முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதல்வர் ஓபிஎஸ்


.மகேஷ்


இடது: டீக்கடை | வலது: ஓபிஎஸ் பூர்வீக வீடு
இடது: டீக்கடை | வலது: ஓபிஎஸ் பூர்வீக வீடு
தமிழ்நாட்டைத் தாண்டியும், “அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும்? சவால்களைச் சமாளிப்பாரா ஓபிஎஸ்?” என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ்ஸை வளர்த்தெடுத்த ஊர்க் காரர்கள் ‘இதுபற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்கள்?’ என்ற கேள்வியோடு பெரியகுளம் புறப்பட்டேன். பெரியகுளத்துக்காரர்கள் பேசப் பேச… ஓபிஎஸ் உருவம் பிரம்மாண்டம் ஆகிறது!
பெரியகுளம் மக்களிடமும், பன்னீர்செல்வத் தின் முன்னாள், இந்நாள் நண்பர்களிடமும் நான் பேசியதில் தெரிந்துகொண்ட மிக முக்கியமான முதல் விஷயம், பொதுச் சமூகம் நம்பிக்கொண்டிருக்கிறபடி ஓபிஎஸ்ஸின் இன்றைய வளர்ச்சிக்கு அவருடைய விசுவாசம் மட்டும் காரணமல்ல; தன்னை நம்பி வேலையை ஒப்படைப்பவர்களிடம், அதைக் கச்சிதமாக முடித்துக்கொடுக்கும் திறனும் பெற்றவர் அவர் என்பது. அடுத்த முக்கியமான புரிதல், தன் வாழ்க்கைப் பாதையின் குறுக்கே சிக்கலான சாலைச் சந்திப்புகள் தென்படும்போதெல்லாம் எந்தச் சாலையில் செல்வது வளர்ச்சிக்கு நல்லது என்பதைத் தேர்ந்தெடுப்பதிலும் அவர் புத்திசாலி என்பது.
இதயத்தில் இடம்பிடித்த பன்னீர்
ஓபிஎஸ் வளர்ச்சிக் கதையின் சுருக்கத்தை உணர்த்த ஓர் உதாரணத்தைச் சொன்னார்கள் அவர்கள். 1999 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா வீட்டுச் செல்லப்பிள்ளையான டி.டி.வி.தினகரன், பெரியகுளம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்காகத் தன் பூர்வீக வீட்டையே கட்சி அலுவலகமாக்கிக் கொடுத்தார். பிறகு, அவர் தங்குவதற்காக சொந்தத் தம்பியின் வீட்டையே கொடுத்தார் ஓபிஎஸ் என்பதெல்லாம் தெரிந்த செய்திதான். அந்த சந்தர்ப்பத்தில் தினகரனை உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் எல்லாம் பணம் காய்க்கும் மரமாகப் பயன்படுத்த, அந்த மரம் தன் வீட்டுக்கொல்லையிலேயே இருந்தபோதிலும்கூட, அதில் ஒரு இலையைக்கூடப் பறிக்க முயற்சிக் கவில்லையாம் ஓபிஎஸ். தேர்தல் முடிந்த கையோடு, செலவுக் கணக்கைப் பைசா சுத்தமாக ஒப்படைத்ததுடன், மீதிப் பணத்தையும் கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ். ‘இப்படி ஒரு மனுஷரா?’ என்று ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்திருக்கிறார் தினகரன். ‘பணிவுச் செல்வம்’ தோட்டத்தின் இதயத்தில் இடம்பிடித்தது இப்படித்தான்.
2001 சட்டசபைத் தேர்தலின்போது, வாய்ப்புக் கேட்டு தினகரனைப் பலரும் அணுகியிருக்கிறார்கள். தற்செயலாகத் தன்னைச் சந்தித்த பன்னீர்செல்வத்திடம், “நீங்க சீட் கேட்கலையா?” என்று தினகரன் கேட்க, “பெரிய பெரிய ஆளுங்கல்லாம் இருக்காங்கண்ணே” என்றிருக்கிறார் பணிவாக. “நீங்க பணம் கட்டுங்க.. நான் பார்த்துக்கிறேன்” என்றிருக்கிறார் தினகரன். அந்தத் தேர்தலில் அதிமுகவில் நிறையப் பேர் சீட் ‘வாங்கினார்கள்’. ஆனால், பன்னீர்செல்வத்துக்கோ சீட் ‘கொடுக்கப்பட்டது’. அந்த அளவுக்கு ஜெயலலிதாவிடம் பன்னீர் புகழைச் சொல்லியிருந்தார் தினகரன்.
