முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெயலலிதா- துயரம் நிரம்பிய சகாப்தம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5ம் தேதியன்று இரவு 11.30 மணிக்குப் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக்குறிப்பு கூறியது. அவரைப் போலவே, அவருடைய ஆட்சிக்காலத்தைப் போலவே அவருடைய மரணமும் கேள்விக்குரியதாய் ஆகியிருக்கிறது. 

72 நாட்கள் மருத்துவமனை வாசம், எவராலும் பார்க்க முடியாமல் அவரை வைத்திருந்தது என்று எல்லாமே மர்மமுடிச்சுகளாய் இன்று தமிழக மக்கள் முன் கேள்விகளாய் நிற்கின்றன. ஜெயலலிதாவை இரும்பு மனுஷி என்று அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளில் பலர் எழுதியதைக் காண முடிந்தது. உண்மையில் ஜெயலலிதா இரும்பு மனுஷியா? 

ஆம்! அவர் இரும்பு மனுஷிதான். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வண்டியிலிருந்து ஜானகியின் உறவினர் நடிகர் தீபனால் இறக்கிவிடப்பட்ட ஜெயலலிதா பின்னாளில் எம்.ஜி.ஆரின் கட்சிக்குப் பொதுச் செயலாளரானார். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை செய்து முடிக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. அதனால்தான் இரும்பு மனுஷி என்று பெயர் பெற்றிருக்கிறார். 

ஆனால், அவர் எதையெல்லாம் நினைத்தார், செயல்படுத்தினார். அந்த இரும்பு மனம் கொண்டு அவர் எப்படிச் செயலாற்றினார் என்பதை விருப்பு வெறுப்பின்றி அலசிப் பார்ப்பது அவசியம். ஏனெனில் மரணம் எல்லா கசப்புகளையும் மறந்து விடச் செய்யும் மாமருந்தல்ல. ஜெயலலிதா என்கிற தலைவருக்கு பல பரிமாணங்கள் உண்டு.

’ரோஷாமான், ‘விருமாண்டி’ திரைப்படங்களில் ஒவ்வொரு வர் கோணத்தில் பார்த்தால் ஒவ்வொரு கதை என்பது போல ஒரு கார்ப்பரேட் மனிதருக்கோ, சாதி அபிமானம் கொண்ட ஒரு பார்ப்பனருக்கோ, ஓர் ஏழைக்கோ, ஒரு அரசு ஊழியருக்கோ, ஓர் ஆசிரியருக்கோ, ஆட்டோ ஓட்டுபவர் ஒருவருக்கோ நினைவி லிருக்கும் ஜெயலலிதா ஒரே ஜெயலலிதா அல்ல. தமிழகத்தின் தலைவர்களில் இப்படிப்பட்ட தன்மை கொண்டவர் ஜெயலலிதா மட்டுமே. அவர் வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறாய் இருந்தார் என்பதல்ல. 

அவரவர் தங்களுக்குத் தெரிந்த முகத்தை மட்டுமே பார்த்தனர். ஒட்டுமொத்த ஜெயலலிதா என்பவர் என்னவாக இருந்தார் என்பதுதான் நாம் அலசவேண்டியது. ஓர் அரசு ஊழியரைக் கேட்டால் அவருக்கு ஜெ. குறித்து நினைவில் இருப்பது என்னவாக இருக்கும். ஒரு லட்சம் பேரை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியதுதான் நினைவில் இருக்கும். 

திமுக ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் என்பதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களை கேளுங்கள். அவர்களுக்கு ஜெ. குறித்த மனப்பதிவு அவ்வாறே இருக்கும். ஆனால், சரிதாவைக் கேளுங்கள். தனக்கு வேலை தர முன்வந்த உத்தமி அவர் என்பார். யார் இந்த சரிதா? ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென வேண்டிக்கொண்டு காணிக்கையாக தனது நாக்கை வெட்டிக்கொண்டவர். அவருக்கு அரசு வேலையை அளிக்க முன்வந்தார் ஜெ. சரிதாவைப் பொறுத்தவரை ஜெ. அவருக்கு வாழ்வளிக்க முன்வந்த தெய்வம்.

