முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முத்தம்... ஆயுள் கூட்டும் ஆரோக்கியம் காக்கும்!

காமராஜ் செக்ஸாலஜிஸ்ட்ஹெல்த்
`உன் முத்தம் ஒரு மோசடி 
அதைப்போல் பற்றாக்குறையான ஈகை 
வேறொன்றுமில்லை’

- கவிஞர் மகுடேசுவரன்.

ந்தக் கவிதையில் கவிஞருக்கு அதீத எதிர்பார்ப்பு. எவ்வளவு கொடுத்தாலும், `இன்னும் வேண்டும்’ என்று கேட்கிற வேட்கை. உண்மையில், அறிவியல்ரீதியாக முத்தம் தரும் பலன்கள் அற்புதமானவை. அண்மையில், சென்னையில் பாலியல் தொடர்பான ஒரு சர்வதேச மாநாடு (International Conference on Sexology) நடந்தது. இதில் கொரியாவைச் சேர்ந்த விஞ்ஞானி நாம் சியோல் பார்க் (Nam Cheol Park) உரையாற்றியது கலக்கல் ரகம். அவர் எடுத்துக்கொண்ட டாபிக், `முத்தம்.’ மனிதர்களுக்கு ஆயுளை அதிகரிக்கச் செய்யும் என்பதில் ஆரம்பித்து, மன அழுத்தம் குறைப்பதுவரை முத்தத்தின் அருமை பெருமைகளை 40 நிமிடங்கள் அவர் பட்டியலிட, அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது. 
`அன்பின் வெளிப்பாடு’, `ஆபாசம்’... இப்படி இருவேறு எல்லைகள் முத்தத்துக்கு உண்டு. பள்ளிக்குச் செல்லும் குழந்தையிடம் `ஒண்ணு கொடுக்க மறந்துட்டியே செல்லம்...’ என்று முத்தத்தைக் கேட்டு வாங்கும் அப்பாக்களும் இங்கே உண்டு. வீட்டின் நடு ஹால்... கும்பலாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் குடும்பம்... திடீரென்று ஒரு முத்தக்காட்சி... பதறிப்போய் சேனலை மாற்ற ரிமோட்டைத் தேடும் அப்பாக்களும் உண்டு. அமெரிக்கக் கவிஞர் சில்வியா பிளாத், ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸ், ஃபிரெஞ்ச் கவிஞர் விக்டர் ஹியூகோ... என முத்தம் குறித்து பொன்மொழிகள் எழுதிய பிரபலங்கள், எழுத்தாளர்கள், கவிஞர்களின் பட்டியல் வெகு நீளம். 

90-களில் நடிகர் கமல்ஹாசன் எந்தெந்தப் பிரபல நடிகைகளுக்கெல்லாம் முத்தம் கொடுத்திருக்கிறார், இன்னும் யார் யாருக்கெல்லாம் கொடுக்கவில்லை என்று கணக்குவைத்திருந்த ரசிகர்களெல்லாம் இருந்தார்கள். `ஃப்ளையிங் கிஸ்’-ஸைப் பிரபலப்படுத்தியதில் தமிழ் சினிமாவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. சரி... முத்தம் என்பது என்ன? ஒரு செயல்... ஏதோ ஓர் உணர்ச்சியை வெளிப்படுத்துகிற ஒரு சமாசாரம்... அவ்வளவுதானா? நிச்சயமாக இல்லை.  

முத்தம் நம் வாழ்க்கையோடு எப்படி இயைந்த ஒன்றாக இருக்கிறது, அதன் வகைகள், முத்தம் கொடுக்கும் விதங்கள், அது தரும் நன்மைகள் குறித்தெல்லாம் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் விவரிக்கிறார். ``அன்பை, காதலை, பரிவை, காமத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிவம்தான் முத்தம். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் நடு ரோட்டில் யாரென்றே தெரியாத ஒருவருக்கு முத்தம் கொடுப்பதுகூட சகஜமான ஒன்று. ஒருவரை வரவேற்கும்விதமாக, நட்பை வெளிப்படுத்துவதற்காக, மரியாதை கொடுப்பதற்காக இப்படிச் செய்வார்கள். சில நாடுகளில் ஒரு முறை, சில நாடுகளில் இரு முறை, ஃபிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் மூன்று முறை முத்தம் கொடுப்பதெல்லாம் வழக்கம். 