புள்ளிக்கு ஆசைப்பட்ட நத்தம்
அமைச்சர்களின் இலாகா நியமனத்திலும் சசிகலா குடும்பத்தின் பங்கு இருந்தது. வருவாய், மதுவிலக்கு ஆயத்துறையை யாரை நம்பி ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்தபோது, மறு பேச்சில்லாமல் ஓபிஎஸ் கையில் ஒப்படைத்தது போயஸ் தோட்டம். மேலிடம் சொன்னபடி செயல்பட்டிருக்கிறார். டான்சி வழக்கு தீர்ப்பு காரணமாக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழக்க, அவசரமாக மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டிய சூழல் வந்தபோது, முதல்வர் ஆனார் பன்னீர்செல்வம்.
அந்தக் காலகட்டத்தில் 163 நாட்கள் முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தாலும், முதல்வரெனத் தனக்குத் தானேகூடச் அவர் சொல்லிக்கொள்ளாததற்குக் கிடைத்த பரிசு, 2014-ல் ஜெயலலிதா சிறை சென்றபோது மீண்டும் கிடைத்த முதல்வர் வாய்ப்பு. 225 நாட்கள் முதல்வராக இருந்த அவர் மீது, பின்னாளில் சொத்துக் குவித்ததாகப் புகார் எழுந்தது. அப்போதும் அவர் சாதுரியமாகவே செயல்பட்டிருக்கிறார். கிட்டிப்புள் விளையாட்டில், அடித்ததற்கு மேல் புள்ளி கேட்கிறபோது, எதிரணியினர் “ஆட்டமா; புள்ளியா?” என்று கேட்பார்கள். புள்ளியைக்கூடப் பிறகு எடுத்துக்கொள்ளலாம், ஆட்டத்தைத் தக்க வைத்தால் போதும் என்று திறமையான வீரர்கள் முடிவெடுப்பார்கள். அதே முடிவைத்தான் பன்னீர் எடுத்தார். புள்ளிக்கு ஆசைப்பட்டதால்தான் நத்தம் ஆட்டமிழந்தார் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.

பன்னீர்செல்வம் ஆன பேச்சிமுத்து
பன்னீர்செல்வம் எதிர்காலச் சவால்களையும் கனஜோராகக் கையாள்வார் என்கிறார்கள். அதெப்படி என்று கேட்டபோது அவர்கள் சொன்ன கதை இது.
இ.மா. ஓட்டக்காரத் தேவரின் மூத்த மகனான பேச்சிமுத்து (பன்னீர்செல்வத்தின் உண்மையான பெயர்) தந்தையின் வட்டித் தொழிலுடன், கூட்டுறவுப் பால் பண்ணை ஒன்றையும் நடத்தினார். அதில் மிஞ்சிய பாலை என்ன செய்யலாம் என்று யோசித்த அவர், தன் நண்பர் விஜயனுடன் சேர்ந்து வீட்டருகிலேயே பி.வி.கேன்டீன் என்ற பெயரில் டீக்கடை தொடங்கினார். அதிமுகவில் சாதாரண தொண்டராக இருந்தவரை, தீவிர அரசியலுக்கு அழைத்து வந்தவர் கம்பம் செல்வேந்திரன். 1984 தேர்தலின்போது, ஆண்டிபட்டி தொகுதியில் எம்ஜிஆர் போட்டியிட, அந்த ஆண்டிபட்டியையும் உள்ளடக்கிய பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் கம்பம் செல்வேந்திரன். ஆண்டிபட்டி தொகுதியை மட்டும் கணக்குப்போட்டுப் பார்த்து, எம்ஜிஆரைவிட அதிக வாக்குகள் வாங்கிய செல்வேந்திரன் என்று அப்போது பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அந்தளவுக்கு உள்ளூரில் செல்வாக்குடன் வலம் வந்தவர் செல்வேந்திரன்.