பெண்களுக்கு இலவச சைக்கிள் தந்தவர் என்று கிராமப்புறங்களில் பயனாளிகளால் நினைக்கப்படுவார். ஆனால், அதே பெண்களில் பலரது வாழ்வில் கடும் பொருளாதாரச் சுமையை உருவாக்கி, குடும்பத்தில் சிக்கல்கள் வரக் காரணமாக இருந்த டாஸ்மாக்கை வீதிக்கு இரண்டு என்று திறந்தும் வைத்தார். மது ஒழிப்பு என்பதை அனைத்துக் கட்சி களும் பெரும் பிரசாரமாக முன்வைத்தபோதும் டாஸ்மாக் மட்டும் கோடிகளை குவித்தது. 

டாஸ்மாக் ஒழிப்புப் பிரசாரப் பாடல் பாடிய கோவனை தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது உச்சம் எனலாம். கோவனின் பாடலில் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் சொற்கள் இருந்தன என்றாலும் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யும் அளவுக்கான கொடிய குற்றமா அது என்கிற கேள்வி நமக்கு எழாமல் இல்லை. பெண்களை இழிவுபடுத்தக்கூடாது, அதனால்தான் இந்த கைது என்று வைத்துக்கொண்டால், இன்னொரு பெண்ணான சந்திரலேகா ஐ.ஏ.எஸ். மீது அமிலம் வீசப்பட்டதும் இதே ஜெயலலிதாவின் ஆட்சியில்தான். 

ஜெ. ஆட்சியில்தான் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டன. காவல் நிலையம் செல்ல பெண்களுக்கு இயல்பாக இருக்கக்கூடிய அச்சத்தைப் போக்கி இக்காவல் நிலையங்கள் நோக்கி புகாரளிக்க பெண்களை வரவழைத்தது ஜெ. அரசின் முக்கியமான நகர்வு எனலாம். ஆனால், பெண்கள் குடும்ப வன்முறை தாங்காமல் கணவன் மீது புகார் தந்தால், ‘புருஷனை அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும். 

அதானே வாழ்க்கை’ என்று அங்குள்ள பெண் காவலர்கள், பஞ்சாயத்து செய்யும் ஆலமரங்களாக அந்த காவல் நிலையங்கள் மாறிப்போயின. ஒரு பக்கம் பெண்களுக்கு காவல் நிலையங்கள், மறுபக்கம் அதே ஜெ. ஆட்சியில்தான் வனக்காவலர்களும், காவலர்களும் இணைந்து நடத்திய வாச்சாத்தி கொடூரம் நிகழ்ந்தேறியது. பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். அவர் ஆட்சியில்தான் திருக்கோவிலூரில் இருளர் இனப் பெண்களை காவலர்கள் வன்புணர்வு செய்தனர். சிதம்பரம் பத்மினி, ரீட்டாமேரி என தமிழகம் மறக்க முடியாத கொடூரங்கள் காவல் நிலையத்திலும், சிறையிலும் நிகழ்ந்தன. 

ஜெ. தன் இரும்பு மனுஷி பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டதே காவல்துறையை வைத்துத்தான் என்றே சொல்ல வேண்டும். காவல்துறையை ஏவல்துறையாக்கியே நள்ளிரவில் திமுக தலைவரை கைது செய்தார். இதை எதிர்த்து சென்னையில் நடந்த திமுக பேரணியில் வந்தவர்கள் மீது அயோத்தியாக்குப்பம் வீரமணி குழுவினர் தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்தனர். 

அன்றைய வன்முறையில் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரி ஒருவர் பெண் பத்திரிகையாளரை தாக்கினார்.  தனக்குப் பிடிக்காத நடராஜனை பழிவாங்க செரினாவை கஞ்சா வழக்கில் கைது செய்தார். ஒத்துவராமல் போன வளர்ப்பு மகனை பழிவாங்கவும் அதே கஞ்சா வழக்குதான். சட்டக்கல்லூரி மாணவர்களின் விடுதிக்குள் புகுந்து காவல்துறை செய்த அராஜகம் அன்றைக்கு அத்தனை பரபரப்பானது. 

