிக நிருபர் பணியில் இருந்து ,ஒரே தாவலில் நிருபர் பதவியைத் தாண்டி குறைந்தபட்சம் 6 வருட கால கட்டத்தைத் தாண்டி இவருக்கு தலைமை நிருபர் பதவி கிடைத்தது.நிர்வாகத்தின் விருப்பப் படியே இது நடந்தது.தகுதிக்கு மீறி இவருக்கு மகுடம் சூட்டப்பட்டது ஒருபுறம் இருந்தாலும் இதனால் இரண்டு நிருபர்கள் பாதிக்கப்பட்டனர்.

இவர் தற்காலிக நிருபர் பணியில் இருக்கும் பொழுதே,அங்கு நிருபராய் பணிபுரிந்த ந‌..... .வினோத்குமார் என்பவரும் இர.பிரீத்தி என்ற பெண் நிருபரும் பாதிக்கப்பட்டனர்.இருவரும் திறமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்களின் பதவி உயர்வு தான் இதனால் தடுக்கப்பட்டது.



அதிலும் ந.வினோத்குமார் அனைத்திலும் கவின்மலரை விட பல மடங்கு திற‌மையானவர் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியும்.
சுற்றுச்சூழல்,ஆங்கில மொழிபெயர்ப்பு,பயணக்கட்டுரை,விஞ்ஞானம் உட்பட‌அனைத்துத் துறைகளிலும் பரிணமிக்க கூடியவர்.

கவின்மலருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு விகடனில் சேர்ந்து நிருபராய் பணியாற்றிக் கொண்டிருந்தார்.விகடன் பிரசுரத்திற்காய் 2 நூல்கள் மொழி பெயர்த்திருக்கிறார்.
கூடங்குளம் பிரச்னை சமீப கால கட்டங்களில்அனைவராலும் பேசப்படும் முன்னரே அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமார் ஜூனியர் விகடனில் எழுதிய 'அணு ஆட்டம்' தொடரை நெறிப்படுத்தியவர்.

ஆனால் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இவருக்கு கீழ் நிலையில் உள்ள கவின்மலருக்கு உயர் பதவி அளிக்கப்பட்டது.(வினோத்குமார் செய்த தவறு என்னவென்றால் கூடங்குளம் செல்ல சென்னையில் ரயில் ஏறியதிலிருந்து,தேநீர்க்கடையில் அமர்ந்து தேநீர் குடித்தது வரை திரும்பி வரும் வரை 200 புகைப்படங்களை எடுத்து அதை முகநூலில் வெளியிட்டு முற்போக்கு வேடம் கட்டத் தெரியாததும்,தனக்காக லாபியும் செய்ய்த் தெரியாததும்)

ஆனால் சிறிதும் கூச்சம் இல்லாமல் கவின்மலர் 'தலைமை நிருபர்' பதவியைப் பெற்றுக் கொண்டார்.வெளியில் ஆயிரம் முற்போக்கு பேசும் கவின்மலர் அலுவலகத்தில் தனக்கு மேலே உள்ள தகுதியானவரை ஓவர்டேக் செய்து லாபி செய்து பதவியைப் பறித்துக் கொண்டார்.


சுருக்கமாய் இப்படிப் பாருங்கள்.

18 வருடமாய் கூடங்குளம்,மீனவர் பிரச்சனை,சுற்றுச் சூழல்,ஈழம் என ஒரு பத்திரிகையாளனாய்த் தொடர்ந்து எழுதி வரும் அருள் எழிலனும் இன்று தலைமை நிருபர் தான். துறைக்குள் நுழைந்த 2 வருடத்திற்குள் அரைகுறையாய் குறுக்கு வெட்டாய் சிந்திக்கும், எழுதும் ,கவின்மலருக்கும் அந்தப் பதவி கிடைத்திருக்கிற‌து.இந்தத் துறை திறமையற்று லாபி செய்வதன் மூலம் பதவியை அடைபவர்களால் எவ்வளவு சீரழிந்திருக்கிறது இதை விட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்..?

