முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Flitring - டெக்ஸ்ட் - ஆடியோ - விடியோ செக்ஸ் -

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எந்த நோக்கத்துக்காக கண்டு பிடிக்கப்பட்டாலும் அதில் செக்ஸையும் தூக்கி போட்டு அழகு பார்ப்பது உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. லேண்ட் லைன் காலத்திலேயே போன் செக்ஸ் ஆரம்பித்தது. ஆள் வச்சிகிட்டு இருப்பவர்கள் மட்டும்தான் போன் செக்ஸில் ஈடுபட முடியும் என்ற கவலை வேண்டாம் , காசு இருந்தால் போதும் போன் செக்ஸில் ஈடுபடலாம் என்ற சமூக அக்கறையுடன் இந்திய தொலைபேசி நிறுவனத்தின் ஆசியுடன் போன் செக்ஸிற்காக பல விளம்பரங்கள் தினசரியில் சக்கை போடு போட்டன.
5 நிமிஷம் பேசினாலே ஆண்குறி எகுறுகிறதோ இல்லையோ பில் எகிறி விடும் எகிறி . இந்தியாவில் இந்த சர்வீஸ்தான் முதல் 24/7 கால் செண்டராக இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.இதற்குப்பிறகான பேஜரில் அவ்வளவாக செக்ஸ் நர்த்தனம் நடக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு ஆசாமி இருந்து லவ் யூ மெசேஜிற்கு மேலே கிளுகிளுப்பு செல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்த குறைபாட்டால் பேஜரையே ஊத்தி மூட வேண்டியதாகி விட்டது. செக்ஸிற்கு இடமளிக்காத எந்த விஞ்ஞான கண்டு பிடிப்பும் நீண்ட காலம் “நிலைத்து” நிற்க முடியாது.
லேண்ட்லைன் காலத்தில் வைல்ட் செக்ஸ் அவ்வளவாக இருக்காது. சும்மா உன் குரலை கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு , ஒரு பாட்டு பாடேன் போன்ற மென் மொக்கைகள்தான் அதிகம். போனை வைக்கும்போது பதட்டத்துடன் திருட்டுத்தனமாக இடதும் வலதும் பார்த்துக்கொண்டு ப்ச் ப்ச் ப்ச் என மந்திரம் போல மூன்று முறை முத்தமிடுவார்கள்.லேண்ட்லைனிலும் பிரைவஸி இல்லாததுதான் காரணம். சில அட்வான்ஸ் அண்ணன்மார்கள் அந்த காலத்திலேயே என்ன கலர் பிரா போட்டிருக்க என்பது வரையும் கேட்டதுண்டு. அதற்கு எதிர் முனையில் , அம்மா இன்னிக்கி விரதம்டீ , ஒருவேளைதான், நாளைக்குதான் அஸைன்மெண்ட் எழுதணும் என சம்மந்தம் இல்லாமல் உளறுவது நடக்கும்.
காதலர்கள் மற்றும் முக்கியமாக கள்ளக்காதலர்களின் வரப்பிரசாதமாக வந்தது மொபைல் போன். வந்த புதிதில் இதைப் பற்றி புரிந்து கொள்ளாமல், இதன் அதிக பட்ச காமப் பாய்ச்சலை தெரிந்து கொள்ளாமல் இதை பாழாய்ப்போன பிஸினஸுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.மொபைல் நிறுவனங்களும் விழித்துக்கொள்ளவில்லை , காதலர்களும் கண்டுகொள்ளவில்லை.காதலும் காமமும் சுரத்தில்லாமல் மசமசவென சென்று கொண்டிருந்த கால கட்டம் இது.
செங்கல்லை கையில் வைத்து தூக்கிக்கொண்டு , மீட்டிங்க் அட் 6 ஓ கிளாக். தி ஃபைனல் ப்ரைஸ் ஈஸ் 75,000 , ஐ ஆம் இன் எ மீட்டிங்க் என வெட்டியாக மொபைலை அலைக்கழித்துக்கொண்டு இருந்தனர்.