அவர் மூன்றாம் முறை ஆட்சிக்கு வந்தபோது பரமக்குடியில் தலித்துகள் ஏழுபேர் கொல்லப்பட்டனர். அதில் ஆறு பேரை துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை கொன்றது. அடுத்த ஆண்டு கூடங்குளத்தில் அமைதி வழியில் போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி அடக்குமுறையை ஏவியது. காவல்துறையை தன்வசம் வைத்திருந்தார் ஜெ. ஜெ.வின் இரும்பு மனுஷி பிம்பத்திற்கு இன்னொரு காரணம் அவர் ஆட்சியின் என்கவுன்டர்கள். 

மனித உரிமை குறித்த எந்தக் கவலையுமில்லாத சாதாரண மக்களுக்கு ரவுடிகளையோ அல்லது கொள்ளைக்காரர்களையோ என்கவுன்டர் செய்வது என்பது வீரத்தின் அடையாளம். எனவே வீரப்பன் தொடங்கி வெங்கடேசப் பண்ணை யார், வேளச்சேரியில் வடமாநிலத் தொழிலாளர்கள் என்று தொடர்ந்த என்கவுன்டர்கள் இரும்பு மனுஷி பட்டத்திற்கு உதவின. அண்மையில் நடந்த ராம்குமாரின் சர்ச்சைகுரிய மரணம் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்தன. 

ஆனால், மிக முக்கியமான இவ்விஷயங்களில் எந்த நகர்வும் மேலிடத்தின் உத்தரவு பெறாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. தலித்துகள் மீது வன்முறையை தூண்டும் படியாகப் பேசினார் என பாமக தலைவர் ராமதாஸை கைது செய்தார் ஜெ. பல தலித் தலைவர்களும் பாராட்டிய ஜெ.யின் இச்செயல் உண்மையில் அன்றைக்குத் தேவையாக இருந்தது. இது ஜெ.யின் ஒரு முகம். ஆனால், இக்கைது ஒருபுறம் நிகழ்ந்தாலும், தர்மபுரி இளவரசனின் மர்ம மரணத்தில் அரசு நடந்துகொண்ட விதம், யாரையோ காப்பாற்றுவதாகவே இருந்தது. 

இன்றுவரை தர்மபுரியில் மூன்று ஊர்களை எரித்தவர்கள் எந்தத் தண்டனையும் இல்லாமல் சுதந்திரமாகவே நடமாடுகின்றனர். இளவரசனுக்குப் பின் கோகுல்ராஜ், சங்கர் என தொடரும் தலித் ஆண்களின் கொலையும், கோகுல்ராஜ் கொலையை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியாவின் மர்ம மரணமும், பெண்களின் உயிரைக் கேட்கும் சாதி ஆணவக் கொலைகளும் பெருகியபோதும் ஜெ.  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

இதுவும் அவர் முகம்தான். இதில் எது உண்மையான முகம்? 
ஜெயலலிதாவின் நடவடிக்கைகளிலேயே உச்சம் என அனைவரும் பாராட்டுவது காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்ததுதான். உண்மையில் சங்கரராமன் கொலை வழக்கில் அந்தக் கைது நடக்குமென யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. யாரும் எதிர்ப்பாராததைச் செய்வார். அதுதான் ஜெயலலிதா. பார்ப்பனர்களின் தலைமை என்று அறியப்படும் ஒருவரை கைது செய்தார் ஜெ. ஆனால், சட்டமன்றத்தில் ‘நான் பாப்பாத்தி’ என பெருமிதப்பட்டவர். அத்தோடு மூடநம்பிக்கைகளில் ஊறியவராகவும் திகழ்ந்தார். 

அவருடைய ஆட்சியில் மழைவேண்டி கோயில்களில் யாகங்கள் நடத்தப்பட்டன. கோயில்களை நிர்வகிக்க வேண்டிய இந்து அறநிலையத் துறை இதற்கான சுற்றறிக்கையை பிறப்பித்தது. அறிவியல் முன்னேறிய இந்தக் காலத்தில் மழைவேண்டி யாகம் வளர்ப்பதும், அதில் அமைச்சர்கள் பங்குகொள்வதும் நிகழ்ந்தன. ஜெயலலிதாவின் பிறந்தநாளன்றும், அவர் சிறை சென்றபோதும் அமைச்சர்கள் மண்சோறு உண்டனர், அங்கப்பிரதட்சணம் செய்தனர், அலகு குத்திக்கொண்டனர். இதையெல்லாம் ஜெ. தடுக்கவில்லை மாறாக விசுவாசத்தை 
அளவிடும் கருவியாக பாவித்தார். 

