முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதல்வர் ஓபிஎஸ்


.மகேஷ்


இடது: டீக்கடை | வலது: ஓபிஎஸ் பூர்வீக வீடு
இடது: டீக்கடை | வலது: ஓபிஎஸ் பூர்வீக வீடு
தமிழ்நாட்டைத் தாண்டியும், “அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும்? சவால்களைச் சமாளிப்பாரா ஓபிஎஸ்?” என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ்ஸை வளர்த்தெடுத்த ஊர்க் காரர்கள் ‘இதுபற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்கள்?’ என்ற கேள்வியோடு பெரியகுளம் புறப்பட்டேன். பெரியகுளத்துக்காரர்கள் பேசப் பேச… ஓபிஎஸ் உருவம் பிரம்மாண்டம் ஆகிறது!
பெரியகுளம் மக்களிடமும், பன்னீர்செல்வத் தின் முன்னாள், இந்நாள் நண்பர்களிடமும் நான் பேசியதில் தெரிந்துகொண்ட மிக முக்கியமான முதல் விஷயம், பொதுச் சமூகம் நம்பிக்கொண்டிருக்கிறபடி ஓபிஎஸ்ஸின் இன்றைய வளர்ச்சிக்கு அவருடைய விசுவாசம் மட்டும் காரணமல்ல; தன்னை நம்பி வேலையை ஒப்படைப்பவர்களிடம், அதைக் கச்சிதமாக முடித்துக்கொடுக்கும் திறனும் பெற்றவர் அவர் என்பது. அடுத்த முக்கியமான புரிதல், தன் வாழ்க்கைப் பாதையின் குறுக்கே சிக்கலான சாலைச் சந்திப்புகள் தென்படும்போதெல்லாம் எந்தச் சாலையில் செல்வது வளர்ச்சிக்கு நல்லது என்பதைத் தேர்ந்தெடுப்பதிலும் அவர் புத்திசாலி என்பது.
இதயத்தில் இடம்பிடித்த பன்னீர்
ஓபிஎஸ் வளர்ச்சிக் கதையின் சுருக்கத்தை உணர்த்த ஓர் உதாரணத்தைச் சொன்னார்கள் அவர்கள். 1999 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா வீட்டுச் செல்லப்பிள்ளையான டி.டி.வி.தினகரன், பெரியகுளம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்காகத் தன் பூர்வீக வீட்டையே கட்சி அலுவலகமாக்கிக் கொடுத்தார். பிறகு, அவர் தங்குவதற்காக சொந்தத் தம்பியின் வீட்டையே கொடுத்தார் ஓபிஎஸ் என்பதெல்லாம் தெரிந்த செய்திதான். அந்த சந்தர்ப்பத்தில் தினகரனை உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் எல்லாம் பணம் காய்க்கும் மரமாகப் பயன்படுத்த, அந்த மரம் தன் வீட்டுக்கொல்லையிலேயே இருந்தபோதிலும்கூட, அதில் ஒரு இலையைக்கூடப் பறிக்க முயற்சிக் கவில்லையாம் ஓபிஎஸ். தேர்தல் முடிந்த கையோடு, செலவுக் கணக்கைப் பைசா சுத்தமாக ஒப்படைத்ததுடன், மீதிப் பணத்தையும் கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ். ‘இப்படி ஒரு மனுஷரா?’ என்று ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்திருக்கிறார் தினகரன். ‘பணிவுச் செல்வம்’ தோட்டத்தின் இதயத்தில் இடம்பிடித்தது இப்படித்தான்.
2001 சட்டசபைத் தேர்தலின்போது, வாய்ப்புக் கேட்டு தினகரனைப் பலரும் அணுகியிருக்கிறார்கள். தற்செயலாகத் தன்னைச் சந்தித்த பன்னீர்செல்வத்திடம், “நீங்க சீட் கேட்கலையா?” என்று தினகரன் கேட்க, “பெரிய பெரிய ஆளுங்கல்லாம் இருக்காங்கண்ணே” என்றிருக்கிறார் பணிவாக. “நீங்க பணம் கட்டுங்க.. நான் பார்த்துக்கிறேன்” என்றிருக்கிறார் தினகரன். அந்தத் தேர்தலில் அதிமுகவில் நிறையப் பேர் சீட் ‘வாங்கினார்கள்’. ஆனால், பன்னீர்செல்வத்துக்கோ சீட் ‘கொடுக்கப்பட்டது’. அந்த அளவுக்கு ஜெயலலிதாவிடம் பன்னீர் புகழைச் சொல்லியிருந்தார் தினகரன்.
