முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாபியா பிடியில் தமிழகம் ?

ஜெயலலிதா என்ற ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.    கடந்த இரண்டு நாட்களாக ஜெயலலிதாவுக்கு தமிழக ஊடகங்களும், தேசிய ஊடகங்களும் தொடர்ந்து புகழ் மாலை செலுத்தி வருகின்றன.    நாடெங்கிலும் இருந்த தலைவர்களிடம் இருந்து அஞ்சலிகள் குவிகின்றன.  இவை எல்லாவற்றுக்கும் ஜெயலலிதா பொருத்தமானவரா என்றால் பொருத்தமானவரே.     ஆண்களின் உலகமான சினிமா மற்றும் அரசியலில், அனைத்து தரப்பினரையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறி, வென்று காட்டியவர்.    பராசக்தி திரைப்படத்தின் வசனத்தைப் போல “நெருப்பாற்றில் நீந்தியவர்” என்றால் அது மிகையில்லை.

jayalalitha-rare-photo-pics20
ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி என்பது தொடர்ந்த எதிர்ப்புகளாலேயே நடைபெற்றுள்ளது.  தொடக்க காலத்தில், எம்ஜிஆர் ப்ரூகளின் மருத்துவமனையிலிருந்த போது ஆர்.எம். வீரப்பன் கோஷ்டியால் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தார்.  பின்னாளில் அவர் அரசியலை விட்டே ஒதுங்கலாம் என்று நினைத்தபோது, எம்.நடராஜன் வீட்டில் நடந்த ஒரு சோதனையில் அவரது சட்டப்பேரவை ராஜினாமா கடிதத்தை திமுக கைப்பற்றி சபாநாயகரிடம் அளித்தது.    அப்போது புதிய வேகத்தோடு அரசியலில் இறங்கினார் ஜெயலலிதா.  ஒரு வேளை திமுக அந்த கடிதத்தை பொது வெளியில் வெளியிடாமல் இருந்திருந்தால், ஜெயலலிதா அரசியலை விட்டே ஒதுங்கியிருப்பாரோ என்னவோ.   அதே போல 1996 தேர்தலில் படுதோல்வி அடைந்ததும், ஜெயலலிதா அரசியலை விட்டு விலகி அவுட்லுக் போன்ற ஒரு ஆங்கில வார இதழை தொடங்க ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தார்.     அந்த சமயத்தில்தான், திமுக அரசு அவரை கைது செய்து 27 நாட்கள் சிறையில் அடைத்தது.
என்னை 27 நாட்கள் சிறையில் அடைத்த இந்த கருணாநிதியை சும்மா விட மாட்டேன் என்று சூளுரைத்தவர், எடுத்த பல்வேறு தந்திரோபாயமான நடவடிக்கைகளால் 1998 பாராளுமன்றத் தேர்தலில் 18 எம்.பி இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் எழுந்தேன் என்பதை உலகிற்கு பறைசாற்றினார்.   தன்னை கருணாநிதி சிறையில் அடைத்தார் என்பதை சற்றும் மறவாமல், 2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையாக கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தார்.    அது பெரிய பூகம்பத்தை கிளப்பி ஆட்சியே ஆட்டம் காணும் வகையில் மாறியதும், அதன் மீதான மேல் நடவடிக்கைகளை கை விட்டார்.
இது போல நெருக்கடியான சமயங்களில் எல்லாம் பீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்து பல்வேறு சோதனைகளை நேரடியாக எதிர் கொண்டுள்ளார். அவரது துணிச்சலே அவருக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தந்தது. அரசியலில் முதிர்ச்சி பெற்ற கருணாநிதி கூட எந்தத் தேர்தலையும் தனியாக சந்திக்க திராணியற்ற ஒரு நிலையில், பாராளுமன்றத் தேர்தல், மற்றும் சட்டமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் தனித்துப் போட்டி என்று முடிவெடுத்து, அதில் பிரம்மாண்டமான வெற்றியைக் கண்டதற்கு காரணம், அவரது துணிச்சல் மற்றும், தமிழக மக்கள் குறித்த புரிதல்.