பெஞ்சு தேய்க்கும் பதவிக்கே எத்தனை நேர்முகத்தேர்வுகள்,நேர்காணல்கள்,திறமையை நிருபிக்க தேர்வுகள்.ஆனால் எதுவும் இல்லாமல் ஊடகத்துறையில் தான் இது போன்றவை சாத்தியம் ஆகும்.

மேற்கண்டவாறு தலைமை நிருபர் பதவியை அடைந்த‌ கவின்மலரின் திறமையின்மையைத் தாமதமாய் உணர்ந்த விகடன் நிர்வாகம் அவரை வெளியேறச் சொல்கிறது.ராஜினாமைவைக் கோருகிறது.
அதன்பின் தனது 'தலைமை நிருபர்' பதவியைக் காட்டி இந்தியா டுடேவில் அசோசியேட் எடிட்டருக்கு விண்ணப்பிக்கிறார்.இவரது கடந்த காலத்தைப் பரீசிலிக்காமல் விகடன் பத்திரிகையிலேயே இவர் தலைமை நிருபர்.அப்படி என்றால் இவர் மிகுந்த திற‌மையானவராய்த் தான் இருப்பார் என்று முடிவு செய்த 'இந்தியா டுடே' நிர்வாகம் இவரை அசோசியேட் எடிட்டர் பதவிக்குத் தேர்வு செய்கிறது.

இந்தியா டுடேயிலும் ஒரு அநீதி இருக்கிறது.15 வருடங்களாய் இந்தியா டுடேவில் வேலை பார்த்த அதன் அசோசியேட் காப்பி எடிட்டர்க‌ள் பானுமதியும்,எஸ்.செந்தில் குமாரும் இத்துறையில் 3 வருட அனுபவம் உள்ள கவின்மலரும் இப்பொழுது ஒரே கேடர்.இன்னொரு முக்கிய அம்சம்,நிருபர் பதவியை விட காப்பி எடிட்டர் பதவியின் தன்மை வேறு விதமானது.அனைத்துத் துறைகளிலும் ஓரளவுக்கு நிபுணத்துவமும்,அனுபவமும் இருக்க வேண்டும்.ஆனால் நிருபர் பணியில் அப்படி இல்லா விட்டாலும் பணியைச் செய்து விடலாம்.
ஆனால் டெஸ்க்கில் முன் அனுபவம் இல்லாத கவின்மலர் காப்பி எடிட்டர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதைக் கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும்.

15 வருடத்திற்கு மேல் இந்தியா டுடேவில் பணியாற்றிய பானும‌தி,எஸ்.செந்தில்குமார் போன்றவர்களை விட‌ கவின்மலருக்கு சம்பளம் அதிகம்.கவின்மலர் ஒழுங்காய் எழுதுகிறாரோ இல்லையோ நன்கு லாபி செய்பவர் என்பது இதன் மூலம் உங்களுக்குப் புரியும்.

இவருடன் தீக்கதிரில் ஊடகப் பணிக்கு வந்த கவாஸ்கர் செல்வம் என்னும் அப்பாவி சிபிஎம் தொண்டன் இன்று வரை தீக்கதிரில் பணியாற்றிக் கொண்டு மாதம் 8500 சம்பளத்தில் வாழ்கிறார் என்பது வேறு விஷயம்.

'தலைமை நிருபர்' பதவி விகடன் நிர்வாகத்தால் அன்று கொடுக்கப்படவில்லை என்றால் கவின்மலர் இன்றும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் நிருபராக குப்பை கொட்டிக் கொண்டிருப்பார்.பத்திரிகைத் துறையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல இன்னும் பல ஆண்டுகள் ஆகியிருக்கும்.

தகுதி இல்லையென்றாலும் 2 வருட பத்திரிகைத் துறை பங்களிப்பில் பலரது நியாயமான பதவி உயர்வைத் தட்டிப் பறித்து, 10 வருட முன்னேற்றத்தை அளித்த விகடன் நிர்வாகத்தின் மீது கவின்மலர் கொண்டிருக்கும் இந்த கண்மூடித்தனமான பாசத்தின் பின்னணிஇது தான்.

