முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்ன ஆகும் சொத்துக்குவிப்பு வழக்கு ?

அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி அனுமதிக்கப்படும் வரை, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் எப்போது வெளியிடும் என்று மக்களிடம் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, மீதம் உள்ள குற்றவாளிகளான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை கிடைக்குமா அல்லது அந்த வழக்கின் ஒரே பொது ஊழியர் மற்றும் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால், குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்படுவார்களா என்று வாதம் நடைபெறுகிறது.
jaya-sasi
மூத்த வழக்கறிஞர்கள் இந்த விவகாரத்தில் பிளவுபட்டே இருக்கின்றனர்.
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற 1991 முதல் 1996 வரையிலான காலத்தில் 66.5 கோடி வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளார் என்று திமுக அரசு வழக்கு தொடர்ந்தது.   இந்த வழக்கு முதலில் சென்னை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.   2001ம் ஆண்டு, ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பிறகு, பெரும்பாலான சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறியதால், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், இவ்வழக்கை தமிழகத்தை விட்டு மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்.   உச்சநீதிமன்றம் வழக்கை பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது. பிறகும் கடுமையாக தாமதம் செய்யப்பட்டு, ஒரு வழியாக செப்டம்பர் 2014ல் சிறப்பு நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா அனைத்து குற்றவாளிகளுக்கும் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
அவர் தனது தீர்ப்பில் லஞ்ச ஒழிப்பு சட்டம் பிரிவு 13 (1) (இ) மற்றும் 13 (2)ன் கீழ், முதல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் என்று உத்தரவிட்டார். கூட்டு சதியில் ஈடுபட்டதற்காக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120 பி யின் கீழ், ஜெயலலிதாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதித்தார்.   இதர குற்றவாளிகளான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு குற்றவாளிக்கு உதவிபுரிந்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 109ன் கீழ் தலா நான்காண்டு சிறை தண்டனை, தலா பத்து கோடி அபராதம் விதித்தார். கூட்டு சதியில் ஈடுபட்டதற்காக இவர்கள் மூவருக்கும் ஆறு மாத சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் செய்த மேல் முறையீட்டின் முடிவில், அனைத்து குற்றவாளிகளையும் விடுவித்து, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை அடுத்தே, இடைத்தேர்தலில் நின்ற ஜெயலலிதா ஆர்.கேநகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானார்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசும், திமுகவும் மேல் முறையீட்டுக்கு சென்றன. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவராய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜுன் 7ம் தேதி, இவ்வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த சூழலில் தான், ஜெயலலிதா இறந்துவிட்டதால் சசிகலா உள்ளிட்டோருக்கு தண்டனை கிடைக்குமா கிடைக்காதா என்று விவாதம் நடைபெறுகிறது.
இதேபோன்ற சூழலில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. டெல்லி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமை மேலாளர் பிகே.சமால் மற்றும் மூன்று தனியார் நிறுவன உரிமையாளர்கள் கூட்டு சதியில் ஈடுபட்டு போலியான ஆவணங்கள் மூலம் வங்கிக்கு 3.50 கோடி நஷ்டம் ஏற்படுத்தினர் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை நடைபெறுகையில் சமால் இறந்துபோகிறார். இதர குற்றவாளிகள், வழக்கின் ஒரே பொது ஊழியர் இறந்துவிட்டதால் தங்கள் மீது வழக்கை நடத்த முடியாது என்றும், விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.  உயர் நீதிமன்றமோ, “இவ்வழக்கில் பொது ஊழியர் இருப்பதால் லஞ்ச ஒழிப்பு சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பொது ஊழியர் இறந்துவிட்டதால், சிறப்பு நீதிமன்றம் அந்த பிரிவுகளை நீக்கிவிட்டு குற்றப்பத்திரிகை பதிவு செய்ய வேண்டும்” என்று உத்தரவிடுகிறது.
இதை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றம் சென்றது. அந்த வழக்கில்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர், ‘ஒரு வழக்கில் இருக்கும் பொதுஊழியர், வழக்கு விசாரணை முடியும் தருவாயில் இறந்து போவதன் காரணமாக ஒரு வழக்கை முழுமையாக ரத்து செய்வது என்பது, லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் நோக்கத்தையே தோல்வியடைய செய்யும். இது ஊழலை எதிர்த்து போராடுவதற்கு, லஞ்சத்தை ஒழிப்பதற்கு உருவான சட்டம். இதன் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுவிட்டால், வழக்கை ரத்து செய்ய வேண்டியதில்லை. இறந்து போன பொது ஊழியரை தவிர்த்து மீதம் உள்ளோர் மீது விசாரணை தொடரலாம்’ என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு, விசாரணையை மேற்கொண்ட கீழ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விவகாரங்கள் தொடர்பான வழக்கு. ஜெயலலிதாவின் வழக்கு அப்படிப்பட்டதல்ல. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மீதான விசாரணை நடைபெற்று, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு. ஜுன் 7 அன்றே தீர்ப்பு ஒத்திவைத்துள்ள நிலையில் ஆறு மாதங்கள் கழித்து நடந்த ஜெயலலிதாவின் மரணத்தை கவனத்தில் கொள்ளாமல்தான் உச்சநீதின்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்.
மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் அனுமதித்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை விதித்தால், ஜெயலலிதாவால் சிறை செல்ல முடியாது என்பதைத் தவிர வழக்கில் எந்த மாற்றமும் நிகழாது. ஜெயலலிதா இறந்துவிட்டாலும், அவருடைய சொத்துக்களை விற்று, அதில் வரும் பணத்திலிருந்து 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  ஜெயலலிதா இறந்தாலும் இந்த அபராதத்தை செலுத்தியே தீர வேண்டும் என்றே சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கர்நாடக சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, “ஜெயலலிதா இறந்தாலும், சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான வழக்கு உயிரோடுதான் இருக்கிறது.  லஞ்ச ஒழிப்பு சட்டம் தவிர, கூட்டுச் சதியில் ஈடுபட்டது, மற்றும் பொது ஊழியர் சொத்து சேர்க்க உடந்தையாக இருந்தது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை தனியானவை.  ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு மட்டுமே ரத்து செய்யப்படும்.    வாத பிரதி வாதங்கள் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய முடியாது.  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியே ஆகவேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நீண்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதை இந்தியாவே உற்று நோக்குகிறது.
நன்றி
நம்ம அடையாளம்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