முத்தம் என்பது இயல்பான ஓர் உணர்ச்சி (Instinctual)... பசி, தாகம் எடுப்பது மாதிரியானது. குழந்தைக்கு அம்மா வாரியணைத்து முத்தம் கொடுப்பதும், காதலன் காதலிக்குக் கொடுப்பதும் அன்பின் மிகுதியால் ஏற்படுகிற இயல்பான ஒன்று. 3,600 ஆண்டுகளுக்கு முன்னர் நம் வேதங்களிலேயே முத்தம் குறித்த குறிப்புகள் இருக்கின்றன. வாத்ஸ்யாயனர் முத்தத்தின் வகைகள், அது ஏற்படுத்தும் கிளர்ச்சிகள் குறித்து `காமசூத்ரா’வில் மிக விரிவாக எழுதியிருக்கிறார். உலகம் முழுக்க இலக்கியப் பாடல்களில், கவிதைகளில் இது பிரதானமான பேசுபொருளாக இருந்திருக்கிறது. 

பல்வேறு வகையான முத்தங்கள் இருக்கின்றன. காதலோடு ஓர் ஆண் பெண்ணுக்கோ, பெண் ஆணுக்கோ கொடுப்பது; அம்மாவோ, அப்பாவோ பரிவோடு குழந்தைக்குக் கொடுப்பது; மரியாதையின் பொருட்டு ஒருவரின் புறங்கையில் முத்தமிடுவது; மதச் சடங்குகளின் பொருட்டு கொடுப்பது (சர்ச்சுகளில் பிரார்த்தனை முடிந்து அப்பம் வழங்கிய பிறகு புறங்கையில் கொடுப்பார்கள்); அமைதிக்காகக் கொடுப்பது (Kiss of Peace)... யூதர்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த வழக்கம் இருக்கிறது; மரியாதைக்காகக் கொடுப்பது... இஸ்ரேல் உள்ளிட்டப் பல நாடுகளில் இது நடைமுறையில் இருக்கிறது; நட்பின் பொருட்டுக் கொடுக்கும் முத்தம் (Friendship Kiss); பாலியல் சாராத முத்தங்கள் (Non Sexual Kisses); புனித முத்தங்கள் (Holy Kisses), (இயேசு கிறிஸ்துவுக்கு ஜுடாஸ் முத்தம் கொடுத்து காட்டிக் கொடுத்தது).
புனித ஜான் பால் போப் (Pope John Paul II) முதன்முறையாக ஒரு நாட்டுக்குப் போனால், அந்த நாட்டின் தரையை முத்தமிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். போப்பாண்டவருக்கு அடுத்த நிலையிலிருப்பவர் (Cardinal), பிஷப் போன்றவர்களைப் பார்க்கப் போகிறவர்களில் சிலர் அவர்களின் கால்களை முத்தமிடுவார்கள். இந்துக்களில் பலர் கோயில் தரையை, வாழ்ந்த மண்ணை முத்தமிடுவதுண்டு.  

முத்தம் கொடுப்பது எப்படி?

முதலில் வாயைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நாக்கு, பல் சுத்தமாக இருக்க வேண்டும். முத்தம் கொடுப்பதற்கு முன்பாக பூண்டு, வெங்காயம் போன்றவற்றைச் சாப்பிட்டிருக்கக் கூடாது. மது, சிகரெட் கூடவே கூடாது. பிரியப்பட்டால் மின்ட் ஃப்ளேவர் மிட்டாய், ஏலக்காய் போன்றவற்றை சாப்பிடலாம். 

