சுதர்ஷன்
உலகினில் மென்மையானதும் உயர்வானதும் மலர். அந்த மலரிலும் மென்மையானது காமம். அத்தகைய உயர்வான காமத்திலிருந்து மென்மையை அகற்றிவிட்டால் காமத்தில் உண்மையான மகிழ்ச்சி கிட்டாது. அவ்வின்பத்தைத் துய்க்க முடியாது. இதன் மென்தன்மை உணர்ந்து முழுமையான பயன், நுட்பம், நயம் எல்லாவற்றையும் அறிந்து அனுபவிக்கக்கூடியவர்கள் சிலரே என்பது வள்ளுவன் கூற்று. அப்படிப்பட்ட உயர்வான காமத்தை ஞயம்பட உரைப்பது அவசியம். இதிலிருந்து தவறாதவை சங்க இலக்கியப் பாடல்கள்.
"மலரினும் மெல்லிது காமம்
சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்"
இரு உள்ளங்களின் முழுதான ஒத்திசைவு இல்லாதவரை காமம் நிறைவு காண்பதில்லை. அப்படி இரு உள்ளங்களின் ஒத்திசைவோடு நிகழ்கிற காமம் மட்டுமே நீடித்து நிலைக்கும். பொருந்தும் போதெல்லாம் ஒவ்வொரு தீண்டலிலும் உயிர் தொடவேண்டும். காமம் என்பது, நூல்களைக் கற்கக் கற்க எப்படி அறியாமை எண்ணம் தோன்றுமோ அதுபோல தீராதது. பெருகிக்கொண்டே செல்லவேண்டும்.
"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு"
காம உணர்வு மிகவும் நுண்ணியது (ஐதே காமம்) என்கிறது ஒரு குறுந்தொகைப் பாடல். சங்க இலக்கியங்களில் காதல், காமம் இரண்டுக்கும் காமம் என்கிற ஒற்றைச் சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவில் 'முயங்குதல்' என்கிற சொல் பற்றிப் பேசலாம். தழுவுதல், புணர்தல் அல்லது பொருந்துதல் எனும் பொருள் அனைத்தும் ஒருசேர அமைந்த சொல். இதை ஒரு குறிஞ்சிப் பாடல் மிகு காமத்தோடு சொல்கிறது. தலைவியுடன் கூடிவிட்டு வரும் தலைவன், அவள் தந்த இன்ப மிகுதியைத் தன் நெஞ்சுக்கு உரைப்பதாய் அமைகிறது இந்தப் பாடல்.
பலரறி வுறுதல் அஞ்சிப் பைப்பய
நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச்
சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கைக்
குறையறல் அன்ன இரும்பல் கூந்தல்
இடனில் சிறுபுறத் திழையொடு துயல்வரக்
கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து
உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை
இயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்து
பெயலலைக் கலங்கிய மலைப்பூங் கோதை
இயலெறி பொன்னிற் கொங்குசோர்பு உறைப்பத்
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்
வடிப்புறு நரம்பில் தீவிய மொழிந்தே.
போர் வெற்றியின்பின் ஒள்வாள் அமலை எனப்படும் வெற்றிக்கூத்து ஆடப்படுகிறது. அந்நேரம், இரவில் காதலர்கள் சந்திக்கும் இடத்தில் சந்தித்துக்கொண்டோம். யாரும் கண்டு புறங்கூறிவிடுவார்களோ என்று அஞ்சி மிக மெதுவாக அடியெடுத்து அவள் வந்தாள். நீரின் திரள் போல வந்தாள். வெள்ளியினாலான வளைவு பொருந்திய வளைகளைத் தன் கைகளில் அணிந்திருந்தாள். கருமணல் போன்ற கரிய கூந்தல் பிடரியில் அசைய வந்தாள். கடல் மீன்களும் உறங்கும் நள்ளென்ற சாமம். மிகுந்த அழகுடன் செய்யப்பட்ட பாவை போன்றவள், அப்போதுதான் நடக்கக் கற்றுக்கொண்டவள் போல வந்தாள்.