எம்.ஜி.ஆர் என்ற ஆசான் என்று அவர் வெளிப்படையாக பேசி வந்தாலும், எம்ஜிஆரால் அவருடைய வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களையே அனுபவித்து வந்திருக்கிறார் என்பது விஷயம் அறிந்தவர்களுக்கு புரியும்.    திரைப்படத் துறையில் உள்ள ஆண்கள் மற்றும் எம்.ஜி.ஆர் மீதான கோபமே அவரை எல்லா ஆண்களையும் காலில் விழ வைத்து ரசிக்க வைத்தது.   மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஜெயலலிதா எம்ஜிஆர் காலத்தில் எப்படி நடத்தப்பட்டார் என்பது தெரியும்.    இது போன்ற பல்வேறு சம்பவங்களால் இந்த சமூகத்தின் மீது இருந்த கோபமே, அவரை ஊரே வேடிக்கை பார்க்கும் வகையில் வளர்ப்பு மகன் திருமணத்தை நடத்த வைத்தது. ஒரு வகையில் ஜெயலலிதாவின் குணாதிசயத்தை அவரின் வாழ்க்கை அனுபவங்களே தீர்மானித்தன எனலாம்.
jaya_20
இவை ஒரு புறம் இருந்தாலும், அவரின் மறுபக்கமானது மோசமாகவே இருந்தது.    ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் முதல், பாடகர் கோவன் கைது வரை, ஒரு மிக மோசமான சர்வாதிகாரியாகவே ஜெயலலிதா இருந்து வந்தார்.  ஜனநாயக மரபுகளையும், விதிகளையும் காற்றில் தூக்கிப் போடும் ஒரு நிர்வாகியாகவே இருந்து வந்தார்.   தற்போது ஜெயலலிதா இறந்து விட்டார் என்றதும், இந்த சம்பவங்கள் மறந்துபோய் அவர் புனிதராகி விட முடியாது.     ஜெயலலிதா மோசமான நிர்வாகியாக நடந்து கொண்டதற்கு பல்வேறு காரணங்களை தொடர்ந்து பட்டியலிட முடியும்.  ஏற்கனவே பகிரப்பட்டும் உள்ளது.
தற்போது உடல் நலக் குறைவால் மறைந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழலும், அவர் மறைந்ததாக அறிவிக்கப்பட்ட காலம் இரண்டுக்கும் இடையே நடைபெற்றுள்ள மர்ம முடிச்சுகள் என்றுமே அவிழ்க்கப்படாமல் போகலாம்.  ஆனால் அவர் இறந்தது அறிவிக்கப்பட்ட விதம், ஜெயலலிதாவை சுற்றி இருந்தது ஒரு கொள்ளைக் கூட்ட கும்பல் மட்டுமே என்பதை உணர்த்தியது.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் டாக்டர் சுப்ரமணிய சுவாமியால் “மன்னார்குடி மாபியா” என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்ட சசிகலா கும்பலால், ஜெயலலிதா பெற்றதை விட இழந்ததே அதிகம். 1996ம் ஆண்டு படுதோல்வி அடைந்ததற்கு சசிகலாவே காரணம் என்று வெளிப்படையாக அறிவித்து, சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றினார் ஜெயலலிதா.  ஆனால் ஒரு சில மாதங்களிலேயே வீடு திரும்பிய சசிகலாவை, வாசலில் நின்று இனிப்பு வழங்கி வரவேற்றார்.   சசிகலா மற்றும் அவர் உறவினர்களின் பேராசை காரணமாக மக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டது.  ஆனால் இவற்றையெல்லாம் ஜெயலலிதா பொருட்படுத்தியதாக தெரியவில்லை.  மக்களின் கருத்து பற்றி எவ்விதமான கவலையும் இன்றியே ஜெயலலிதா இருந்தார்.