முத்தத்தை சரியான தருணத்தில் (Moment) கொடுக்க வேண்டும். முதல் தடவையாக முத்தம் கொடுப்பதாக இருந்தால், திடீரென்று கொடுத்து துணையை மிரட்டிவிடக் கூடாது. துணைக்குத் தெரியாமல், அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் கொடுக்கவே கூடாது. நம் காதலியோ, காதலனோ அவர்களும் நமக்கு எதிர்வினை ஆற்றுவதற்கான அவகாசம் கொடுக்க வேண்டும். நம் முத்தத்தை எதிர்கொள்ள அவர்களைத் தயார்படுத்த வேண்டும். ஆனால், கட்டாயப்படுத்தக் கூடாது. முதல் முத்தம் மிக ஆழமாக இருக்கவேண்டிய அவசியமில்லை; மென்மையாக இருந்தாலே போதுமானது. அந்த நெருக்கம், நம் துணையை இன்னும் நெருக்கமாக்க வழி செய்யும்.  

மனரீதியாக, உணர்வுரீதியாக, உடல்ரீதியாக நன்மைகள் கிடைக்க அதிகமாக முத்தம் கொடுக்க வேண்டும்; துணையைக் கட்டிப்பிடிக்க வேண்டும். இன்றைக்கு மரியாதை, தொழில் காரணமாக யார் யாரையோ கட்டிப் பிடிக்கிறோம்; கட்டிப்பிடித்து, முத்தம் கொடுக்கவேண்டிய துணையை மறந்துவிடுகிறோம். முத்தத்தின் பலன்களை நினைவில் கொள்வோம்; யாருக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதையும் முடிவுசெய்து கொள்வோம்’’ என்கிறார் மருத்துவர் காமராஜ். 

உளவியல் ஆலோசகர் நப்பின்னை முத்தம் குறித்து விவரிக்கும் சமூகக் காரணிகள் அர்த்தம் பொதிந்தவை... 
``முத்தத்தை எதற்காகப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கேட்டால் அது தரும் மருத்துவப் பலன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 

`நீயும் நானும் ஈருடல், ஓருயிர்’ என்பதை மனிதர்கள் வெளிப்படுத்தும் வழிமுறைதான் முத்தப் பரிமாற்றம்; அன்பை வெறும் வார்த்தைகளால் சொல்லாமல், செயலாகக் காட்டுகிற விஷயம்; இருவேறு மனிதர்களுக்கு இடையில் ஓர் உணர்ச்சிப் பிணைப்பை (Emotional Bond), பந்தத்தை ஏற்படுத்தும் செயல்.  

தாய் தரும் முத்தம் குழந்தைக்கு அம்மாவிடம் ஒரு நம்பிக்கையை, நெருக்கத்தை உண்டாக்குகிறது; 

ஆண்-பெண் உறவில் மிக முக்கியமாகத் தேவைப்படுவது நெருக்கம் (Intimacy). இது இருந்தால்தான், திருமண உறவே பலப்படும். திருமண வாழ்க்கையில், ஆணும் பெண்ணும் பரஸ்பரம் நேசம்கொள்வதற்கு முத்தம் உதவுகிறது. ஏதோ ஒரு தவறு... இருவரில் ஒருவர் மன்னிப்புக் கேட்கவேண்டிய சூழல்... அதை வார்த்தைகளில் கேட்காமல், உடல்மொழியில் கேட்கும்போது இணைக்கு நம் மேல் நம்பிக்கை பிறக்கும். அதற்கு முத்தம் உதவும். முத்தம் சிலருக்குப் பிடிக்காமலும் போகும்; அது விவாகரத்துவரை கொண்டு போய்விடுவதும் உண்டு. அதற்கு வாழ்க்கைத்துணை சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்றவை காரணமாக இருக்கலாம். சிலருக்கு முத்தத்தால் நோய்த் தொற்று ஏற்படும் என்கிற அதீத பயம் இருக்கும். அதனாலும் முத்தத்தைத் தவிர்ப்பார்கள். 
  