புள்ளிக்கு ஆசைப்பட்ட நத்தம்
அமைச்சர்களின் இலாகா நியமனத்திலும் சசிகலா குடும்பத்தின் பங்கு இருந்தது. வருவாய், மதுவிலக்கு ஆயத்துறையை யாரை நம்பி ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்தபோது, மறு பேச்சில்லாமல் ஓபிஎஸ் கையில் ஒப்படைத்தது போயஸ் தோட்டம். மேலிடம் சொன்னபடி செயல்பட்டிருக்கிறார். டான்சி வழக்கு தீர்ப்பு காரணமாக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழக்க, அவசரமாக மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டிய சூழல் வந்தபோது, முதல்வர் ஆனார் பன்னீர்செல்வம்.
அந்தக் காலகட்டத்தில் 163 நாட்கள் முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தாலும், முதல்வரெனத் தனக்குத் தானேகூடச் அவர் சொல்லிக்கொள்ளாததற்குக் கிடைத்த பரிசு, 2014-ல் ஜெயலலிதா சிறை சென்றபோது மீண்டும் கிடைத்த முதல்வர் வாய்ப்பு. 225 நாட்கள் முதல்வராக இருந்த அவர் மீது, பின்னாளில் சொத்துக் குவித்ததாகப் புகார் எழுந்தது. அப்போதும் அவர் சாதுரியமாகவே செயல்பட்டிருக்கிறார். கிட்டிப்புள் விளையாட்டில், அடித்ததற்கு மேல் புள்ளி கேட்கிறபோது, எதிரணியினர் “ஆட்டமா; புள்ளியா?” என்று கேட்பார்கள். புள்ளியைக்கூடப் பிறகு எடுத்துக்கொள்ளலாம், ஆட்டத்தைத் தக்க வைத்தால் போதும் என்று திறமையான வீரர்கள் முடிவெடுப்பார்கள். அதே முடிவைத்தான் பன்னீர் எடுத்தார். புள்ளிக்கு ஆசைப்பட்டதால்தான் நத்தம் ஆட்டமிழந்தார் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.

பன்னீர்செல்வம் ஆன பேச்சிமுத்து
பன்னீர்செல்வம் எதிர்காலச் சவால்களையும் கனஜோராகக் கையாள்வார் என்கிறார்கள். அதெப்படி என்று கேட்டபோது அவர்கள் சொன்ன கதை இது.
இ.மா. ஓட்டக்காரத் தேவரின் மூத்த மகனான பேச்சிமுத்து (பன்னீர்செல்வத்தின் உண்மையான பெயர்) தந்தையின் வட்டித் தொழிலுடன், கூட்டுறவுப் பால் பண்ணை ஒன்றையும் நடத்தினார். அதில் மிஞ்சிய பாலை என்ன செய்யலாம் என்று யோசித்த அவர், தன் நண்பர் விஜயனுடன் சேர்ந்து வீட்டருகிலேயே பி.வி.கேன்டீன் என்ற பெயரில் டீக்கடை தொடங்கினார். அதிமுகவில் சாதாரண தொண்டராக இருந்தவரை, தீவிர அரசியலுக்கு அழைத்து வந்தவர் கம்பம் செல்வேந்திரன். 1984 தேர்தலின்போது, ஆண்டிபட்டி தொகுதியில் எம்ஜிஆர் போட்டியிட, அந்த ஆண்டிபட்டியையும் உள்ளடக்கிய பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் கம்பம் செல்வேந்திரன். ஆண்டிபட்டி தொகுதியை மட்டும் கணக்குப்போட்டுப் பார்த்து, எம்ஜிஆரைவிட அதிக வாக்குகள் வாங்கிய செல்வேந்திரன் என்று அப்போது பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அந்தளவுக்கு உள்ளூரில் செல்வாக்குடன் வலம் வந்தவர் செல்வேந்திரன்.