இந்த காலத்தில் டெக்ஸ்டாப்பில் சாட் ரூம்கள் பல்கிப் பெருகின. சாட் ரூம்கள் முழுக்க ஆள் பிடித்தல் , பிடித்த பின் தனி சாட்டில் ஜொள்ள ஆரம்பித்து , கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து மூலமாகவே உடை களைந்து, உறுப்புணர்ந்து , உதடு , இதயம் போன்ற சிம்பல் போட்டு உச்சகட்ட கிளுகிளுப்பு வரை சென்றனர். என்ன பிரச்சனை எனில் , ஒரு முறை சாட் மூலம் உறவு கொள்ள வேண்டும் எனில் ,குறைந்தது 2 மணி நேரம் ஆகும்.
இண்டர்நெட் கனக்ட் ஆகி , சாட் ரூம் லோடாகி , ஆள் ஆன்லைக்கு வந்து வேலையை ஆரம்பிக்க வேண்டும். வந்ததும் வேலையை ஆரம்பித்து விட முடியாது. ஹாய் , ஹலோ போன்ற பல்வித நல விசாரிப்புகளுக்குப் பிறகு மெதுமெதுவாக சூடேத்தி முன்னேற வேண்டும். இந்த சாட் செக்ஸின் தலையாய சிக்கல் என்னவெனில், க்ளைமாக்ஸிலும் ஒரு கையால் டைப் செய்த வண்ணம் இருக்க வேண்டும்.
மொபைல் விலை குறைந்ததாலா , மொபைல் பிளான்களின் விலை குறைந்ததாலா? எப்போது என சரியாகத் தெரியவில்லை , மொபைல் சாதாரண மக்களின் கைகளில் புழங்க ஆரம்பித்தது.கூச்ச நாச்சம் எல்லாம் சிறகடித்து பறந்தது. பெண்களே சர்வ சாதாரணமாக கெட்ட வார்த்தை (ஆக்சுவலி அந்த நேரத்தில் நல்ல வார்த்தைதான் , ஒரு புரிதலுக்காக) எல்லாம் சொல்லி கொஞ்சி குலவி பேச ஆரம்பித்தார்கள். நைட் பிளான் , ஜோடி நம்பர் என பிளான் மாத்திக்கொண்டு , பிளான் போட்டு விடிய விடிய வெட் ஆனார்கள். அந்த கால பேசிக் போன் பேட்டரி நெடு நேரம் தாக்குப்பிடித்து “நிற்கும்”. எஸ் எம் எஸிலும் மென்காம மெசேஜ்கள் பறந்த வண்ணம் இருந்தன.
மொபைல் இண்டர்நெட் 2ஜி ல் இருந்து 3 ஜிக்கு மாறியது. புதுப்புது ஆப்ஸ் முளைத்தன. மிகப்பெரிய காமப் புரட்சி உண்டானது. சாட் செக்ஸ் , ஆடியோ செக்ஸில் இருந்து ஜிவ்வென உலகமே விடியோ செக்ஸுக்கு எகிறியது. தூரத்தில் பிரிந்து இருக்கும் தம்பதியினருக்கு விடியோ செக்ஸ் ஒரு வடிகால்தான் எனினும் , சின்னஞ்சிறுசுகள் முதல் தாத்தா பாட்டி வரை ஸ்கேண்டல்களும் பஃபர் ஆகிக்கொண்டே இருந்தன.
இந்த விஞ்ஞான முன்னேற்றங்களின் வழியே செக்ஸும் முன்னேறி இருக்க வேண்டும்.முன்னேறி இருக்கிறதா என்று பார்த்தால் , இல்லை என்றே சொல்லவேண்டி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் திருப்தி இல்லாமலேயே திரிந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் எதையோ தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். நம் அன்றாட காதல் , காம வாழ்கையை இந்த மொபைல் போனும் , இண்டெர்நெட்டும் கடுமையாக மாற்றி அமைத்துள்ளன.
மொபைலும் , இண்டர்நெட்டும் இல்லாத 20 வருடங்களுக்கு முந்தைய செக்ஸ் வாழ்கை இப்போது இல்லை. நமது ரொமாண்டிக் வாழ்கை முறையை இவை கடுமையாக இன்ஃளூயன்ஸ் செய்துள்ளன. இவைகளை இந்த விஷயங்களுக்கு அளவாக பயன்படுத்த தெரியாமல் மாட்டிக்கொண்டு விட்டோம்.
