முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மலரினும் மெலிது காமம் - ஞயம்பட உரை.





சுதர்ஷன்

உலகினில் மென்மையானதும் உயர்வானதும் மலர். அந்த மலரிலும் மென்மையானது காமம். அத்தகைய உயர்வான காமத்திலிருந்து மென்மையை அகற்றிவிட்டால்  காமத்தில் உண்மையான மகிழ்ச்சி கிட்டாது. அவ்வின்பத்தைத் துய்க்க முடியாது. இதன் மென்தன்மை உணர்ந்து  முழுமையான பயன், நுட்பம், நயம் எல்லாவற்றையும் அறிந்து அனுபவிக்கக்கூடியவர்கள் சிலரே என்பது வள்ளுவன் கூற்று. அப்படிப்பட்ட உயர்வான காமத்தை ஞயம்பட உரைப்பது அவசியம். இதிலிருந்து தவறாதவை சங்க இலக்கியப் பாடல்கள்.

"மலரினும் மெல்லிது காமம் 
சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்" 

இரு உள்ளங்களின் முழுதான ஒத்திசைவு இல்லாதவரை காமம் நிறைவு காண்பதில்லை. அப்படி இரு உள்ளங்களின் ஒத்திசைவோடு நிகழ்கிற காமம் மட்டுமே நீடித்து நிலைக்கும். பொருந்தும் போதெல்லாம் ஒவ்வொரு தீண்டலிலும்  உயிர் தொடவேண்டும். காமம் என்பது, நூல்களைக் கற்கக் கற்க எப்படி அறியாமை எண்ணம் தோன்றுமோ அதுபோல தீராதது. பெருகிக்கொண்டே செல்லவேண்டும்.

"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் 
செறிதோறும் சேயிழை மாட்டு"

காம உணர்வு மிகவும் நுண்ணியது (ஐதே காமம்) என்கிறது ஒரு குறுந்தொகைப் பாடல். சங்க இலக்கியங்களில் காதல், காமம் இரண்டுக்கும் காமம் என்கிற ஒற்றைச் சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவில்  'முயங்குதல்' என்கிற சொல் பற்றிப் பேசலாம். தழுவுதல், புணர்தல் அல்லது பொருந்துதல் எனும் பொருள் அனைத்தும் ஒருசேர அமைந்த சொல். இதை ஒரு குறிஞ்சிப் பாடல் மிகு காமத்தோடு சொல்கிறது. தலைவியுடன் கூடிவிட்டு வரும்  தலைவன், அவள் தந்த இன்ப மிகுதியைத் தன்  நெஞ்சுக்கு உரைப்பதாய் அமைகிறது இந்தப் பாடல்.

பலரறி வுறுதல் அஞ்சிப் பைப்பய
நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச்
சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கைக்
குறையறல் அன்ன இரும்பல் கூந்தல்
இடனில் சிறுபுறத் திழையொடு துயல்வரக்
கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து
உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை
இயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்து
பெயலலைக் கலங்கிய மலைப்பூங் கோதை
இயலெறி பொன்னிற் கொங்குசோர்பு உறைப்பத்
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்
வடிப்புறு நரம்பில் தீவிய மொழிந்தே.

போர் வெற்றியின்பின் ஒள்வாள் அமலை எனப்படும் வெற்றிக்கூத்து ஆடப்படுகிறது. அந்நேரம், இரவில் காதலர்கள் சந்திக்கும் இடத்தில் சந்தித்துக்கொண்டோம். யாரும் கண்டு புறங்கூறிவிடுவார்களோ என்று அஞ்சி மிக மெதுவாக அடியெடுத்து அவள் வந்தாள். நீரின் திரள் போல வந்தாள். வெள்ளியினாலான வளைவு பொருந்திய வளைகளைத் தன் கைகளில் அணிந்திருந்தாள். கருமணல் போன்ற கரிய கூந்தல் பிடரியில் அசைய வந்தாள். கடல் மீன்களும் உறங்கும் நள்ளென்ற சாமம். மிகுந்த அழகுடன் செய்யப்பட்ட பாவை போன்றவள், அப்போதுதான் நடக்கக் கற்றுக்கொண்டவள் போல வந்தாள். 