ஜெ. ஹெலிகாப்டரில் பறந்தாலும், தரையில் நின்று முதுகு வளைத்து கும்பிடு போடுபவர்களாக, அவர் காலில் வீழ்பவர்களாக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். அத்தனை ஆண்களையும் தன் காலில் விழ வைத்தவர் என்று பெண்கள் பலர் அதைக் கொண்டாடவே செய்கின்றனர். பெண்களின் இந்த உளவியல் புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், காலில் விழ வைப்பதா பெண்ணியம்? ஜெ. சிறைக்குச் சென்றபோது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்றபோது அழுதுகொண்டே பதவியேற்றனர். 

ஆனால்,  தங்கள் தலைவியின் உயிரற்ற உடல் நகரில் ஒருபுறம் இருக்கையில் எச்சலனமும் இல்லாமல் அத்தனை பேரும் இந்த முறை பதவியேற்றனர். இதற்காக சமூக வலைத்தளங்களில் அமைச்சர்கள் குறித்த விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், பதவியேற்ற அன்றைக்கு அவர்கள் யாரிடமும் தங்கள் விசுவாசத்தை அழுது நிரூபிக்கத் தேவையில்லை. பயம் விலகியவர்களாக இருந்தனர். அன்பினால் சேரும் மனிதர்களுக்கும் அச்சத்தால் சேரும் மனிதர்களுக்கும் வேறுபாடு உண்டுதானே? ஜெ. மரணத்திற்காக உண்மையில் அழுதவர்கள் கடைக்கோடி அதிமுக தொண்டர்கள்தான். 

உண்மையில் அவர்கள் தங்கள் தலைவிக்காக அழுதனர். ஏதோ ஒரு வகையில் ஜெயலலிதா அவர்களின் உள்ளங்களை தொடவே செய்திருக்கிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. கண்ணில் நீரோடு அவருடைய சமாதியில் திரளும் கூட்டத்தையும் பார்க்க முடிகிறது. அவர்கள் நம்புகிறார்கள், தங்கள் தலைவியைப் போல் ஒருவர் இனி பிறக்கப்போவதில்லை என. ஜெயலலிதாவின் ஆரம்பகாலத்திலிருந்து அவரை உற்று கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். அவர் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் என்று நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள். 

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாகப் பிரிந்து ஜெ.அணி, ஜா.அணி என்றானது. அப்போது தன்னோடிருந்த நாவலர் நெடுஞ்செழியன் பின்னாளில் நால்வர் அணி கண்டபோது அவர்களை ‘என் உடலிலிருந்து உதிர்ந்த ரோமங்கள்’ என்றார். இக்கடுமையே அவரை கடைசிவரை வழிநடத்தியது. ‘ஜானகிதான் எம்.ஜி.ஆரை மோரில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டார்’ என்று குற்றம் சாட்டினார். 

அதன்பின் 1989ல் நடந்த தேர்தலில் 27 சட்டமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரானார். சந்திரசேகர் பிரதமராயிருந்த சமயம், உள்துறை அமைச்சராய் இருந்த சுப்பிரமணியசாமியின் துணையோடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று காரணம் காட்டி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பின் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த ராஜீவ்காந்தி கொல்லப்பட்டவுடன் கிளம்பிய அனுதாப அலையில் அதிமுக-காங்கிரஸ் அணி ஒட்டுமொத்தமாய் வென்றது. 

முதன்முதலில் முதல்வரானார் ஜெயலலிதா. அந்த ஐந்தாண்டு ஆட்சியில் தமிழகம் கண்டவை யாரும் எதிர்பாராதவை. விமர்சித்து எழுதியதற்காக ஒரு வாரப்பத்திரிகையின் அலுவலகம் தாக்கப்பட்டது. ஆடிட்டர் சண்முக சுந்தரம் தாக்கப்பட்டார். குடந்தை மகாமகத்தில் கலந்துகொள்ள ஜெயலலிதாவும் சசிகலாவும் சென்றதால், கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கரசேவையை ஆதரிக்கும் அளவுக்குச் சென்றார் ஜெயலலிதா. 