வேலை நேரம் , சாப்பிடும் நேரம் , டாய்லட்டில் இருக்கும் நேரம் என எப்போதும் யாருக்காவது லவ் யூ , கிஸ் யூ , ஹக் யூ சொல்லிக்கொண்டே இருக்கிறோம். நாள் முழுக்க ஃபோர் ப்ளே செய்து கொண்டு இருந்தால் எப்படி ? மெயின் பிளே புட்டுக்காதா ? ஆரம்ப காதல் காலத்தில் 24 மணி நேரமும் லவ் யூ , கிஸ் யூ , இன்னும் இன்னும் அனைத்து அங்க அவயங்களையும் விளித்து கிஸ்ஸறேன் , கடிக்கிறேன் என சொல்லி சொல்லி பழக்கப்படுத்தி விட்டு கல்யாணத்திற்கு பிறகு அதையெல்லாம் நிறுத்தினால்? பிரச்சனைதான், அது தேவைப்பட்டுக்கொண்டேயிருக்கும். கணவனோ மனைவியோ இந்த விர்ச்சுவல் ஃபோர் ப்ளேயை நிறுத்தி விட்டால் , அந்த இடத்திற்கு அடுத்தவர் சுலபமாக வந்து விடுவார். வருபவர் சேவை நோக்கோடா வருவார் ? சில தினங்களில் படுக்கையை பகிர்வது வரை கொண்டு விடும்.அதோடு விட்டால் பரவாயில்லையே ! பிளாக்மெயில் , திருட்டு , கொலை என இன்ன பிற க்ரைம்களில் கொண்டு விட்டுவிடும்.
இப்போதைய லைஃப் ஸ்டைலில் அனைத்து வகையான செக்ஸும் தேவைப்படுகிறது. நாம் என்ன நினைத்துக்கொள்கிறோம் என்றால் , சாட் செக்ஸ் , போன் செக்ஸ் , விடியோ செக்ஸ் எல்லாம் மெயின் செக்ஸை அடையும் பாதைகள்தான் . மெயின் செக்ஸை அடைந்து விட்டோம் என்றால் இவையெல்லாம் தேவையில்லை என நினைத்து நிறுத்திக்கொள்கிறோம்.அல்லது நம் அன்றாட வேலை பளு இரவில் எப்போதாவது நடக்கும் 10 நிமிட களியாட்டத்தோடு உறங்க வைத்து விடுகிறது.
ஆனால் மற்ற பழக்கப்பட்ட ஆசைகள் அடிமனதில் உறங்காமல் கனன்று கொண்டிருக்கின்றன. யாரேனும் எப்போதேனும் லேசாக கிளறி விட்டால் விழித்துக்கொள்கின்றன.லவ் யூ , மிஸ் யூ , கிஸ் யூ மெசேஜ்கள் வந்து கொண்டேயிருக்க வேண்டும். யாரேனும் எப்போதும் இவைகளை சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று அடிக்ட் ஆகி விட்டோம்.
போன் செக்ஸ் , விடியோ செக்ஸில் கற்பனை அதிகம். என்ன வேண்டுமானாலும் பேசலாம் , எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீட்டிக்கலாம்.இதில் ஈடுபட்டு ஈடுபட்டு இதற்கு ஏற்ப மாஸ்டர் ஆனவர்கள், நேர் செக்ஸின்போது தடுமாறி விடுகிறார்கள். இரண்டிற்குமான விதிமுறைகள் வேறு.போன் செக்ஸோ விடியோ செக்ஸோ கடைசியில் வெறுமையில்தான் முடியும்.