ஒரு கூட்டத்தில் பேச்சிமுத்துவைப் பாராட்டிப் பேசிய கம்பம் செல்வேந்திரன், “தம்பி பேச்சிமுத்து, திராவிட இயக்கத்தின் வேரான, நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான சர் பி.ட்டி.பன்னீர்செல்வத்தைப் போன்றவர்” என்று போகிற போக்கில் புகழ்ந்துதள்ள, புளகாங்கிதம் அடைந்த பேச்சிமுத்து, பின்னாளில் அதன் பொருட்டு மாற்றிக்கொண்ட பெயர்தானாம் பன்னீர்செல்வம். 1989-ல் அவரை அதிமுக ஜானகி அணியின் பெரியகுளம் நகரச் செயலாளராக்கி இருக்கிறார் செல்வேந்திரன். அதே செல்வேந்திரன், ஜெயலலிதா தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று திமுகவுக்குப் போனார். கண்மூடித்தனமான விசுவாசி என்றால், செல்வேந்திரன் பின் அல்லவா ஓபிஎஸ் சென்றிருக்க வேண்டும்? ஆனால், எது உறுதியான பிடி என்பதை அறிந்தே அவர் செயல்பட்டிருக்கிறார்!
1999-ல் அதே பெரியகுளம் தொகுதியில், அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை தினகரன் களமிறங்கியபோது, எதிர்த்துப் போட்டியிட்டவர் கம்பம் செல்வேந்திரன். திமுக தரப்பில் யார் யாரைப் பணத்தால் அடித்தால், செல்வேந்திரனை வீழ்த்த முடியும் என்று தினகரனுக்கு வியூகம் அமைத்துக்கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ்! அரசியலில் ஆசான் என்ன, நட்பு என்ன?
“முதல் அமைச்சர் எங்கள் ஊர்க்காரர் என்பது சந்தோஷம். ஆனால், அவரது தம்பியும், மகனும் உள்ளூரில் மட்டுமல்ல துறையிலும் கூட புகுந்து விளையாடுகிறார்கள். குடும்பத்தினரைக் கட்டுப்படுத்தாவிட்டால், பதவியைத் தக்க வைப்பது கஷ்டம்” என்ற வருத்தமும் உள்ளூர் மக்களுக்கு இருக்கிறது.
பாஜக வளையத்துக்குள் அதிமுக சென்றுவிடுமோ, மோடி வளையத்துக்குள் சசிகலா இருக்கிறாரோ என்றெல்லாம் பேசுபவர்களுக்கும் பெரியகுளத்துக்காரர்கள் ஒரு விஷயம் சொன்னார்கள். “ஓபிஎஸ் எல்லா இடங்களிலும் பணிபவர் கிடையாது; எங்கே பணிந்தால் அதிகாரம் கிடைக்கும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்” என்கிறார்கள். இதை அவர்கள் சொன்னபோது, ஜெயலலிதா உடலுக்கு, மோடி அஞ்சலி செலுத்த வருகையில் ஓபிஎஸ் பணிவுச்செல்வமாக மாறியது மனக்கண்ணில் வந்துபோனது. ஜெயலலிதாவைத் தவிர, இதுநாள் வரை வேறு எவருக்கும் அவர் இவ்வளவு பணிவாக வணக்கம் சொல்லி நான் பார்த்ததில்லை. ஒருமுறை சென்னை விமான நிலையத்தில், தன் அமைச்சரவை சகாக்களைப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வரைப் பவ்யமாக வணங்கிய ஓபிஎஸ், சிங்குக்கோ கம்பீரமாக நெஞ்சை உயர்த்தி வணக்கம் சொன்னார்.
ஓபிஎஸ்ஸை வளர்த்துவிட்ட செல்வேந்திரன், சேடப்பட்டி முத்தையா யாரும் இப்போது அதிமுகவில் இல்லை. தினகரன் இன்று வரை எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், ஓபிஎஸ்ஸோ ஜெயலலிதாவின் இடத்தில் இருக்கிறார் என்றால், அது வெறும் அதிர்ஷ்டம் மட்டும் அல்ல என்று தமிழ்ச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்!
“அதிமுக வரலாற்றில் கட்சித்தலைமை வேறு, ஆட்சித்தலைமை வேறு என்ற நிலை வந்ததேயில்லை. இப்போது வந்திருக்கிறது. அதை சமாளிப்பதற்கான திறன் பெற்றவரா ஓ.பி.எஸ்?” என்ற கேள்வியை பெரியகுளத்துக்காரர்களிடம் கேட்டேன். “முதல்வர் பதவியைத் தொடர அவர் அனுமதிக்கப்படுவாரா?” என்று திருப்பிக்கேட்டார்கள். ஆமால்ல?!

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...