2011ல் ஆட்சியை பிடித்ததும் மீண்டும் ஒரு முறை சசிகலா வெளியேற்றப்பட்டார்.   இம்முறை சசிகலா மட்டுமல்லாமல், அவரின் உறவினர்கள் பலரும் வெளியேற்றப்பட்டார்கள்.    ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்களான ஜெயா டிவி, மிடாஸ் டிஸ்டில்லரீஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில், சசிகலாவின் நம்பிக்கையை அப்போது பெற்றிருந்த சோ ராமசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரை நியமித்தார் ஜெயலலிதா.  சசிகலாவின் வெளியேற்றம் குறித்து பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா, “இன்னும் சிலர் இருக்கின்றனர். தவறு செய்து, துரோகம் புரிந்து, கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாக தொடர்பு கொண்டு, “நாங்கள் மீண்டும் உள்ளே சென்று விடுவோம்; மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களை பகைத்துக் கொண்டால், நாளை, நாங்கள் உள்ளே சென்ற பிறகு, உங்களை பழி வாங்கி விடுவோம். ஆகவே, எங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்’ என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி, தலைமை மீது சந்தேகம் வரும் அளவுக்கு பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு, நம்பி, அதன்படி செயல்படும் கட்சியினருக்கும் மன்னிப்பு கிடையாது. இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
capture
ஜெயலலிதா சசிகலாவை இவ்வாறு வெளியேற்றியதை அடுத்து, ஊடகங்களில் பல்வேறு கதைகள் கூறப்பட்டன.  ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதாகவும், அவரை இனி ஜெயலலிதா சேர்த்துக் கொள்ளவே மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகின.  ஆனால் மார்ச் மாதமே மீண்டும் சசிகலா போயஸ் தோட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இம்முறை ஊடகங்களில் வெளியான சசிகலாவின் மன்னிப்பு கடிதத்தில்,  சசிகலா இவ்வாறு கூறியிருந்தார்.
கடந்த மூன்று மாத காலமாக பலதரப்பட்ட பத்திரிகைகளில் என்னைப் பற்றிய பலவிதமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1984-ம் ஆண்டில் முதன்முதலாக அக்காவை (முதல்வர் ஜெயலலிதா) நான் சந்தித்தேன். அதன் பின்னர் எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. அவரும் என்னை தனது தங்கையாக ஏற்றுக் கொண்டார். 1988-ம் ஆண்டிலிருந்து அக்காவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே அவருடன் வசித்து வந்தேன். 
அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இரவு – பகல் என பாராமல் கடுமையாக உழைத்து வந்த அக்காவின் பணிச்சுமையை ஓரளவுக்காவது குறைக்கும் வகையில் அவருக்கு உதவியாக இருந்து, என்னால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்றுதான் விரும்பினேனே தவிர, வேறு எந்தவிதமான எண்ணங்களும் எனக்கில்லை.
போயஸ் கார்டன் இல்லத்தில் அக்காவுடன் இருந்தவரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவுக்குத்தான் எனக்குத் தெரிந்ததே தவிர, முழு விவரமும் தெரியவில்லை.
24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நான், கடந்த டிசம்பர் மாதம் அக்காவை பிரிந்து, அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவான பின்னர்தான், நடந்த உண்மைகள் முழுமையாக எனக்குத் தெரியவந்தன.
the-complete-st127621
கடந்த டிசம்பர் மாதம் அக்கா மேற்கொண்ட சில ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பிறகுதான், அதற்கு என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரிய வந்தது.
என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து, எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன்.
இவையெல்லாம் எனக்கு தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை. சந்தித்த நாள் முதல் இன்று வரை, அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் நான் அக்காவுக்குத் துரோகம் நினைத்ததில்லை.
என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்.
இவ்வாறு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவருக்குத் துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன். அக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை.
என்னைப் பொறுத்தவரை, அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை.
பொது வாழ்வில் பங்கு பெறவேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன். 
என் வாழ்க்கையை ஏற்கெனவே அக்காவுக்கு அர்ப்பணித்து விட்டேன். இனியும், எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்,” என்று சசிகலா கூறியுள்ளார்.
அக்காவுக்கு துரோகம் செய்தவர்களுடன் எனக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை அறிவித்திருந்த அதே சசிகலா, தற்போது தனது பரிவாரங்கள் புடைசூழ ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளை நடத்தி முடித்துள்ளார்.    ஜெயலலிதா தனது வாழ்க்கையில் பார்க்கவே கூடாது என்று நினைத்த நபர், சசிகலாவின் கணவர் நடராஜன்.   2011ல் சசிகலா மற்றும் சிலர் வெளியேற்றப்பட்ட போது, நடராஜன் மீது நில அபகரிப்பு வழக்குகளைப் போட்டு சிறையில் தள்ளியவர்தான் ஜெயலலிதா.    சசிகலாவின் தம்பி திவாகரனை தொண்ணூறுகளிலேயே வீட்டை விட்டு வெளியேற்றினார் சசிகலா.   அது மட்டுமல்லாமல் ஜனவரி முதல் மார்ச் 2012 வரை, திவாகரன் மீது பத்துக்கும் மேற்பட்ட நில அபகரிப்பு வழக்குகள்  போடப்பட்டன.   ஒவ்வொரு வழக்கிலும் திவாகரன் ஜாமீன் பெற்று வெளியே வரும் நேரத்தில் அடுத்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.   இப்படியொரு கடும் கோபத்தில் இருந்தார் ஜெயலலிதா திவாகரன் மீது. மற்ற மன்னார்குடி உறுப்பினர்களையும், ஜெயலலிதா 2012 முதல் அருகே சேர்த்ததே கிடையாது.