மழையால் அலைக்கப்பட்ட மலைப்பூக்களைப் போலப் பதமாகவும், கொல்லன் உலைக்களத்தில் நின்று அடிக்கையில் தெறித்து விழும் பொன்தூளைப் போலவும், தேன்துளி சிந்த, யாழின் நரம்பிலிருந்து வரும் ஒலிபோல் இனிய மொழிகளைக் கூறிக்கொண்டே தன் மார்பின் கண்கள் இவன் நெஞ்சில் அழுந்தும்படி அழுத்தி அணைத்துக்கொண்டாள்.

"தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்


மலரினும் மெல்லிது காமம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்



பாதம்  நடப்பதால் பாதை உண்டாகிறது. நிலத்திலே பதியக்கூடிய பரந்த அடிப்பகுதியே பாதம்.  அடி என்பது ஒரு பொருளினுடைய அடிப்பாகம்.

பதி - பதம் - பாதம் 

சமஸ்க்ருதம்  வாங்கிக்கொண்ட சொற்களில் பாதம் என்கிற சொல்லும் ஒன்று என்றும், பாதை என்கிற சொல்லே,  'Path' போன்ற சொற்களாக வழங்கப்பட்டு வருகிறதென்பதுமே  தேவநேயப் பாவாணர் கூற்று. 

இப்படிப்பட்ட உயர்வான உடலின் பாகத்தினை இலக்கியங்கள் பெண் வடிவில் உயர்வாக்கப் போற்றின.

பாதத்தின் உயர்வினைப் பாடும் பாடல்கள் பிற்காலத்தில் சமய இலக்கியங்களாகத்தான் அமைந்தது. ஆனால் சங்க இலக்கியப் பாடல்கள் பெண்களின் பாதங்களை உயர்வாக்கப் பாடின. காதலின் மென்தன்மையைக் குறிக்கவும், அதன் பொருளை உணர்த்தவும்  பயன்பட்டது.

'நலம் புனைந்து உரைத்தல்' எனும் அதிகாரத்தில் பெண்களின் பாதத்தைப் பற்றி உயர்வாகச் சொல்லும் வள்ளுவர் முதல் அடியிலேயே, அவள் அனிச்சம் பூவிலும் பார்க்க மென்மையானவள் என்றுவிட்டு இறுதி அடியிலே பாதத்தின் சிறப்பைப் பற்றி எழுதியிருப்பது இன்னொரு சிறப்பு.

"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்." - குறள் 

அனிச்சம் பூவும் அன்னத்தின் இறகும்  உலகிலேயே மென்தன்மை உடையனவாகக் கருதப்படுவன. அவைகூட அவள் பாதங்களுக்கு நெருஞ்சி முள் போலத் தோன்றும் என்கிறார்.

நவீன கவிஞர்களில் வைரமுத்துவின் வரிகளில், 'மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவேன்' போன்று பெண்ணின் காதல்  பாதங்களை உயர்வாக்கப் பாடும் ஒத்த  வரிகள் ஒருசில  உண்டு. பெண்ணின் மென்மையை உணர்விக்க பயன்படுத்தப்பட்ட வர்ணனைகளைச் சில கவிஞர்கள் பெண்மையைத் தொழும் வர்ணனைகளாக மாற்றி அமைத்தனர்.
தாவணி போட்ட தீபாவளி என்கிற பாடலில், "பாவாடை கட்டி நிற்கும்  பாவலரு பாட்டு நீ. பாதாதிகேசம் வரை பாசத்தோடு காட்டு நீ." என்றொரு வரியினை யுகபாரதி எழுதியிருப்பார்.