இவ்வகை செக்ஸின் போது எதிர்பார்ப்பு இன்னும் இன்னும் எகிறும்.நேரில் இப்படி செய்ய வேண்டும் , அப்படி செய்ய வேண்டும் என மனம் பல விதமாக ஏங்கித் தவிக்கும்.கண்டதையும் ப்ரோக்ராம் செய்து வைத்துக்கொள்ளும். நேரில் சந்திக்கும்போது , சூழ்நிலை வேறு மாதிரி இருக்கும். இதுதான் ரியாலிட்டி. விடியோவில் டூ பீஸுடன் மாடல் போல வளைந்து நெளிந்து , பேபி , மை பேபி என கொஞ்சிய அதே பெண் நேரில் வேறு மாதிரி நடந்து கொள்வாள். என் உயிரே , உன் அடிமை நான் என கொஞ்சி மருகியவன் , நேரில் கெடா மாடு போல நின்று கொண்டிருப்பான்.
விடியோவில் மார்பகம் முதல் புட்டம் வரை அனைத்தும் பெரிது பெரிதாக தெரியும் . கேமரா ஆங்கிள் , லைட்டிங்க் பொறுத்து அனைத்தும் இண்டர்நேஷனல் குவாலிட்டியில் மின்னும். வெப் கேமரா அருகே கொண்டு வந்து காட்டப்படும் ஆண்குறி உலகிலேயே பெரிய சீற்றமான ஆண்குறியென தெரியும். நேரில் ,இந்த குறியும் மற்றொரு குறியே தான்.
மேலும் விடியோ செக்ஸ் மற்றும் ரியல் செக்ஸ் இரண்டிற்கும் அடிப்படையில் டெக்னிக்கல் வித்தியாசம் உள்ளது. விடியோ செக்ஸில் இருவரும் தத்தமது கைகளையே உபயோகிக்கின்றனர்.குறியும் கையும் நட்பாகி , எப்படி ஹேண்டில் செய்வது ? எப்போது ஆர்கஸம் வர வைப்பது என குத்து மதிப்பாக செட் ஆகி விடும்.இதையே பொழப்பாக வைத்துக்கொண்டு இருந்தால் , இந்த ரிதமிற்கு செட் ஆகி , நேரில் ரியல் செக்ஸின் போது இரு குறிகளும் தடுமாறும்.ஆண்களுக்கு எரக்டைல் டிஸ்ஃபங்க்‌ஷன் , ப்ரீ மெச்சூர் எஜாக்குலேஷன் போன்ற சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.
பெண்களுக்கு திருப்தியின்மை , ஆர்கஸம் வர தாமதமாவது , லூப்ரிகண்டே சுரக்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் வரலாம்.
ஒரே வீட்டில் இருந்தாலும் ,கொஞ்ச நேரம் வாட்ஸப்பில் மெசேஜ் பண்ணிகிட்டு , கொஞ்ச நேரம் விடியோ சாட் பண்ணிட்டு அப்புறம் நேர்ல இண்டர்கோர்ஸ்க்கு வரலாம் என நினைக்கும் ஜோடிகள் தற்போதே முளைக்க ஆரம்பித்து இருப்பார்கள்.
நமக்கே தெரியாமல் மொபைல் மற்றும் இண்டெர்நெட்டால் 24 மணி நேரமும் செக்ஸ் சிந்தனையோடே இருக்கிறோம்.இது ஆரோக்கியமானதல்ல . செக்ஸுக்கென தனிப்பட்ட நேரம் இருக்கிறது. அப்போது ஃபோர் பிளேவை ஆரம்பித்தால் போதும். அது வரை தமது ஜோடியை சுத்தமாக கண்டு கொள்ளாமல் இருக்காமல் , அன்பு மற்றும் காதலான மெசேஜ்கள் அனுப்பலாம்.
ஜோடியை பிரிந்து தூரத்தில் இருப்பவர்கள் , வெகு அரிதாக போன் செக்ஸோ , விடியோ செக்ஸோ முயற்சி செய்யலாம், தவறில்லை.தங்கள் ஜோடி திரையில் வந்த உடன் ஜட்டியை கழட்டிவிடுவதோ , பிரா மற்றும் பேண்டியை கழட்டி போடுவதோ வேண்டாம்.கொஞ்சி கொஞ்சி பேசிக்கொள்ள ஆயிரம் இருக்கிறது அல்லவா ? அதைச் செய்யுங்கள். நேரில் சந்திக்கையில் கூட்டு வட்டி போட்டு வேலையை முடித்துக்கொள்ளுங்கள்.
அராத்து

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...