தாம்பத்ய உறவுக்கு, அதற்கான சுமுகமான சூழலுக்குத் தயார்படுத்துவது முத்தம்தான். இது இல்லையென்றால், ஆணும் பெண்ணும் அன்யோன்யத்தை உணர முடியாமல் போய்விடும். பல விவாகரத்துகள் இந்த அன்யோன்யம் இல்லாததால்தான் நடக்கின்றன. `அவர் எனக்கு முத்தம்கூடக் கொடுத்தது கிடையாது’, `அவ அசிங்கமா இருக்கா...’ என்பதெல்லாம் முத்தம் கொடுக்காமல் போனதால் ஏற்பட்ட எதிர்வினைகளே.  
முத்தத்தைச் சரியான முறையில் கொண்டு சேர்க்காததுதான் இன்றைக்குப் பல பிரச்னைகளுக்குக் காரணமாகிறது. பெற்றோர்கள், குழந்தைகளுக்கு உரிய முறையில் அறிமுகப்படுத்தத் தவறிவிடுகிறார்கள். விளைவு..? யார் தூக்கிக் கொஞ்சினாலும், அவர்களிடம் குழந்தை ஒட்டிக்கொண்டுவிடுகிறது. இதுதான் பல பாலியல் வன்கொடுமைகளுக்கும் காரணமாகிறது. முத்தத்தை உரிய முறையில் அறிமுகப்படுத்தவேண்டிய தேவை இன்றைக்கு இருக்கிறது’’ என்கிறார் நப்பின்னை. 

`வெகு நீளமானது, ஆழமானது ஃபிரெஞ்ச் முத்தம்’ என்கிறார்கள். `நாங்கள் அதையெல்லாம் எப்போதோ பார்த்தவர்கள்’ என்பதை உணர்த்துகிறது ஒரு குறள். 

`பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி 

வாலெயிறு ஊறிய நீர்.’ 

அதாவது, `மென்மையான மொழியைப் பேசும் இவளின் வெண்மையான பற்களுக்கு இடையில் ஊறும் நீர் பாலோடு, தேன் கலந்ததைப்போல இருக்கிறது’ என்பது இதன் பொருள். 
 
`மகிழ்ச்சி என்பது ஒரு முத்தத்தைப் போன்றது.  அதை அனுபவிப்பதற்கு, நீங்கள் யாருடனாவது அதைப் பகிர்ந்துகொண்டே ஆக வேண்டும்’ என்கிறார் அமெரிக்காவின் பிரபல வானொலி தொகுப்பாளர் பெர்னார்டு மெல்ட்ஸர் (Bernard Meltzer). மறுக்க முடியாத உண்மை! 

- பாலு சத்யா

முத்தத்தின் வகைகள் 

நெ
ற்றியில் (Forehead) முத்தமிடுவது: ஃபிரெஞ்ச் முத்தம் (French Kiss) - இதுதான் மிக நீளமான, ஆழமான முத்தம். உதட்டோடு உதடு பதித்து, நாக்கோடு நாக்கைத் தொட்டுக் கொடுப்பது. வெகு நேரம் நீடிக்கும் முத்தம்.
சாதாரண முத்தம்: உதட்டை லேசாக டச் பண்ணிவிட்டு விட்டுவிடுவது. 

மென்மையான முத்தம் (
Light Kiss): கீழ் உதட்டை மட்டும் முத்தமிடுவது. 

பட்டாம்பூச்சி முத்தம்
 (Butterfly Kiss): ஒரு காதலன் காதலிக்கோ, ஒரு காதலி காதலனுக்கோ கண்ணில் கொடுப்பது; முத்தம் கொடுக்கும்போது கண் இமைகள் மூடிக்கொள்ளும், இமைகள் வந்து இறக்கைகள் போல் மறைக்கும் என்பதால் இதற்கு இந்தப் பெயர். 

ஸ்பைடர்மேன் முத்தம் 
(Spiderman Kiss): ஆணும் பெண்ணும் தலைகீழாக இருந்துகொண்டு ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் முத்தம். ஸ்பைடர் மேன் தலைகீழாக நின்றுகொண்டு தன் காதலிக்குக் கொடுக்கும் முத்தத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இது அந்த வகை. 

உதட்டோடு உதடு: குறைந்தபட்சம் 20 விநாடிகள் கொடுப்பது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சோப்பலாங்கி அரசு

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.  அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எதிர்பார்ப்பார்கள் அல்லவா? என்ன செய்து கிழித்தார்கள் ஆட்சியாளர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? நேற்று முழுவதுமாக கதறல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘பாலத்தின் கீழாக நிற்கிறேன். கையில் குழந்தை இருக்கிறது. தண்ணீர் மட்டம் உயர்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று பதறினார்கள். செல்போன் ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

வெளிவராத புத்தகங்கள்-2016