மழையால் அலைக்கப்பட்ட மலைப்பூக்களைப் போலப் பதமாகவும், கொல்லன் உலைக்களத்தில் நின்று அடிக்கையில் தெறித்து விழும் பொன்தூளைப் போலவும், தேன்துளி சிந்த, யாழின் நரம்பிலிருந்து வரும் ஒலிபோல் இனிய மொழிகளைக் கூறிக்கொண்டே தன் மார்பின் கண்கள் இவன் நெஞ்சில் அழுந்தும்படி அழுத்தி அணைத்துக்கொண்டாள்.
"தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்
"தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்
மலரினும் மெல்லிது காமம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்
பாதம் நடப்பதால் பாதை உண்டாகிறது. நிலத்திலே பதியக்கூடிய பரந்த அடிப்பகுதியே பாதம். அடி என்பது ஒரு பொருளினுடைய அடிப்பாகம்.
பதி - பதம் - பாதம்
சமஸ்க்ருதம் வாங்கிக்கொண்ட சொற்களில் பாதம் என்கிற சொல்லும் ஒன்று என்றும், பாதை என்கிற சொல்லே, 'Path' போன்ற சொற்களாக வழங்கப்பட்டு வருகிறதென்பதுமே தேவநேயப் பாவாணர் கூற்று.
இப்படிப்பட்ட உயர்வான உடலின் பாகத்தினை இலக்கியங்கள் பெண் வடிவில் உயர்வாக்கப் போற்றின.
பாதத்தின் உயர்வினைப் பாடும் பாடல்கள் பிற்காலத்தில் சமய இலக்கியங்களாகத்தான் அமைந்தது. ஆனால் சங்க இலக்கியப் பாடல்கள் பெண்களின் பாதங்களை உயர்வாக்கப் பாடின. காதலின் மென்தன்மையைக் குறிக்கவும், அதன் பொருளை உணர்த்தவும் பயன்பட்டது.
'நலம் புனைந்து உரைத்தல்' எனும் அதிகாரத்தில் பெண்களின் பாதத்தைப் பற்றி உயர்வாகச் சொல்லும் வள்ளுவர் முதல் அடியிலேயே, அவள் அனிச்சம் பூவிலும் பார்க்க மென்மையானவள் என்றுவிட்டு இறுதி அடியிலே பாதத்தின் சிறப்பைப் பற்றி எழுதியிருப்பது இன்னொரு சிறப்பு.
"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்." - குறள்
அனிச்சம் பூவும் அன்னத்தின் இறகும் உலகிலேயே மென்தன்மை உடையனவாகக் கருதப்படுவன. அவைகூட அவள் பாதங்களுக்கு நெருஞ்சி முள் போலத் தோன்றும் என்கிறார்.
நவீன கவிஞர்களில் வைரமுத்துவின் வரிகளில், 'மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவேன்' போன்று பெண்ணின் காதல் பாதங்களை உயர்வாக்கப் பாடும் ஒத்த வரிகள் ஒருசில உண்டு. பெண்ணின் மென்மையை உணர்விக்க பயன்படுத்தப்பட்ட வர்ணனைகளைச் சில கவிஞர்கள் பெண்மையைத் தொழும் வர்ணனைகளாக மாற்றி அமைத்தனர்.
தாவணி போட்ட தீபாவளி என்கிற பாடலில், "பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ. பாதாதிகேசம் வரை பாசத்தோடு காட்டு நீ." என்றொரு வரியினை யுகபாரதி எழுதியிருப்பார்.
பாதாதிகேசம் என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று எனக் கருதப்படுவது. பாதம் தொடங்கி கேசம் வரை பாடப்படும் பாடல்வகை பாதாதிகேசம் ஆகும். கடவுளையும் கடவுளைப் போன்றவர்களையும் இப்படிப் பாடுவது வழக்கம். மனிதர்களைப் பாடுவது கேசாதிபாதம் எனப்படும். கூந்தல் தொடங்கிப் பாதம் வரையில் பாடப்படுவது கேசாதிபாதம்.