தாய்மை- பெண்மை- etc.

சமீபத்தில் இங்கு மார்பகம், தாய்ப்பால் முதலிய பெண்கள் சார் விஷயங்கள் பேசப்பட்டன; சரி commentsஇல் ஏதாவது முன்னேற்றம் நடந்துள் ளதா என்று பார்த்தால் எழுதிய statusஇல் இருக்கின்ற maturity commentsஇல் இல்லை. ஆக பெண்கள், cleavage, bra, feeding மற்றும் குழந்தை வளர்ப்பு என ஆங்காங்கே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கலாம் எனத் தோன்றியது. முதலில் cleavage பற்றி பார்த்து?! விடலாம்; இந்திய சினிமாவின் கவர்ச்சியின் பெரும்பகுதி இந்த cleavageஐ நம்பிதான் இருக்கின்றது. Cleavage பெரிய அதிசயமெல்லாம் இல்லை. Cleavage உருவாக்க makeup எல்லாம் வந்துவிட்டது. ஆண்களுக்கே shave செய்துவிட்டு foundation cream இரண்டு shadeகளில் பயன்படுத்தி சற்றே shades பூசி compact apply செய்து cleavage உருவாக்க முடியும். கிட்டத்தட்ட 3D body art என்று சொல்லலாம். உற்றுப் பார்த்தால்கூட கண்டறிய முடியாது. இவ்வளவுதான் cleavage கவர்ச்சி. அடுத்து brassiere என்பதும் இன்று வரை ஒரு ரகசியப் பொருள்போல ஒருசில பெண்களால் கையாளப்படுகின்றது. இதற்கும் தமிழ் சினிமா ஒரு காரணம்; Bra என்பது உடை என்பதைத் தாண்டி கிளுகிளுப்பான பொருளாகக் கருதப்பட...