கைது செய்யப்படுகையில் நடராஜன்
கைது செய்யப்படுகையில் நடராஜன்
தன் கணவரையும், உறவினர்களையும், சிறையில் போட்டது பற்றிக் கூட கவலைப்படாமல் எனக்கு எல்லாமே ஜெயலலிதாதான் எந்று இருந்த சசிகலா, ஒரு வகையில் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அவரை பழிவாங்கும் வகையில் அவர் உடல் அருகே அனைத்து உறவினர்களையும் நிற்க வைத்தாரோ என்று தோன்றியது.
ஜெயலலிதாவின் உடல் அருகே நின்றிருந்த திவாகரன், பிரதமர் மோடி வந்தபோது அவருடன் உரையாடும் அளவுக்கு அதிகாரம் பெற்றுள்ளார்.  ஜெயலலிதா யாரையெல்லாம் வேண்டாம் என்று அறுவெறுத்து ஒதுக்கினாரோ, அவர்கள்தான் இன்று அதிகார மையத்தில் அமர்ந்திருக்கின்றனர் என்பது ஒரு பெரும் முரண்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத வகையில்தான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.    வெறும் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று செப்டம்பர் 22ல் தொடங்கிய சிகிச்சை ஒவ்வொரு நாளும் பல்வேறு வடிவங்களை அடைந்து இறுதியில் மாரடைப்பில் வந்து நின்றது.    ஒரு மாநிலத்தின் முதல்வர் குறித்த சிகிச்சை விபரங்களை 75 நாட்களாக, கொஞ்சமும் கூச்சப்படாமல் அப்போல்லோ  மற்றும் அரசு நிர்வாகங்கள் மறைத்து வந்தன.  கூசாமல் பொய்யுரைத்தன.   தமிழக ஊடகங்கள்,  அவருக்கு என்னதான் நோய் என்பதை புலனாய்வு செய்து கூட எழுதத் தெரியாமல், அப்போல்லோ அறிக்கையை அப்படியே வெளியிட்டு வந்தன.    ஒரு கட்டத்தில் அப்போல்லோ நிர்வாகம், விஷயம் கை மீறிப் போகிறது என்பதை அறிந்துதான் அதன் நிறுவனர் ரெட்டி, வெளிப்படையாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜெயலலிதா உடல் நிலை குறித்து சொன்னார்.
cy_cs1uuqaavejc
ஒரு கட்டத்தில் இனிமேல் பொய் சொல்ல முடியாது என்ற நிலை உருவாகியது.     ஜெயலலிதா உடல் நிலை மிகவும் மோசமானதும், அப்போல்லோ நிறுவனர்களில் ஒருவரான ப்ரீத்தா ரெட்டி தனியாக ட்வீட் மூலம் தகவல்களை வெளியிடத் தொடங்கினார்.   ஜெயலலிதா ஞாயிறு அன்று இரவே இறந்து விட்டார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.   இதையடுத்தே மிகவும் பரபரப்பானது அப்போல்லோ.
இறந்த ஒரு முதல்வர் குறித்து அறிவிப்பு வெளியிடுவதை விட, ஆட்சி அதிகாரத்தை கையில் வைக்கவே சசிகலா முனைப்பபாக செயல்பட்டுள்ளார். அதிமுக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களின்படி, தன் கணவர்  நடராஜனை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்துள்ளார்.    இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்காகவே வெங்கைய்யா நாயுடு அவசரமாக சென்னை வந்தார். நடராஜனையெல்லாம் முதல்வராக்க முடியாது என்று மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்த பின்னர், வேறு வழியின்றி பன்னீர்செல்வத்தை முதல்வராக்குவதற்கு சசிகலா சம்மதித்தார்.
ஒரு பிணத்தை மருத்துவமனையில் வைத்துக் கொண்டு, இரவு 1.30 மணிக்கு அனைத்து அமைச்சர்களுக்கும் நன்ளிரவில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த அடிப்படையில்தான்.   உடன் பிறவா சகோதரி என்று உருகும் சசிகலாதான் இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் சூத்ரதாரி.