ஒரு கூட்டத்தில் பேச்சிமுத்துவைப் பாராட்டிப் பேசிய கம்பம் செல்வேந்திரன், “தம்பி பேச்சிமுத்து, திராவிட இயக்கத்தின் வேரான, நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான சர் பி.ட்டி.பன்னீர்செல்வத்தைப் போன்றவர்” என்று போகிற போக்கில் புகழ்ந்துதள்ள, புளகாங்கிதம் அடைந்த பேச்சிமுத்து, பின்னாளில் அதன் பொருட்டு மாற்றிக்கொண்ட பெயர்தானாம் பன்னீர்செல்வம். 1989-ல் அவரை அதிமுக ஜானகி அணியின் பெரியகுளம் நகரச் செயலாளராக்கி இருக்கிறார் செல்வேந்திரன். அதே செல்வேந்திரன், ஜெயலலிதா தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று திமுகவுக்குப் போனார். கண்மூடித்தனமான விசுவாசி என்றால், செல்வேந்திரன் பின் அல்லவா ஓபிஎஸ் சென்றிருக்க வேண்டும்? ஆனால், எது உறுதியான பிடி என்பதை அறிந்தே அவர் செயல்பட்டிருக்கிறார்!
1999-ல் அதே பெரியகுளம் தொகுதியில், அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை தினகரன் களமிறங்கியபோது, எதிர்த்துப் போட்டியிட்டவர் கம்பம் செல்வேந்திரன். திமுக தரப்பில் யார் யாரைப் பணத்தால் அடித்தால், செல்வேந்திரனை வீழ்த்த முடியும் என்று தினகரனுக்கு வியூகம் அமைத்துக்கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ்! அரசியலில் ஆசான் என்ன, நட்பு என்ன?
“முதல் அமைச்சர் எங்கள் ஊர்க்காரர் என்பது சந்தோஷம். ஆனால், அவரது தம்பியும், மகனும் உள்ளூரில் மட்டுமல்ல துறையிலும் கூட புகுந்து விளையாடுகிறார்கள். குடும்பத்தினரைக் கட்டுப்படுத்தாவிட்டால், பதவியைத் தக்க வைப்பது கஷ்டம்” என்ற வருத்தமும் உள்ளூர் மக்களுக்கு இருக்கிறது.
பாஜக வளையத்துக்குள் அதிமுக சென்றுவிடுமோ, மோடி வளையத்துக்குள் சசிகலா இருக்கிறாரோ என்றெல்லாம் பேசுபவர்களுக்கும் பெரியகுளத்துக்காரர்கள் ஒரு விஷயம் சொன்னார்கள். “ஓபிஎஸ் எல்லா இடங்களிலும் பணிபவர் கிடையாது; எங்கே பணிந்தால் அதிகாரம் கிடைக்கும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்” என்கிறார்கள். இதை அவர்கள் சொன்னபோது, ஜெயலலிதா உடலுக்கு, மோடி அஞ்சலி செலுத்த வருகையில் ஓபிஎஸ் பணிவுச்செல்வமாக மாறியது மனக்கண்ணில் வந்துபோனது. ஜெயலலிதாவைத் தவிர, இதுநாள் வரை வேறு எவருக்கும் அவர் இவ்வளவு பணிவாக வணக்கம் சொல்லி நான் பார்த்ததில்லை. ஒருமுறை சென்னை விமான நிலையத்தில், தன் அமைச்சரவை சகாக்களைப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வரைப் பவ்யமாக வணங்கிய ஓபிஎஸ், சிங்குக்கோ கம்பீரமாக நெஞ்சை உயர்த்தி வணக்கம் சொன்னார்.
ஓபிஎஸ்ஸை வளர்த்துவிட்ட செல்வேந்திரன், சேடப்பட்டி முத்தையா யாரும் இப்போது அதிமுகவில் இல்லை. தினகரன் இன்று வரை எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், ஓபிஎஸ்ஸோ ஜெயலலிதாவின் இடத்தில் இருக்கிறார் என்றால், அது வெறும் அதிர்ஷ்டம் மட்டும் அல்ல என்று தமிழ்ச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்!
“அதிமுக வரலாற்றில் கட்சித்தலைமை வேறு, ஆட்சித்தலைமை வேறு என்ற நிலை வந்ததேயில்லை. இப்போது வந்திருக்கிறது. அதை சமாளிப்பதற்கான திறன் பெற்றவரா ஓ.பி.எஸ்?” என்ற கேள்வியை பெரியகுளத்துக்காரர்களிடம் கேட்டேன். “முதல்வர் பதவியைத் தொடர அவர் அனுமதிக்கப்படுவாரா?” என்று திருப்பிக்கேட்டார்கள். ஆமால்ல?!

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...