மிக ஆடம்பரமாக நடந்த வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் முகம் சுளிக்க வைத்தது. வருமானவரி சோதனையில் கைப்பற்றப்பட்ட புடவைகள், நகைகள், செருப்புகள் என அந்தக் காட்சி தமிழகம் முழுவதும் ஓர் அலையாய் பரவியது. கண்ணில்பட்ட இடத்தையெல்லாம் தங்களுக்கு சொந்தமாக்கிக்கொண்ட சசிகலாவின் உறவினர்கள், அவர்களுக்கு இடம் கொடுத்த ஜெ. என தொடர்ந்து நடப்புகளை கவனித்து வந்த மக்கள் அடுத்து வந்த தேர்தலில் இரு தொகுதிகளில் நின்ற ஜெயலலிதாவையே தோற்கடித்தனர் என்பது வரலாறு. 

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. ஐந்தாண்டுகளுக்குப் பின் அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெ, மதமாற்ற தடைச் சட்டம், ஆடுகோழி பலியிட தடைச்சட்டம் என தொடர்ந்து தனது இந்துத்துவ திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கினார். தர்மபுரி பேருந்து எரிப்பில் மூன்று மாணவிகள் உயிரிழந்ததை மறக்க முடியுமா? திமுக, அதிமுக என தொடர்ந்த சுழற்சியில் அதிமுக மீண்டும் ஆட்சியை 2010ல் கைப்பற்றியது. 

இம்முறையும் திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கப்போவதாக அறிவித்தார். அறிவுச்சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை அவர் நினைத்தபடி மருத்துவமனையாக்கிவிட்டார். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த முடியாதென அவர் காட்டிய பிடிவாதத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். 

முதல் நான்காண்டுகளுக்கு மக்கள் விரோதச் செயல்கள் அனைத்தையும் செய்து விட்டு இறுதியாண்டில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதை ஜெ. அரசு தன் வழக்கமாக்கிக்கொண்டது. இந்த இறுதி ஓராண்டோ, சில மாதங்களோதான் ஜெயலலிதாவின் ஆதரவு மனநிலை ஓங்கும் காலம். தமிழக மக்களின் மறதியே ஜெயலலிதாவின் மூலதனம். ஜெயலலிதாவின் அரசை மக்கள் மன்னித்து மீண்டும் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றினர். 

கருத்துச் சுதந்திரம் காற்றில்போனது. விமர்சிக்கும் பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குகள் போடப்பட்டன. செய்தி வாசிப்பாளர் மீதுகூட வழக்கு போடும் அவலமும் நிகழ்ந்தேறியது. பத்திரிகையாளர் சந்திப்புகள் நின்றுபோயின. ஜெ. தன் இறுதிக்காலத்தில் மக்களை சந்திக்கவே இல்லை. யாராலும் மறக்கமுடியாத நிகழ்வாக செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்ட நிகழ்வு நடந்தது. சென்னையை மூழ்கடித்து உயிர்களை கொன்ற ஏரி திறப்பை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் தவிர்த்திருக்க முடியும்.  

நிர்வாகச் சீர்குலைவின் உச்சகட்ட எடுத்துக்காட்டு இந்நிகழ்வு. அத்தினங்களில் அரசின் செயலற்ற தன்மை அதிர்ச்சியூட்டியது. அப்போது மக்கள் தங்களுக்குள் உதவிக்கொண்டு அச்சூழலை கடந்துவந்தார்கள்.  ஆனால் நிவாரணப் பொருட்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது அதிமுக அரசு. 2016 தேர்தலில் ஜெ பிரசாரத்தில் சுடும் வெயில் காரணமாக  பலர் மரணித்தனர்.

ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றில், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிசெய்தார் என்பது மிக முக்கியமான அவருடைய பங்களிப்பு. அம்மா உணவகங்கள் ஏழைகளுக்கு நிச்சயமாக பயனுள்ள திட்டம்தான். ஜெயலலிதா இதுபோன்ற சில திட்டங்களால் எளிய மக்களால் என்றென்றும் நினைக்கப்படுவார். ஏழை எளிய மக்கள் கொள்கை கோட்பாடு, அரச அராஜகம், மனித உரிமை குறித்தெல்லாம் அறியாதவர்கள். அன்றைய பாட்டிற்காய் உழைக்கும் அன்றாடங்காய்ச்சிகளுக்கு இலவச அரிசியும், அம்மா உணவகங்களும் ஜெயலலிதாவை உய்விக்க வந்தவராகவே பார்க்க வைக்கும். 