21jaya3
இது தவிர போயஸ் தோட்ட வீடு உள்ளிட்ட சொத்துகளை அபகரிக்கவும் சசி கும்பல் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், எப்போதோ மன்னார்குடி வலையில் கொண்டு வரப்பட்டு விட்டார்.   ஏதோ ஒரு காரணத்தினால், இவர்கள் சொல்வது அனைத்தையும் கேட்கிறார்.  ஆனால் அண்ணன் மகள் தீபாவோ, இவர்கள் வார்த்தைக்கு நடனமாடுவதில்லை.  அதனால்தான் அவரை அப்போல்லோ மருத்துவமனை அருகிலோ, உடலடக்கம் செய்யப்பட்ட இடத்திலோ அனுமதி மறுத்தது.
உடல் அடக்கம் செய்யப்பட்ட அன்று, ஜெயாவின் அண்ணன் மகள் தீபா அவ்விடத்துக்கு சென்றபோது, சென்னை மாநகர இணை ஆணையர் மனோகரன் அவர்களை தடுத்து நிறுத்தி விட்டு, யாரோ ஒரு உயர் அதிகாரிகக்கு போனில் பேசியுள்ளார்.   அங்கிருந்து உத்தரவு வந்ததையொட்டி, தீபாவையும் அவர் கணவரையும் திருப்பி அனுப்பியுள்ளார்.    தீபாவை மன்னார்குடி கும்பல் அருகிலேயே சேர்க்காமல் இருந்ததற்கான காரணமே, இவர்கள் இழுக்கும் இழுப்புக்கு அவர் வரவில்லை என்பதுதான்.  மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், கடந்த ஒரு வாரமாகவே எம்.நடராஜனின் கட்டுப்பாட்டில் இருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஞ்சலி செலுத்தும் தீபா
அஞ்சலி செலுத்தும் தீபா
தற்போது சசிகலாவின் முன் உள்ள சிக்கல், கட்சியை எப்படி கைப்பற்றுவது என்பதே.   கட்சியை கைப்பற்றினால்தான், மீண்டும் அதிகாரம் செலுத்த முடியும்.  இருக்கும் ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களை பாதுகாக்க முடியும்.  போயஸ் தோட்ட வீட்டை கைப்பற்ற முடியும்.
அதிகாரம் கையை விட்டு போகக்கூடாது என்பதற்காகவே, அப்போல்லோ மருத்துவமனையில் இருந்து 75 நாட்களாக சசிகலா அனைத்து அதிகாரங்களையும் செலுத்திக் கொண்டிருந்தார்.    சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ், உளவுத்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் சசிகலாவின் தயவினால்தான் பதவிக்கு வந்துள்ளனர்.    ஆகையால் அவர்களின் விசுவாசம் எந்த இடத்தில் இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இதே போல தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று சசிகலா விரும்புகிறார்.    08.12.2016 அன்று கூட, உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் போயஸ் தோட்டம் சென்று சசிகலாவிடம் உத்தரவு பெற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    இந்த முயற்சிகளில் சசிகலா வெற்றி பெறுவாரா என்பது ஒரு புறம் இருக்க, பாஜக தமிழகத்தை கொல்லைப்புறம் வழியாக கைப்பற்ற எடுக்கும் முயற்சிகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் உடைத்து சின்னாபின்னப்படுத்தி, குறுக்கு வழியில் ஏதாவது செய்து மாநிலத்தில் கால் பதிக்க வேண்டும் என்பதுதான் மோடியின் எண்ணம்.    மேலும், அதிமுகவில் இருக்கும் 50 எம்.பிக்களும், 136 எம்எல்ஏக்களும், வரக்கூடிய குடியரசுத் தலைவர் தேர்தலில் மிக முக்கிய பங்கு வகிப்பர். அப்படிப்பட்ட சூழலில் தமிழக அரசு மற்றும் அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே மோடி விரும்புவார்.  ஆகையால் தற்போதைக்கு சசிகலா மோடியுடன் சமாதானமாக செல்வதையே விரும்புவார்.    ஆட்சியை கட்டுப்படுத்துவதில் மோடி வெல்வாரா அல்லது சசிகலா வெல்வாரா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.
வரக்கூடிய நாட்கள் செய்திகளுக்கு பஞ்சம் இல்லாமல் பரபரப்பாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....