"பாதாதிகேசம்" என்பது ஒரு பெண்ணை உயர்வுநிலையில் அல்லது தெய்வநிலையோடு ஒப்பிடுவதை மறைமுகமாகக் குறிக்கும் சொல். வெறெந்தச் சொல்லிணைப் போட்டிருந்தாலும் பாடல் வரிகள் கேட்கமுடியாதபடி அழகிழந்து போயிருக்கும்.
பின்நாட்களில் நெரூடா கவிதைகளும் இந்தத் தன்மையைத் தொட்டன.
தமிழில், பொதுவெளியில் சொல்லத்தகாத சொற்களை வேறு பொருள் கொண்டு சொல்வதை 'இடக்கரடக்கல்' என்பார்கள். 'இடக்கர்' என்றால் சொல்லத்தகாத சொல். சொல்லத்தகாத சொல்லை அடக்கிக் கூறுதல் இடக்கரடக்கல். இதைத் தகுதிச் சொல்வழக்கு என்பார்கள். இது கவிதைகளுக்குத் தனியொரு அழகைச் சுமந்துவரும்.
பாதாதிகேசம் என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று எனக் கருதப்படுவது. பாதம் தொடங்கி கேசம் வரை பாடப்படும் பாடல்வகை பாதாதிகேசம் ஆகும். கடவுளையும் கடவுளைப் போன்றவர்களையும் இப்படிப் பாடுவது வழக்கம். மனிதர்களைப் பாடுவது கேசாதிபாதம் எனப்படும். கூந்தல் தொடங்கிப் பாதம் வரையில் பாடப்படுவது கேசாதிபாதம்.
"பாதாதிகேசம்" என்பது ஒரு பெண்ணை உயர்வுநிலையில் அல்லது தெய்வநிலையோடு ஒப்பிடுவதை மறைமுகமாகக் குறிக்கும் சொல். வெறெந்தச் சொல்லிணைப் போட்டிருந்தாலும் பாடல் வரிகள் கேட்கமுடியாதபடி அழகிழந்து போயிருக்கும்.
பின்நாட்களில் நெரூடா கவிதைகளும் இந்தத் தன்மையைத் தொட்டன.
When I cannot look at your face
I look at your feet.
Your feet of arched bone,
your hard little feet.
I know that they support you,
and that your sweet weight
rises upon them.
but I love your feet only because they walked upon the earth and upon the wind and upon the waters, until they found me.
மலரினும் மெல்லிது காமம் - சின்னம் வைத்தல்
![]() |
ஓவியம் : John Fernandas |
தமிழில், பொதுவெளியில் சொல்லத்தகாத சொற்களை வேறு பொருள் கொண்டு சொல்வதை 'இடக்கரடக்கல்' என்பார்கள். 'இடக்கர்' என்றால் சொல்லத்தகாத சொல். சொல்லத்தகாத சொல்லை அடக்கிக் கூறுதல் இடக்கரடக்கல். இதைத் தகுதிச் சொல்வழக்கு என்பார்கள். இது கவிதைகளுக்குத் தனியொரு அழகைச் சுமந்துவரும்.
கவிஞர் வாலி தனது பாடல் வரிகளில் இடக்கரடக்கல் பயன்படுத்தும் விதம் இரசிக்கத்தக்கது. சிலநேரங்களில் அந்தச் சொற்பிரயோகங்களே அவற்றுக்கு உயர்ந்ததொரு நிலையைப் பெற்றுத்தரும். உதாரணமாக, "மின் வெட்டு நாளில்" என்கிற பாடலில் "பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்" என்றொரு வரி வருகிறது. இரு பறவைகள் சேர்ந்து உறவு கொள்வதைச் சொல்வதற்கு பல வார்த்தைகள் இருந்தாலும், "தோள் சேர்த்தல்" என்கிற வார்த்தையில் ஒரு சிநேகமும் இணக்கமும் வெளிப்படுகிறது. காமம் அழகு பெறுகிறது.