தொழிற்சங்கத் தலைவர்களாய் இருக்கும் போலிகள்,தங்கள் சுயநலனுக்காய் நிறுவனத்தை ஆதரிப்பார்களே,அது தான் இங்கும் நடந்திருக்கிறது.அதனால் தான் கலகக்குரலை நேர்மைய‌ற்று விமர்சிக்கிறார்.

கவின்மலர் அவர்களே இந்தப் பதில் உங்களுக்குப் போதும் என்று நினைக்கிறோம்.போதாது என்றால் இன்னும் பல தகவல்களுடன் இன்னொரு பதிவு வெளியிடுகிறோம்.

(இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால்,இவருக்கு தலைமை நிருபர் பதவி ஆர்டரை அளிக்கும் பொழுது,ஆசிரியர்,வாழ்த்துக்கள்,இனி நீங்க கடுமையாய் உழைக்க வேண்டும்.டீக்கடையில் எப்பவும் நின்று கொண்டு இருக்கக் கூடாது என்று தோழமையாய் சொல்லியிருக்கிறார்.

அதை வெளியில் வந்து ராமச்சந்திரன் கடையில் டீக்குடித்துக் கொண்டே அனைவரிடமும் சொல்லி ஆசிரியரை நக்கல் செய்தவர் தான் கவின்மலர்.)

(பிரீத்தி, வினோத்,எஸ்.செந்திகுமார்,பானுமதி,அருள் எழிலன் ஆகியோருக்கு ஆதரவாய் எழுதப்பட்ட பதிவு என்று நினைத்துக் கொண்டு யாரும் பின்னூட்டம் இட வேண்டாம்.அவர்களுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை)

இவ்வாறு தன் துறையில் குறிப்பிடத்தக்க எந்தப் பங்கினையும் செய்யாத கவின்மலர்,தான் பணியாற்றும் இடத்தில் திறமையானவனை மிதித்து,லாபி செய்து உயர் பதவியைப் பிடித்த கவின்மலர்,நாம் இதுவரை அவரை விமர்சித்து எழுதிய பதிவுகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற கவின்மலர்,முற்போக்கு முகமூடியைப் போட்டுக் கொண்டு ஊரில் உள்ள‌வர்களை எல்லாம் கத்துக்குட்டித்தனமாய் முகநூலில் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

உண்மையான சமூக அக்கறையுடன் திறமையுடன் எழுதும் எத்தனையோ ஊடகவியலாளர்கள் எந்த வெளிச்சமும் போராளி வேடமும் கட்டாமல் அமைதியாய் தங்கள் செயலைச் செய்து கொண்டிருக்க, கத்துக்குட்டிகளும்,திற‌மையில்லாவிட்டாலும் லாபியின் மூலம் பதவியை அடைபவர்களும் தான் இங்கு இணையத்திலும் பொதுவெளியிலும் ஊடகக் காரர்களாகவும்,கருத்தாளர்களாகவும் இத்துறையின் பிம்பங்களாய்  வலம் வருகிறார்கள் என்பது இத்துறை சீரழிந்த தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

-- வின்மலர் என்பவர் குறித்து ஆபிஸ் பையன் எழுதிய பத்தி.இதைப் படித்த கலகக்குரல் மூத்த நிருபர் அவரிடம் சொல்லியது இது தான்.


தம்பி,நீங்க இதுக்கு முன்னாடி கவின்மலர் என்பவரைப் பத்தி ரெண்டு பதிவு எழுதுனீங்க.நான் கண்டுக்கலை.அதுக்குப் பிறகு தான் விசாரிச்சேன்.இந்த பீல்டுல யார் கிட்டக் கேட்டாலும் அவங்களைத் தெரியலை.ஒரே ஒருத்தர் மட்டும் அந்தம்மா பீல்டுக்கு புதுசு,எல்லாத் துறையையும் கரைத்துக் குடித்த மாதிரி பேஸ்புக்கில எப்பொழுதும் ஆக்டிவ்வா இருப்பாங்கன்னு சொன்னார்.ஒரு கட்டத்துல அவங்க அட்ராசிட்டி தாங்காம பிளாக் பண்ணிட்டேன்னு சொன்னார்.ஆனா நீங்க அவங்களையும் ஒரு ஆளா மதிச்சு எழுதுறீங்க.