பாதாதிகேசம் என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று எனக் கருதப்படுவது. பாதம் தொடங்கி கேசம் வரை பாடப்படும் பாடல்வகை பாதாதிகேசம் ஆகும். கடவுளையும் கடவுளைப் போன்றவர்களையும் இப்படிப் பாடுவது வழக்கம். மனிதர்களைப் பாடுவது கேசாதிபாதம் எனப்படும். கூந்தல் தொடங்கிப் பாதம் வரையில் பாடப்படுவது கேசாதிபாதம்.

"பாதாதிகேசம்" என்பது ஒரு பெண்ணை உயர்வுநிலையில் அல்லது தெய்வநிலையோடு ஒப்பிடுவதை மறைமுகமாகக் குறிக்கும் சொல். வெறெந்தச் சொல்லிணைப் போட்டிருந்தாலும் பாடல் வரிகள் கேட்கமுடியாதபடி அழகிழந்து போயிருக்கும்.

பின்நாட்களில் நெரூடா கவிதைகளும் இந்தத் தன்மையைத் தொட்டன.

When I cannot look at your face 
I look at your feet. 
Your feet of arched bone, 
your hard little feet. 
I know that they support you, 
and that your sweet weight 
rises upon them.

but I love your feet only because they walked upon the earth and upon the wind and upon the waters, until they found me.



மலரினும் மெல்லிது காமம் - சின்னம் வைத்தல்

ஓவியம் : John Fernandas 

தமிழில், பொதுவெளியில் சொல்லத்தகாத சொற்களை வேறு பொருள் கொண்டு சொல்வதை 'இடக்கரடக்கல்' என்பார்கள். 'இடக்கர்' என்றால் சொல்லத்தகாத சொல். சொல்லத்தகாத சொல்லை அடக்கிக் கூறுதல் இடக்கரடக்கல். இதைத் தகுதிச் சொல்வழக்கு என்பார்கள். இது கவிதைகளுக்குத் தனியொரு அழகைச் சுமந்துவரும்.

கவிஞர் வாலி தனது பாடல் வரிகளில் இடக்கரடக்கல் பயன்படுத்தும் விதம் இரசிக்கத்தக்கது. சிலநேரங்களில் அந்தச் சொற்பிரயோகங்களே அவற்றுக்கு உயர்ந்ததொரு நிலையைப் பெற்றுத்தரும். உதாரணமாக, "மின் வெட்டு நாளில்" என்கிற பாடலில் "பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்" என்றொரு வரி வருகிறது. இரு பறவைகள் சேர்ந்து உறவு கொள்வதைச் சொல்வதற்கு பல வார்த்தைகள் இருந்தாலும், "தோள் சேர்த்தல்" என்கிற வார்த்தையில் ஒரு சிநேகமும் இணக்கமும் வெளிப்படுகிறது. காமம் அழகு பெறுகிறது.

அதேபோல, "தீ இல்லை புகை இல்லை" என்கிற பாடலில் ஒவ்வொரு வரிகளிலும்  தமிழ் அழகு செழித்திருக்கும். "முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்னச் சின்னதாய்" என்கிற வரிகள் கவனிக்கத்தக்கது. 

உறவு கொள்கையில் நகக்குறி  இடுதல், பற்கள் பதித்தல் எல்லாம் காதலின் பெறுமதிமிக்க   சின்னங்கள் என்பது   வாத்ஸ்ஸாயனர் கூற்று. ஒருவரின் இன்மையின்போது அவற்றைப் பார்த்து இரசிப்பது காதலர்களுக்கு ஆறுதல் என்று சொல்கிறார். வாத்ஸாயனர் கூற்றுப்படி,  நகக்குறி இடுதலில் எட்டு வகைகள் இருக்கிறது. பற்கள் பதிப்பதில் பத்து வகைகள் இருக்கிறது. எங்கெங்கு பதிக்கவேண்டும், எங்கெங்கு கூடாது  என்றும் இருக்கிறது. இது பயிற்சியால் செய்யவேண்டிய கலை. காயங்கள் ஏற்படுத்தாமல் தடயங்கள் மட்டும் விட்டுச் செல்லல் பயிற்ச்சியால் மட்டுமே விளையக்கூடியது. ஆழ்ந்த காதல் உணர்வை வெளிப்படுத்த இடப்படும் அடையாளங்கள். காதலின் உச்சத்துக்கு துணையால் சூட்டப்பட்ட மரியாதைச் சின்னம் என்று காதலர்கள் மகிழ்ந்து கொள்வார்கள். அதைப் பார்க்கையில் அவர்களுக்கு மீண்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனத் தோன்றும்.