இந்த எளிய மக்களே ஜெயலலிதாவின் பலம். ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கை மிகத் துயரமான ஒன்றுதான். தனிமை கொல்லும் வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட தனிமை இது. சோபன் பாபுவுடனான ஏழு ஆண்டு வாழ்க்கையை அவர் மறைத்ததில்லை. ‘எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று எண்ணினேன்’ என்று கூறுமளவுக்கு தன் வாழ்வை திறந்த புத்தகமாக வைத்திருந்தார். தமிழக மக்களுக்கு அவர் குறித்த கலாசாரப் போலீஸ் பார்வை இல்லை என்பதே ஆறுதலான விஷயம். 

பணம், கை சொடுக்கினால் வந்து நிற்கும் அதிகாரம் எல்லாமிருந்தும் ஜெ. மகிழ்ச்சியாய் வாழ்ந்தாரா என்பது சந்தேகம்தான். உற்ற தோழியாக்கிக்கொண்ட சசிகலாவும் துரோகித்தபோது வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னார் ஜெ. அதன்பின் மன்னித்து மீண்டும் இணைத்துக்கொண்டார். இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவமாகத்தான் திகழ்ந்தார் ஜெ. ஆங்கிலப் பேட்டியொன்றில் ஜெ. இப்படிக் கூறுகிறார். “என் தனிப்பட்ட வாழ்வு தோல்வியடைந்த ஒன்று. எம்ஜிஆருடனான என் உறவு சட்டரீதியானதல்ல. 

ஆகவே எம்.ஜி.ஆர்தான் என் அடையாளம் என்று நிறுவ எண்ணினேன். அதற்காகவே அரசியலுக்கு வந்தேன். ஒரு பெண் முதலில் மகளாகப் பிறக்கிறாள். பின் மனைவியாகிறாள். தாயாய் மரிக்கிறாள். ஆனால், நான் மனைவியாக வாழவே இல்லை. நிச்சயம் தாயாகத்தான் மரிப்பேன்”. ஜெ ஆணாதிக்கத்தை எதிர்த்து நின்ற பெண்களின் அடையாளம் என பல பெண்கள் எண்ணிக்கொண்டிருக்க, ஓர் ஆண்தான் தன் அடையாளம் என நிறுவவே அரசியலுக்கு வந்ததாகச் சொல்லும் இக்கூற்று ஆய்வுக்குரிய ஒன்று.

சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’ கதையில் ‘ஜீவா’ என்கிற கதாபாத்திரம் உண்டு. அந்த ஜீவாவை யாருமே பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், ஜீவாதான் நாட்டையே ஆள்வார். அப்படி யாருமே பார்த்திராத... பார்க்கமுடியாதவராய் ஜெ இருந்தார். உடல்நலம் சரியின்றி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபிறகும் யாரும் பார்க்கமுடியாதவராகவே இறுதிவரை இருந்துவிட்டு மறைந்துவிட்டதுதான் பெருந்துயரம். அவரால் லாபமடைந்தவர்களுக்கு அல்ல, அவரை இழந்துவாடும் அவர் கட்சியின் உண்மைத் தொண்டர்களுக்கு ஜெயலலிதாவின் மரணம் பேரிழப்பு. 

ஆட்சிக்காலத்தில் அவ்வபோது ஜெ. கொடநாடு சென்று ஓய்வெடுக்கச் செல்வது வழக்கம். அப்போது அரசு நிர்வாகமும், தலைமைச் செயலகமும் அவர் திரும்பி வரும்வரை ஸ்தம்பித்துவிடும். இப்போது ஜெ. கொடநாட்டில் அல்ல, சென்னையில், தலைமைச் செயலகத்துக்கு மிக அருகில் மெரீனா கடற்கரையில் ஓய்வில் இருக்கிறார். இது நிரந்தர ஓய்வு. திரும்பி வரமுடியாத ஓய்வு. 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....