 'கவின்மலர்' போன்றவங்க தன்னை அருந்ததிராய்னு நினைச்சுக்கிட்டு ஒவ்வொன்னுக்கும் ஒரு கருத்து சொல்றாங்க.ஆனா அவங்க கத்துக்குட்டி என்பதும் பிழைப்பு வாதின்னும் நீங்க எழுதியிருக்கீங்க.அந்திமழை அசோகன் மாதிரி ஆட்கள் எதையும் ஆராயாமல் மேம்போக்கா இவங்களுக்கு நம்பிக்கைக்குரிய இளம் ஊடகவியலாளர் அப்படின்னு அங்கீகாரம் அளிக்கலாம்.அதுக்காக இவர் குறித்து நம் தளத்தில் இவ்வள‌வு விரிவா விமர்சனம் எழுத‌ தகுதியானவர் அப்படின்னு எப்படி முடிவு செய்தீர்கள்.?

இதுக்குமுன்னாடி நீங்க கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லலை.இவங்க குறைகுடம்.அப்படித்தான் இருப்பாங்க.இந்த விமர்சனம் குறித்தும் அவங்க கூச்சப்பட மாட்டாஙக்.இதையும் தனக்கு பப்ளிசிட்டின்னு நெனச்சு மனதுக்குள் மகிழ்ச்சி அடைவாங்க.அதனால இனி மேல் வேலை வெட்டி இல்லாம,வெட்டியா உட்கார்ந்து இவ்வளவு நீளமா அவங்களுக்குப் பதில் எழுதி நம்ம தரத்தைக் குறைக்காதீங்க.

இது தான் நான் முதலாவதும் கடைசியாகவும் நான் உங்களுக்கு சொல்றது.இந்தக் கட்டுரையை மட்டும் பப்ளிஷ் பண்ணிடலாம் சரியா..என்றார்.

ஆபிஸ் பையன் அவர் சொன்ன அறிவுரையை எற்று அமைதியானான்.












































































































































கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

The Amma I knew

Lakshmi Subramanian and J. Jayalalithaa with the Jaya TV team in 2001 in Chennai I was waiting outside the gates of the Apollo Hospital in Chennai talking to my sources and media friends on the night of December 5 when the hospital issued a statement announcing the demise of chief minister Jayalalithaa Jayaram. Even though I had been expecting the announcement, when I actually received it, it shook me for a second from head to foot. My blood pressure shot up, and I felt sad for her as a woman. I had seen her at close quarters early in my career and I had experienced her charm as well as her ruthlessness. I had started my career in 1999 as a cub reporter at a regional TV channel that was on air for just three months. One day I accompanied a senior reporter to Kundrathur on the outskirts of Chennai, where Jayalalithaa’s auditor K. Rajashekaran lay in a bed in a small room. His hands and an eye were swathed in bandages and there were bruises and swellings all over his body. He...

லாஞ்சரி(Lingerie)

சித்ரா பவுன் இளம்பெண்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது).சென்னையில் வசிப்பவர் ..அவருடைய பாய்பிரண்ட்  ஜெபராஜ்  ஒரு லாஞ்சரி ( lingerie )பிரியர்.லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை.அதை வாங்கி வந்து சித்ரா பவுனை அணியச் சொல்லி அழகு பார்ப்பது அவர் வாடிக்கை."லாஞ்சரியில் என்னைப் பார்ப்பதால்தான் அவருக்கு செக்ஸ் மூடே வருகிறது.பணத்தை உள்ளாடைகளுக்காக அதிகம் செலவழிப்பதும் அடிக்கடி அவற்றை அணியச் சொல்லி வற்புறுத்துவதும் எனக்கு பிடிக்கவில்லை.பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்கள்தான் லாஞ்சரி அணிந்து , கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்கப் பார்ப்பார்கள்.என் போன்ற குடும்பப் பெண்ணை அணியச் சொல்வது சரியா ? என்றார் சித்ரா பவுன்.நியாயமான கேள்வி! உணர்ச்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பிருக்கிறதா ? அதை பார்க்கும் முன் லாஞ்சரியின் வரலாற்றை முதலில் பார்க்கலாம். பிரெஞ்சு மொழியில் Linge என்றால் ' துவைக்கக்கூடியது ' என்று பொருள். ”Lin” என்பதற்கு லினைன் என்ற துணிரகத்தை சார்ந்தது என்ற அர்த்தமும் உண்டு.இவ்விரண்டு வார்த்தைகளின் கலவைதான் லாஞ்சரி உருவானது. 20 ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்...

ரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி!

தோசை என்றவுடன் வட்ட வடிவு, தொடுக்கொள்ள விதவிதமான சட்டினி, மிளகாய் பொடி, சாம்பார்... இதுதானே நம் எல்லார் நினைவிலும் வரும். ஆனால் அதே தோசை முக்கோணம், கோபுரம், சதுரம், ரோல்கள் என்ற பல வடிவுகளில் ’ சேஸ்வான் தோசா’, ’மெக்சிகன் ரோஸ்ட் தோசா’, ’சேண்ட்விச் ஊத்தப்பம்’, ’ராக்கெட் தோசா’, ’அமெரிக்கன் டிலைட் தோசா’ என்று நீண்டு செல்லும் புதிய பெயர்களில் தோசை வகைகள் கிடைப்பது என்று தெரிந்தால் யாருக்குதான் நாவில் எச்சில் ஊறாது??  இத்தனை புதுவகை தோசைகளுடன் தொடுக்கொள்ள கிடைக்கும் புதுவகை சாஸ்கள், சட்னிகள் என்று சர்வதேச அளவில் தோசையின் பெருமையையும், அதை உண்பதற்கான ஈர்ப்பையும் உருவாக்கியுள்ள  ‘தோசா ப்ளாசா ’, உலகளவில் 1 500 ஊழியர்கள் கொண்டு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல  கிளைகளை விரித்து சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. உணவுச்சந்தையில் உள்ள சர்வதேச உணவுவகைகள் மற்றும் பிரபல ப்ராண்டுகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ள ’தோசா ப்ளாசா’ வின் பின்னணியில் இருப்பவர், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்த தமிழ் ...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

Flitring - டெக்ஸ்ட் - ஆடியோ - விடியோ செக்ஸ் -

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எந்த நோக்கத்துக்காக கண்டு பிடிக்கப்பட்டாலும் அதில் செக்ஸையும் தூக்கி போட்டு அழகு பார்ப்பது உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. லேண்ட் லைன் காலத்திலேயே போன் செக்ஸ் ஆரம்பித்தது. ஆள் வச்சிகிட்டு இருப்பவர்கள் மட்டும்தான் போன் செக்ஸில் ஈடுபட முடியும் என்ற கவலை வேண்டாம் , காசு இருந்தால் போதும் போன் செக்ஸில் ஈடுபடலாம் என்ற சமூக அக்கறையுடன் இந்திய தொலைபேசி நிறுவனத்தின் ஆசியுடன் போன் செக்ஸிற்காக பல விளம்பரங்கள் தினசரியில் சக்கை போடு போட்டன. 5 நிமிஷம் பேசினாலே ஆண்குறி எகுறுகிறதோ இல்லையோ பில் எகிறி விடும் எகிறி . இந்தியாவில் இந்த சர்வீஸ்தான் முதல் 24/7 கால் செண்டராக இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.இதற்குப்பிறகான பேஜரில் அவ்வளவாக செக்ஸ் நர்த்தனம் நடக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு ஆசாமி இருந்து லவ் யூ மெசேஜிற்கு மேலே கிளுகிளுப்பு செல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்த குறைபாட்டால் பேஜரையே ஊத்தி மூட வேண்டியதாகி விட்டது. செக்ஸிற்கு இடமளிக்காத எந்த விஞ்ஞான கண்டு பிடிப்பும் நீண்ட காலம் “நிலைத்து” நிற்க முடியாது. லேண்ட்லைன் காலத்தில் வைல்ட் செக்ஸ் அவ்வளவாக இருக்...