நம்முடைய கலிங்கத்துப் பரணியில் ஒரு பாடல் வருகிறது. பதிக்கப்பட்ட  அடையாளங்களை யாரும் இல்லாத நேரம் பார்த்து  பெண்கள் கண்டுகளித்து பெருமை கொள்வர் என்று சொல்கிறது பாடல்.

ஆனால் வாத்ஸாயனர் காமசூத்திரம் எழுதும்போது பெண்களின் இச்சைகளுக்கும் முன்னிலை கொடுத்தவர் என்பதால் பெண்கள் இடும் நகக்குறிகள் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். நம்முடைய படைப்புகளில் பெண்களின் இச்சைகளுக்கு அதிக  முக்கியத்துவம் தரப்படவில்லை என்கிற விமர்சனம் நீண்டகாலமாக இருக்கிறது. சினிமாப் பாடல் வரிகளில் வைரமுத்து வரிகள் இதை உடைத்தது.

'நகக்குறி இடுதல்' என்பதிலேயே ஒருவித உடன்பாடு இருக்கிறது. இந்தச் சின்னம் வைத்தல் என்கிற சொல்லும் அத்தனை நயமானது. 

படிப்பவர்கள், "வாங்கிக்கொண்டேன் உன்னை. ஆடை கொண்டதோ தென்னை" என்கிற வரிகளில் இருக்கும் அழகைக் கண்டறிய முனையலாம். வாலி குறும்புக்காரர். 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

The Amma I knew

Lakshmi Subramanian and J. Jayalalithaa with the Jaya TV team in 2001 in Chennai I was waiting outside the gates of the Apollo Hospital in Chennai talking to my sources and media friends on the night of December 5 when the hospital issued a statement announcing the demise of chief minister Jayalalithaa Jayaram. Even though I had been expecting the announcement, when I actually received it, it shook me for a second from head to foot. My blood pressure shot up, and I felt sad for her as a woman. I had seen her at close quarters early in my career and I had experienced her charm as well as her ruthlessness. I had started my career in 1999 as a cub reporter at a regional TV channel that was on air for just three months. One day I accompanied a senior reporter to Kundrathur on the outskirts of Chennai, where Jayalalithaa’s auditor K. Rajashekaran lay in a bed in a small room. His hands and an eye were swathed in bandages and there were bruises and swellings all over his body. He...

லாஞ்சரி(Lingerie)

சித்ரா பவுன் இளம்பெண்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது).சென்னையில் வசிப்பவர் ..அவருடைய பாய்பிரண்ட்  ஜெபராஜ்  ஒரு லாஞ்சரி ( lingerie )பிரியர்.லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை.அதை வாங்கி வந்து சித்ரா பவுனை அணியச் சொல்லி அழகு பார்ப்பது அவர் வாடிக்கை."லாஞ்சரியில் என்னைப் பார்ப்பதால்தான் அவருக்கு செக்ஸ் மூடே வருகிறது.பணத்தை உள்ளாடைகளுக்காக அதிகம் செலவழிப்பதும் அடிக்கடி அவற்றை அணியச் சொல்லி வற்புறுத்துவதும் எனக்கு பிடிக்கவில்லை.பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்கள்தான் லாஞ்சரி அணிந்து , கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்கப் பார்ப்பார்கள்.என் போன்ற குடும்பப் பெண்ணை அணியச் சொல்வது சரியா ? என்றார் சித்ரா பவுன்.நியாயமான கேள்வி! உணர்ச்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பிருக்கிறதா ? அதை பார்க்கும் முன் லாஞ்சரியின் வரலாற்றை முதலில் பார்க்கலாம். பிரெஞ்சு மொழியில் Linge என்றால் ' துவைக்கக்கூடியது ' என்று பொருள். ”Lin” என்பதற்கு லினைன் என்ற துணிரகத்தை சார்ந்தது என்ற அர்த்தமும் உண்டு.இவ்விரண்டு வார்த்தைகளின் கலவைதான் லாஞ்சரி உருவானது. 20 ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்...

ரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி!

தோசை என்றவுடன் வட்ட வடிவு, தொடுக்கொள்ள விதவிதமான சட்டினி, மிளகாய் பொடி, சாம்பார்... இதுதானே நம் எல்லார் நினைவிலும் வரும். ஆனால் அதே தோசை முக்கோணம், கோபுரம், சதுரம், ரோல்கள் என்ற பல வடிவுகளில் ’ சேஸ்வான் தோசா’, ’மெக்சிகன் ரோஸ்ட் தோசா’, ’சேண்ட்விச் ஊத்தப்பம்’, ’ராக்கெட் தோசா’, ’அமெரிக்கன் டிலைட் தோசா’ என்று நீண்டு செல்லும் புதிய பெயர்களில் தோசை வகைகள் கிடைப்பது என்று தெரிந்தால் யாருக்குதான் நாவில் எச்சில் ஊறாது??  இத்தனை புதுவகை தோசைகளுடன் தொடுக்கொள்ள கிடைக்கும் புதுவகை சாஸ்கள், சட்னிகள் என்று சர்வதேச அளவில் தோசையின் பெருமையையும், அதை உண்பதற்கான ஈர்ப்பையும் உருவாக்கியுள்ள  ‘தோசா ப்ளாசா ’, உலகளவில் 1 500 ஊழியர்கள் கொண்டு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல  கிளைகளை விரித்து சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. உணவுச்சந்தையில் உள்ள சர்வதேச உணவுவகைகள் மற்றும் பிரபல ப்ராண்டுகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ள ’தோசா ப்ளாசா’ வின் பின்னணியில் இருப்பவர், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்த தமிழ் ...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

Flitring - டெக்ஸ்ட் - ஆடியோ - விடியோ செக்ஸ் -

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எந்த நோக்கத்துக்காக கண்டு பிடிக்கப்பட்டாலும் அதில் செக்ஸையும் தூக்கி போட்டு அழகு பார்ப்பது உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. லேண்ட் லைன் காலத்திலேயே போன் செக்ஸ் ஆரம்பித்தது. ஆள் வச்சிகிட்டு இருப்பவர்கள் மட்டும்தான் போன் செக்ஸில் ஈடுபட முடியும் என்ற கவலை வேண்டாம் , காசு இருந்தால் போதும் போன் செக்ஸில் ஈடுபடலாம் என்ற சமூக அக்கறையுடன் இந்திய தொலைபேசி நிறுவனத்தின் ஆசியுடன் போன் செக்ஸிற்காக பல விளம்பரங்கள் தினசரியில் சக்கை போடு போட்டன. 5 நிமிஷம் பேசினாலே ஆண்குறி எகுறுகிறதோ இல்லையோ பில் எகிறி விடும் எகிறி . இந்தியாவில் இந்த சர்வீஸ்தான் முதல் 24/7 கால் செண்டராக இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.இதற்குப்பிறகான பேஜரில் அவ்வளவாக செக்ஸ் நர்த்தனம் நடக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு ஆசாமி இருந்து லவ் யூ மெசேஜிற்கு மேலே கிளுகிளுப்பு செல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்த குறைபாட்டால் பேஜரையே ஊத்தி மூட வேண்டியதாகி விட்டது. செக்ஸிற்கு இடமளிக்காத எந்த விஞ்ஞான கண்டு பிடிப்பும் நீண்ட காலம் “நிலைத்து” நிற்க முடியாது. லேண்ட்லைன் காலத்தில் வைல்ட் செக்ஸ் அவ்வளவாக இருக்...