அதேபோல, "தீ இல்லை புகை இல்லை" என்கிற பாடலில் ஒவ்வொரு வரிகளிலும் தமிழ் அழகு செழித்திருக்கும். "முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்னச் சின்னதாய்" என்கிற வரிகள் கவனிக்கத்தக்கது.
உறவு கொள்கையில் நகக்குறி இடுதல், பற்கள் பதித்தல் எல்லாம் காதலின் பெறுமதிமிக்க சின்னங்கள் என்பது வாத்ஸ்ஸாயனர் கூற்று. ஒருவரின் இன்மையின்போது அவற்றைப் பார்த்து இரசிப்பது காதலர்களுக்கு ஆறுதல் என்று சொல்கிறார். வாத்ஸாயனர் கூற்றுப்படி, நகக்குறி இடுதலில் எட்டு வகைகள் இருக்கிறது. பற்கள் பதிப்பதில் பத்து வகைகள் இருக்கிறது. எங்கெங்கு பதிக்கவேண்டும், எங்கெங்கு கூடாது என்றும் இருக்கிறது. இது பயிற்சியால் செய்யவேண்டிய கலை. காயங்கள் ஏற்படுத்தாமல் தடயங்கள் மட்டும் விட்டுச் செல்லல் பயிற்ச்சியால் மட்டுமே விளையக்கூடியது. ஆழ்ந்த காதல் உணர்வை வெளிப்படுத்த இடப்படும் அடையாளங்கள். காதலின் உச்சத்துக்கு துணையால் சூட்டப்பட்ட மரியாதைச் சின்னம் என்று காதலர்கள் மகிழ்ந்து கொள்வார்கள். அதைப் பார்க்கையில் அவர்களுக்கு மீண்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனத் தோன்றும்.
நம்முடைய கலிங்கத்துப் பரணியில் ஒரு பாடல் வருகிறது. பதிக்கப்பட்ட அடையாளங்களை யாரும் இல்லாத நேரம் பார்த்து பெண்கள் கண்டுகளித்து பெருமை கொள்வர் என்று சொல்கிறது பாடல்.
ஆனால் வாத்ஸாயனர் காமசூத்திரம் எழுதும்போது பெண்களின் இச்சைகளுக்கும் முன்னிலை கொடுத்தவர் என்பதால் பெண்கள் இடும் நகக்குறிகள் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். நம்முடைய படைப்புகளில் பெண்களின் இச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை என்கிற விமர்சனம் நீண்டகாலமாக இருக்கிறது. சினிமாப் பாடல் வரிகளில் வைரமுத்து வரிகள் இதை உடைத்தது.
நம்முடைய கலிங்கத்துப் பரணியில் ஒரு பாடல் வருகிறது. பதிக்கப்பட்ட அடையாளங்களை யாரும் இல்லாத நேரம் பார்த்து பெண்கள் கண்டுகளித்து பெருமை கொள்வர் என்று சொல்கிறது பாடல்.
ஆனால் வாத்ஸாயனர் காமசூத்திரம் எழுதும்போது பெண்களின் இச்சைகளுக்கும் முன்னிலை கொடுத்தவர் என்பதால் பெண்கள் இடும் நகக்குறிகள் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். நம்முடைய படைப்புகளில் பெண்களின் இச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை என்கிற விமர்சனம் நீண்டகாலமாக இருக்கிறது. சினிமாப் பாடல் வரிகளில் வைரமுத்து வரிகள் இதை உடைத்தது.
'நகக்குறி இடுதல்' என்பதிலேயே ஒருவித உடன்பாடு இருக்கிறது. இந்தச் சின்னம் வைத்தல் என்கிற சொல்லும் அத்தனை நயமானது.
படிப்பவர்கள், "வாங்கிக்கொண்டேன் உன்னை. ஆடை கொண்டதோ தென்னை" என்கிற வரிகளில் இருக்கும் அழகைக் கண்டறிய முனையலாம். வாலி குறும்புக்காரர்.
கருத்துகள்
கருத்துரையிடுக